நான் பார்த்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று சப்தம் - நானி

இயக்குநர் அறிவழகன் இயக்கிய 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நான் பார்த்த மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று சப்தம்  - நானி
Published on

2009 ஆம் ஆண்டு இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஈரம்.' இந்தப் படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆதி மக்கள் மனதை வென்றார். இயக்குநர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது.

அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' உள்ளிட்ட திரைப்படங்களை அறிவழகன் இயக்கினார். 'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி - அறிவழகன் கூட்டணி தற்பொழுது மீண்டும் இணைந்துள்ளது.

அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் இயக்கிய 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வருகிற பிப்ரவரி 28-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

படத்தை பார்த்த நானி படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர் கூறீயதாவது " டெக்னிக்கலாகவும், தொழில்நுட்ப ரீதியாக இப்படம் தரமாக வந்துள்ளது. ஹாரர் திரைப்படமாக இருந்தாலும் படத்தின் எமோஷனல் கனெக்ட் மிக நன்றாக நொர்க் அவுட் ஆகியுள்ளது. கண்டிப்பாக இப்படத்தை திரையரங்கிள் காண வேண்டும்.

நான் பார்த்த மிகச்சிறந்த திரைப்படங்களுள் சப்தம் திரைப்படம் ஒன்றாகும்" என கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com