என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அந்த அணியை 1992 இல் உலகக்கோப்பை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
    • சகோதரி அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவரை சந்தித்துள்ளார்.

    நியூசிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வியடைந்த பிறகு பாகிஸ்தான் அணி இப்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025லிருந்து வெளியேறியுள்ளது.

    இதனால் பாகிஸ்தான் அணி அனைத்து தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன் பங்குக்கு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அந்த அணியை 1992 இல் உலகக்கோப்பை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

    பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியை தொடங்கிய அவர் 2018 இல் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் ஊழல் வழக்கில் 2023 இல் கைதானார். கடந்த மாதம் பாக். நீதிமன்றம் அவருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இவ்வழக்கில் இம்ரானின் மனைவி புஷ்ரா பீவிக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இலிருந்து வெளியேறியபின் இம்ரான் கான் சகோதரி அலீமா கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அவரை சந்தித்துள்ளார்.

    தங்களது சந்திப்பு குறித்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அலீமா, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு இம்ரான் கான் மிகுந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார். அவர்கள் சிறையில் அந்த ஆட்டத்தை பார்த்தார்.

    முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு பிடித்தவர்களுக்குக் கொடுக்கப்படும்போது கிரிக்கெட் அழிந்துபோகும் என்று இம்ரான் வருத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வியின் செயல்பாடுகள் குறித்தும் இம்ரான் விமர்சித்து  கேள்வி எழுப்பியதாக அலிமா கூறினார். 

     

    • இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை.
    • பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    2025-26 கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அரசு ஜில்லா பரிஷத், மண்டல் பரிஷத், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் தெலுங்கு கற்பிப்பதை கட்டாயமாக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா (பள்ளிகளில் தெலுங்கு கட்டாயக் கற்பித்தல் மற்றும் கற்றல்) சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது.

    இருப்பினும், முந்தைய பி.ஆர்.எஸ். அரசு பல்வேறு காரணங்களால் இந்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதற்காக நிர்வாகங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மற்றும் பிற வாரியங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு தெலுங்கு கற்பிக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் ரேவந்த் ரெட்டி, தேர்வுகளை நடத்துவதற்கு 'எளிய தெலுங்கு' பாடப் புத்தகமான 'வெண்ணெலா'வைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். 'எளிய தெலுங்கு' பாடப்புத்தகம் தெலுங்கு தாய்மொழியாக இல்லாத மாணவர்களுக்கும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரியங்களின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர்.
    • த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. சுமார் 300 தொண்டர்கள் அரங்கிற்குள் அமர்ந்திருக்க த.வெ.க. தலைவர் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்தார்.

    விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.

    முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதன்பின், 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை விஜய் கண்டு களித்தார்.

    இதனை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்புக்கும், நலனுக்கும் எதிராக நடைபெற்று வரும் பெருந்துயரை கண்டும் காணாத பொறுப்பற்ற தன்மை.

    * விமர்சனத்திற்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரல்களை அடக்கும் அரசியல் கோழைத்தனம்.

    * வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் சமூக சீர்கெடுகளை எதிர்க்க அஞ்ச கூடிய நயவஞ்சகம்.

    * திறனற்ற ஆட்சி நிர்வாகம், சாமானியர்களுக்கு எதிரான வன்முறைகளை அரசியல் நோக்கத்துடன் ஊக்குவிக்கும் வகையில் செயலற்று கிடப்பது.

    * ஒரு சிலரின் குடும்பத்தின் பேராசை, பசிக்காக நடக்கக்கூடிய திட்டமிடப்பட்ட உழைப்பு சுரண்டலும், இயற்கை சுரண்டலும் மாறி மாறி திரைமறைவில் ரகசியமாக உறவு வைத்திருக்ககூடியவர்களை கரப்ஷன் கபட காரர்களை Get out சொல்லி கையெழுத்து இயக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரங்கிற்குள் போதிய இருக்கை வசதிகள் செய்யப்படவில்லை.
    • சுமார் 2000 பேர் பங்கேற்கும் அரங்கத்திற்குள் 3000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் பங்கேற்க காலையில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் விழா நடைபெறும் பகுதியை சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனிடையே, அரங்கிற்குள் போதிய இருக்கை வசதிகள் செய்யப்படவில்லை, காலை உணவு வழங்கப்படவில்லை, சுமார் 2000 பேர் பங்கேற்கும் அரங்கத்திற்குள் 3000 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதற்கிடையே பாஸ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படாததால் அரங்க நுழைவு வாயில் முன்பு பலர் காத்திருந்தனர்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை பவுன்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பவுன்சர் தாக்கியதில் நெஞ்சு வலிப்பதாக செய்தியாளர் கூறியதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    விழா அரங்கிற்குள் செய்தியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், வீடியோ, புகைப்படக்காரர்கள் வெளியில் காத்திருக்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற அனுமதிக்கும் "EB-5" இமிக்ரன்ட் விசாவை ஒழிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
    • கோல்டன் கார்டு திட்டத்தின்மூலம் அமெரிக்காவின் கடன் சுமை குறையும் என்பது அவரது கருத்து.

    அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெளிநாட்டில் இருந்து அங்கு குடியேறுபவர்கள் மீது கடுமையான போக்கை கொண்டுள்ளார்.

    ஆவணமின்றி சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் மறுபுறம் தொழில்நுபட்பத்துறைக்கு திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வேண்டும் என்பதால் HB1 வேலை விசாவை டிரம்ப் ஆதரித்து பேசினார்.

    இதற்கிடையே அமெரிக்காவில் தொழில் மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற அனுமதிக்கும் "EB-5" இமிக்ரன்ட் விசாவை ஒழிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

    EB-5 விசாவுக்கு பதிலாக அமெரிக்காவுக்கு குடியேறும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பணக்கார வெளிநாட்டவருக்காக டிரம்ப் தங்க அட்டை திட்டத்தை அறிவித்துள்ளார். கோல்டன் கார்டு எனப்படும் இது நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்டு -ஐ ஒத்தது என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து பேட்டி அளித்த டிரம்ப், "நாங்கள் ஒரு தங்க அட்டையை விற்கப் போகிறோம். அந்த அட்டைக்கு 5 மில்லியன் டாலர்(சுமார் 43 கோடி ரூபாய்) விலையை நிர்ணயம் செய்யப் போகிறோம்" என்று கூறினார். இந்த கோல்டன் கார்டு திட்டத்தின்மூலம் அமெரிக்காவின் கடன் சுமை குறையும் என்பது அவரது கருத்து.

    டிரம்ப் அரசின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், தங்க அட்டை உண்மையில் ஒரு வகையான கிரீன் கார்டாக இருக்கும்.

    டிரம்பின் இந்த புதிய ''கோல்டன் கார்டு' திட்டம் தற்போதுள்ள EB-5 திட்டத்தை மாற்றப் போகிறது. இதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்க வணிகங்களில் முதலீடு செய்வதன் மூலம் கிரீன் கார்டு பயன்களை பெற முடியும். 'கோல்டன் கார்டு' மூலம் பெறப்படும் பணம் நேரடியாக அரசாங்கத்திற்குச் செல்லும் என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
    • பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.

    முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.



    அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் '2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சியமைக்க போகுது' கண்டா வரச்சொல்லுங்க பாடல் புகழ் பாடகி கிடாக்குழி மாரியம்மாள் பாடலை பாடினார். இதனை தொடர்ந்து விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மாரியம்மாளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த விஜய் புத்தகத்தை பரிசாக வழங்கி குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    இதனிடையே, பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் போதிய இருக்கை வசதி, காலை உணவு வழங்கப்படவில்லை என பல சலசலப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர்.
    • விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. சுமார் 300 தொண்டர்கள் அரங்கிற்குள் அமர்ந்திருக்க த.வெ.க. தலைவர் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்தார்.

    விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது.

    முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து விழா மேடையில் இருந்து விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கீழே இறங்கினர்.

    அதன்பின் அங்கு வைக்கப்பட்டு இருந்த பலகையில், 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை விஜய் கண்டு களித்தார். 




    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிய தொடங்கினர்.
    • கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க காலையில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிய தொடங்கினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    விழாவில் பங்கேற்பதற்காக சுமார் 3000 பேர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு காலை ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டதுடன் மதிய உணவில் 20 வகையான உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சுமார் 8.45 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட த.வெ.க. தலைவர் விஜய் 9.30 மணியளில் விழா நடைபெறும் ஓட்டலுக்கு வருகை தந்தார். அங்கு விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனை தொடர்ந்து விழா நடைபெறும் அரங்கத்திற்குள் விஜய் சென்றார். 



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 20-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி புதிய உச்சத்தை தொட்டது.

    அதன் பின்னர், விலை குறைந்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 55-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 440-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,050-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,400-க்கும் விற்பனையாகிறது.



    கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,600

    24-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,440

    23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360

    21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-02-2025- ஒரு கிராம் ரூ.108

    24-02-2025- ஒரு கிராம் ரூ.108

    23-02-2025- ஒரு கிராம் ரூ.108

    22-02-2025- ஒரு கிராம் ரூ.108

    21-02-2025- ஒரு கிராம் ரூ.109

    • த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
    • 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பங்கேற்கிறார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளதை அடுத்து, விஜய் வீட்டில் மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    விஜய் வீட்டில் செருப்புடன் மர்ம பொருளை வீசிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி செருப்பு வீசியவர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த விஜய் ரசிகர் என்று தகவல் வெளியாகி உள்ளது. போதையில் விஜய் வீட்டிற்குள் செருப்பை வீசியதாக தகவல். கைதானவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • வருகிற 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    • அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    சென்னை :

    தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து வருகிற 5-ந்தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து மார்ச் 5-ந்தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1.திராவிட முன்னேற்றக் கழகம்

    2.இந்திய தேசிய காங்கிரஸ்

    3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

    4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

    5.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

    6.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

    7.விடுதலை சிறுத்தைகள் கட்சி

    8.மனிதநேய மக்கள் கட்சி

    9.அகில இந்திய பார்வர்டு பிளாக்

    10.தமிழக வாழ்வுரிமை கட்சி

    11.மக்கள் நீதி மய்யம்

    12.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

    13.ஆதி தமிழர் பேரவை

    14.முக்குலத்தோர் புலிப்படை

    15.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

    16.மக்கள் விடுதலை கட்சி

    17.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

    18.பாட்டாளி மக்கள் கட்சி

    19.தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)

    20.தேசிய முற்போக்கு திராவிட கழகம்

    21.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

    22.பாரதிய ஜனதா கட்சி

    23.தமிழக வெற்றிக் கழகம்

    24.நாம் தமிழர் கட்சி

    25.புதிய தமிழகம்

    26.புரட்சி பாரதம் கட்சி

    27.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

    28.புதிய நீதிக் கட்சி

    29.இந்திய ஜனநாயகக் கட்சி

    30.மனிதநேய ஜனநாயகக் கட்சி

    31.இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி

    32.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்

    33.பெருந்தலைவர் மக்கள் கட்சி

    34.அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்

    35.பசும்பொன் தேசிய கழகம்

    36.அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்

    37.தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி

    38.கலப்பை மக்கள் இயக்கம்

    39.பகுஜன் சமாஜ் கட்சி

    40.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை

    41.ஆம் ஆத்மி கட்சி

    42.சமதா கட்சி

    43.தமிழ்ப்புலிகள் கட்சி

    44.கொங்கு இளைஞர் பேரவை

    45.இந்திய குடியரசு கட்சி

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    ×