என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • முதலில் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 161 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின.

    இன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. பென் மெக்டர்மார்ட் 42 ரன்னும், காலெப் ஜுவல் 40 ரன்னும், மிட்செல் ஒவன் 36 ரன்னும், டிம் டேவிட் 25 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜோர்டான் சில்க் அரை சதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குர்தீஸ் பாட்டர்சன் 48 ரன் எடுத்து அவுட்டானார். லச்சின் ஷா 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்த சிட்னி சிக்சர்ஸ் அணி 24-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் சிட்னி தண்டர் அல்லது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் மோதுகிறது.

    • 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா
    • 45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற டி20 தொடராக இந்தியன் பிரீமியர் லீக் உள்ளது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிகளவு ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது.

    இதுவரை பல அணிகள் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ள நிலையில், பெங்களூரு அணி இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் பெங்களூரு அணி வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது, எதிரணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் வெற்றிகனியை மட்டும் ஆர்சிபியால் எட்டிப் பறிக்க முடியாமல் உள்ளது.

    இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரிலாவது ஆர்சிபி வெற்றி பெற வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் ஆர்சிபி ஜெர்சியுடன் புனித நீராடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி ஒவ்வொரு ஆர்சிபி ரசிகரின் ஏக்கத்தையும் தூண்டிவிட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும். 40 கோடி பேர் வரை இந்த ஆண்டு கும்பமேளாவில் பங்கேற்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

    • வெறும் 2.5 ஓவரில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியது.
    • போட்டியின் ஆட்ட நாயகியாக வைஷ்ணவி சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

    கோலாலம்பூர்:

    ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மலேசியா, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை விரைவில் பறிகொடுத்தது. அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

    இறுதியில், மலேசியா அணி 14.3 ஓவரில் 31 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுடன் சேர்த்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    அடுத்து ஆடிய இந்திய அணி 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    5 விக்கெட் வீழ்த்திய வைஷ்ணவி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

    • இங்கிலாந்துடன் மோதிய 24 டி20 ஆட்டத்தில் இந்தியா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • இரு அணிகளும் கடைசியாக மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (ஜனவரி 22-ம் தேதி) நடைபெற இருக்க்கிறது.

    இந்தியா இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் நாளை மோதுவது 25-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 24 டி20 ஆட்டத்தில் இந்தியா 13 போட்டிகளிலும் இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

    இங்கிலாந்துக்கு எதிரான 25 ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை தக்க வைக்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி விவரம்:

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரெல், முகமது சமி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் அணியில் உள்ளனர்.

    • இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை அடுத்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
    • தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை அடுத்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த நிகழ்வில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில், இந்திய அணியின் ஜெர்சியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் பெயரை அச்சிட பிசிசிஐ மறுத்ததாக கூறப்படுகிறது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பி.சி.சி.ஐ கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவருகிறது, இது விளையாட்டுக்கு நல்லதல்ல. அவர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்துவிட்டனர். தொடக்க விழாவிற்கு தங்கள் கேப்டனை (பாகிஸ்தானுக்கு) அனுப்ப அவர்கள் விரும்பவில்லை. இப்போது அவர்கள் தங்கள் ஜெர்சியில் நாட்டின் (பாகிஸ்தான்) பெயரை அச்சிட விரும்பவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) இதை அனுமதிக்காது, பாகிஸ்தானை ஆதரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்தத் தொடர் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
    • 15 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிப்பு.

    ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (ஜனவரி 22-ம் தேதி) நடைபெற இருக்க்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    கடைசியாக கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியை இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாடும்.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி விவரம்:

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரெல், முகமது சமி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் அணியில் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக அறிவித்து இருக்கலாம்.
    • துணை கேப்டன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ.-இன் இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களிடையே பேசு பொருளாகியுள்ளது. சிலர் இது சரியான முடிவு என்றும், சிலர் ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக அறிவித்து இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். அப்போது, சுப்மன் கில் தேர்வு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "தற்போதைய அணியில் வேறு யாரை துணை கேப்டனாக அறிவிக்கலாம் என்று யோசித்து பாருங்கள். சுப்மன் கில் நியமனம் சரி அல்லது தவறு என்று என்னால் எந்த முடிவையும் கூற முடியாது. ஆனால், அவர் தான் கடந்த சீரிசிலும் துணை கேப்டனாக இருந்தார் என்ற விளக்கம் சரியாக தெரிகிறது."

    "நான் தவறாகவும் இருக்கலாம், ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் கூட துணை கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, யார் அணியின் தலைவராக இருக்கலாம் என்பதை பொருத்து நிர்வாகம் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்."

    "ரிஷப் பண்ட் மற்றும் கேல்.எல். ராகுல் என இருவரில் யார் வேண்டுமானாலும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் அவர்கள் இந்த பொறுப்பை ஆடும் லெவனில் உறுதி செய்யப்பட்ட வீரரிடம் துணை கேப்டன்சி பதவியை வழங்கியுள்ளார்கள். எதிர்காலத்தில் சுப்மன் கில் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டால், அவர் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவிடம் உதவிகளை பெறலாம்," என்று கூறினார். 

    • வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க கோரிக்கைகள் எழுந்தன.
    • ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதாக தெரிவித்தார்.

    நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது பல்வேறு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் கோரிக்கைகள் எழுந்தன.

    இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதும் இடம்பெற்று இருந்தது. இதையடுத்து, இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதாக தெரிவித்தார்.

    அதன்படி, ரோகித் சர்மா மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறார். இந்த வரிசையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார். இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ள நிலையில், விராட் கோலி டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.

    வருகிற ஜனவரி 30-ம் தேதி ரெயில்வே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்க உள்ளார். முன்னதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்று தகவல் வெளியானது.

    பி.சி.சி.ஐ. புதிய விதிமுறையை அடுத்து இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஐ.பி.எல். 2025 தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்.
    • தோனி ஓய்வை அறிவிப்பார் என்று கூறினர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்.

    எம்.எஸ். தோனி பேட்டிங் பயிற்சி செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரோடு கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. பலரும் விரைவில் எம்.எஸ். தோனி ஓய்வை அறிவிப்பார் என்று கூறினர்.

    கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியை அன்கேப்டு வீரராக தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதன் மூலம் எம்.எஸ். தோனி ஐ.பி.எல். 2025 தொடரில் விளையாடுவது உறுதியானது. இது எம்.எஸ். தோனி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

    இந்த நிலையில், எம்.எஸ். தோனி ஐ.பி.எல். 2025 தொடருக்கான பயிற்சியை துவங்கி இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. மார்ச் மாதம் ஐ.பி.எல். தொடர் துவங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் வரவிருக்கும் சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
    • மும்பை அணியை அனுபவம் மிக்க அஜிங்க்யா ரகானே வழிநடத்துகிறார்.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளையாடுகிறார். ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போட்டி வருகிற ஜனவரி 23-ம் தேதி மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    இந்தப் போட்டியில் மும்பை அணியை அனுபவம் மிக்க அஜிங்க்யா ரகானே வழிநடத்துகிறார். ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவது பற்றிய முடிவை ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த தொடர் என கடைசி எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி ஒரு போட்டியை சமன் செய்தது.

    எட்டு போட்டிகளிலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை பி.சி.சி.ஐ. கடந்த வாரம் தான் கட்டாயமாக்கியது. 

    • இந்திய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது.
    • சுமார் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிறகும் அணியில் இடம் கிடைக்காமல் போனது அதிர்ச்சியளிக்கிறது.

    இந்தியாவின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஐபிஎல் 2025 ஏலத்தில் விலைபோகாத சோகத்தை வெளிப்படுத்தி உள்ளார். மிகுந்த மன உளைச்சலும், ஏமாற்றமும் அடைந்ததாக உமேஷ் கூறியுள்ளார்.

    ஐபிஎல் 2025 க்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. இதில் அனைத்து அணிகளும் பெரும் தொகையை செலவழித்தன.

    இந்திய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆனால், ஐபிஎல்லில் பல போட்டிகளில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற உமேஷ் யாதவை வாங்குபவர் கிடைக்கவில்லை.

    உமேஷ் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்காக விளையாடியுள்ளார். இப்போது இந்த 37 வயதான உமேஷ் தனது மனக்கஷ்டத்தை குறித்து பேசியுள்ளார்.

    இன்சைட் ஸ்போர்ட்ஸிடம் பேசிய அவர், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். நான் 15 ஆண்டுகளாக இந்த லீக்கில் விளையாடி வருகிறேன். இந்த ஐபிஎல் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

    நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? நான் மோசமாக உணர்கிறேன். சுமார் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிறகும் அணியில் இடம் கிடைக்காமல் போனது அதிர்ச்சியளிக்கிறது.

    இது உரிமையாளர்கள் முடிவை பொறுத்தது, மற்றும் ஏலத்தில் எனது பெயர் தாமதமாக வந்ததும் ஒரு காரணம். தாமதமாக பெயர் வந்ததால் என்னை வாங்க அவர்களிடம் பணம் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதையும் மீறி ஏதோ நடந்துள்ளது.

    நான் மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறேன். இருக்கட்டும் பரவாயில்லை. யாருடைய முடிவையும் என்னால் மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    உமேஷ் 15 ஆண்டுகளில் 148 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். . என்னால் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும் என நினைக்கும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தனது ஓய்வு கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.

    • ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்.
    • புதிய சீசன் துவங்கும் முன் அந்த அணியில் இருந்து விலகினார்.

    ஐ.பி.எல். 2025 சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்-ஐ கடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தின் போது லக்னோ அணி ரூ. 27 கோடிக்கு எடுத்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.

    ரிஷப் பண்ட்-ஐ தங்கள் அணியில் தக்க வைக்க டெல்லி அணி ரைட்-டு-மேட்ச் முறையை பயன்படுத்த முயற்சித்தது. எனினும், லக்னோ அணி ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுத்தது. கடந்த 2021, 2022 மற்றும் 2024 ஐ.பி.எல். சீசன்களில் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில், புதிய சீசன் துவங்கும் முன் ரிஷப் பண்ட் அந்த அணியில் இருந்து விலகினார்.

    கே.எல். ராகுல், நிக்கோலஸ் பூரன் மற்றும் க்ரூணல் பாண்டியா வரிசையில், ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நான்காவது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். "ரிஷப் பண்ட் அதிக மதிப்புமிக்க வீரர் என்பதை தாண்டி அவர் ஐ.பி.எல்.-இல் சிறந்த வீரராகவும் இருப்பார்," என்று லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்தார்.

    ஐ.பி.எல். 2022 மற்றும் 2023 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல், மிக மோசமான நெட் ரன்-ரேட் அடிப்படையில் ஏழாவது இடம் பிடித்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்-ஐ தொடர்ந்து ரிஷப் பண்ட் கேப்டன் ஆகியிருக்கும் இரண்டாவது ஐ.பி.எல். அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இருக்கும். 

    ×