என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • முதலில் ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து பேட் செய்த டெல்லி அணி 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. ஹேலி மேத்யூஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் தலா 22 ரன்கள் எடுத்தனர். நட் சீவர் பிரண்ட் 18, அமெலியா கெர் 17 ரன் எடுத்தனர்.

    டெல்லி அணி சார்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் இருவரும்

    அதிரடியாக ஆடினர்.

    முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாலி வர்மா 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜெமிமாவுடன் மேக் லேனிங் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். மேக் லேனிங் அரை சதம் கடந்து அசத்தினார்.

    இறுதியில், டெல்லி அணி 14.3 ஓவரில் 124 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

    • இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
    • இதன்மூலம் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    லாகூர்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. செடிகுல்லா அடல் 85 ரன்னிலும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 67 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் துவார்ஷியஸ் 3 விக்கெட்டும், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 274 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது. தொடக்கமே ஆப்கானிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கால் 2 கேட்ச்சுகளை தவறவிட்டனர். மேத்யூஸ் ஷாட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் அரை சதம் எடுத்தார். அப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    • மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது.
    • டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பெங்களூரு:

    5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா- ஹேலி மேத்யூஸ் ஆகியோர் களமிறங்கினர். யாஸ்திகா பாட்டியா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மேத்யூஸ் 22 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து வந்த வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி நாட் ஸ்கைவர்-பிரண்ட் 18, ஹர்மன்ப்ரீத் கவுர் 22, அமெலியா கெர் 17, சஜீவன் சஜனா 5, கமலினி 1, சமஸ்கிருத குப்தா 3 என வெளியேறினார்.

    இறுதியில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிதான் அவர் கேப்டனாக செயல்படும் கடைசி போட்டியாகும்.
    • இங்கிலாந்தின் அடுத்த கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    லண்டன்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் - பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

    அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடைந்த தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள் + டி20) செயல்பட்டு வந்த பட்லர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிதான் அவர் கேப்டன் பதவி வகிக்கும் கடைசி போட்டி என கூறப்படுகிறது. கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகியதை அடுத்து இங்கிலாந்தின் அடுத்த கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • நான் என்றுமே இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு பேசமாட்டேன்.
    • ஏனென்றால் அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் பல மாற்றங்கள் இருக்கின்றது.

    சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தன்னுடைய 51-வது சர்வதேச ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சச்சினை விட விராட் கோலி தான் சிறந்த வீரர் என பலரும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வந்தனர்.

    ஆனால் இதற்கு ஒரு சில கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு வெவ்வேறு காலத்தில் விளையாடிய வீரர்களை ஒப்பிடுவது தவறு என்று வலியுறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் கோலியை சச்சினுடன் ஒப்பிடுவதை தவறு என்று கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் என்றுமே இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு பேசமாட்டேன். ஏனென்றால் அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் பல மாற்றங்கள் இருக்கின்றது. விளையாட்டில் உள்ள விதிகள் மாறி இருக்கிறது. ஆடுகளம் மாறி இருக்கிறது. எதிரணி வீரர்கள் மாறி இருக்கிறார்கள்.

    எனவே இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது என்பது மிகவும் கடினம். இதை நான் ஒரு பலம் குன்றிய விஷயமாகவே பார்க்கின்றேன். நமது ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும்தான் இரண்டு வெவ்வேறு காலத்தில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். நீங்கள் என்றாவது ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர்கள் ரிக்கி பாண்டிங்கையும், கிரேக் சேப்பலையும் ஒப்பிட்டு பேசி பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள்.

    தற்போது விளையாடும் வீரர்களின் திறமையை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். அப்படி இருக்கும் போது நாம் மட்டும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும். எப்போது பார்த்தாலும் இது போல் ஒப்பிட்டு நாம் நேரத்தை செலவிடுகின்றோம்.

    என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

    • கேரள அணி தரப்பில் சச்சின் பேபி 98 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • 37 ரன்களுடன் விதர்பா அணி முன்னிலையில் உள்ளது.

    ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேரளா அணி தரப்பில் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நெடுமான்குழி பாசில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    அதன்பின் முதல் இன்னிங்சைத் தொடர்ந்த கேரளா அணியில் ரோஹன் குன்னுமால் ரன்கள் ஏதுமின்றியும், அக்ஷய் சந்த்ரன் 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஹ்மத் இம்ரானும் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

    இதனால் அந்த அணி 2-நாள் ஆட்டநேர முடிவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.

    இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆதித்யா சர்வதே 66 ரன்களுடனும், கேப்டன் சச்சின் பேபி 7 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆதித்யா சர்வதே 10 பவுண்டரிகளுடன் 79 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.

    அதன்பின் களமிறங்கிய சல்மான் நிசார் 21 ரன்களையும், முகமது அசாருதீன் 34 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் சச்சின் பேபி 10 பவுண்டரிகளுடன் 98 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

    அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜலஜ் சக்சேனா 26 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் கேரளா அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களில் ஆல் அவுட்டானது.

    விதர்பா அணி தரப்பில் தர்ஷன் நல்கண்டே, ஹர்ஷ் தூபே, பார்த் ரேகாடே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து 37 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி நாளை 4-ம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

    • ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்தார்.
    • ஆஸ்திரேலிய தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 3 விக்கெட்டும் ஸ்பான்சர், ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ்- இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். குர்பாஸ் முதல் ஓவரிலேயே 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து சத்ரானுடன் செடிகுல்லா அடல் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய சத்ரான் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹ்மத் ஷா 12, ஹஷ்மதுல்லா ஷாஹிதி 20 என வெளியேறினர்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செடிகுல்லா அடல் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இவர்களை தொடர்ந்து நபி 1, நைப் 4 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனையடுத்து ரஷித் கான், ஓமர்சாய் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ரஷித் கான் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ஓமர்சாய் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 3 விக்கெட்டும் ஸ்பான்சர், ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • கோலி தான் கிரிக்கெட்டின் உண்மையான கிங் என்றும் பாபர் அசாம் கிடையாது எனவும் சோயப் அக்தர், ஹபீஸ் கூறினர்.
    • விராட் கோலியுடன் மேட்ச் வின்னர்களாக தோனி, ரோகித் சர்மா இருந்தார்கள்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

    அந்தத் தோல்விக்கு நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. அதனால் விராட் கோலி தான் கிரிக்கெட்டின் உண்மையான கிங் ஆனால் பாபர் அசாம் ஃபிராடு என சோயப் அக்தர், ஹபீஸ் போன்ற நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

    இந்நிலையில் பாபர் அசாம் விராட் கோலி கிடையாது தான், அதற்காக இப்படி விமர்சிக்கும் அளவுக்கு பாபர் அசாம் மோசமானவர் கிடையாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 சதங்களை அடித்துள்ள பாபர் 26 அரை சதங்களுடன் 44.5 சராசரியை கொண்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 19 சதங்கள் 32 அரை சதங்கள் அடித்துள்ள அவர் 56.72 சராசரியைக் கொண்டுள்ளார். டி20-யில் 129 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் 41 சராசரியைக் கொண்டுள்ளார்.

    இப்போது கடந்த 20 வருடங்களில் பாகிஸ்தானுக்காக விளையாடி பாபர் அசாமின் இந்தப் புள்ளி விவரங்களை முந்திய வீரர் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நீங்கள் கோலி அல்லது வில்லியம்சனாக இருக்க வேண்டியதில்லை. பாபர் விராட் கோலி கிடையாது. ஆனால் பாபர் நாம் கொண்டிருக்கும் சிறந்த பேட்ஸ்மேன். தற்போது ரன்கள் அடிக்க முடியவில்லையெனில் அவருக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். அவர் நன்றாக விளையாடும் போது நீங்கள் விரும்பவில்லை என்றாலும் உலகுடன் சேர்ந்து பாராட்ட வேண்டும்.

    விராட் கோலி கூட அவ்வப்போது ஃபார்மை இழக்கிறார். ஆனாலும் முக்கியமான போட்டிகளில் 50 ரன்களை அடித்து விடுகிறார். விராட் கோலி தன்னுடன் யாரைக் கொண்டிருந்தார்? ரோகித் சர்மா, எம்எஸ் தோனி. அந்த வகையில் விராட் கோலியுடன் மேட்ச் வின்னர் இருந்தார்கள். ஆனால் பாபர் அசாமுடன் பாகிஸ்தான் அணியில் யார் இருக்கிறார்கள்? அதாவது பாபர் அசாமுக்கு ஆதரவு கொடுக்கும் அளவுக்கு பாகிஸ்தான் அணியில் நல்ல வீரர்கள் இல்லை.

    என்று சல்மான் கூறினார்.

    • 9 ஆண்டுகளாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
    • கடந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இந்நிலையில் 9 சீசன் முடிவடைந்த நிலையில் 10-வது சீசன் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் மற்றும் 2 முறை சாம்பியனான லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதுகிறது.

    இந்த தொடர் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் மார்ச் 23-ல் தொடங்கி மே 25 வரை நடக்கிறது. கிட்டத்தட்ட இரு தொடர்களும் ஒரு நேரத்தில் மோதிகொள்ளும் வகையில் போட்டியின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு தொடை பகுதில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் வருகிற 2-ந் தேதி விளையாடவுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேச மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.

    மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதிலிருந்து எந்த இரு இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    அதேசமயம் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் வருகிற 2-ந் தேதி விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்திருப்பதாகவும், இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதன்படி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு தொடை பகுதில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அணியின் பயிற்சி அமர்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை. இதனால் காயத்தால் அவதிப்பட்டு ரோகித் சர்மா முழு உடற்தகுதியை எட்டாத நிலையில், நியூசிலாந்து போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அரையிறுதி போட்டியில் விளையாட வைக்க பிசிசிஐ திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மாவுக்கு பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அல்லது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும். அதேசமயம் சுப்மன் கில்லுடன் இணைந்து கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ஒரே பிட்ச்சில் எல்லா போட்டிகளையும் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமான சூழல்தான்.
    • இதைப் புரிந்துகொள்ள, ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. பி பிரிவில் இங்கிலாந்து அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. மற்ற 3 அணிகளான ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்காக போராடி வருகின்றனர்.

    சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பிற அணிகள் வெவ்வேறு மைதானங்களில் விளையாடி வரும் நிலையில், இந்திய அணி தனது போட்டிகள் அனைத்தையும் துபாயில் மட்டுமே விளையாடுகிறது.

    இதனால் இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலர் குற்றம் சாட்டி வந்தனர். இந்திய அணி மட்டுமே ஒரே இடத்தில் இருந்து விளையாடி வருகின்றனர். மற்ற அணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று விளையாடி வருகின்றனர். இதனால் இந்திய அணிக்கு நிறைய சாதகமான விஷயங்கள் உள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா வீரரான ராஸி வாண்டர் டுசன் இதே குற்றச்சாட்டை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரே ஹோட்டலில் தங்கி, ஒரே இடத்தில் பயிற்சி எடுத்து, ஒரே மைதானத்தில், ஒரே பிட்ச்சில் எல்லா போட்டிகளையும் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமான சூழல்தான். இதைப் புரிந்துகொள்ள, ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

    என ராஸி வாண்டர் டுசன் கூறினார்.

    • ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
    • பி பிரிவில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்து இங்கிலாந்து அணி வெளியேறியது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற் றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் தொடரில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேற்றப்பட்டன. பி பிரிவில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்து இங்கிலாந்து அணி வெளியேறியது.

    இந்நிலையில், இந்த தொடரின் 10-வது லீக் ஆட்டம் லாகூரில் இன்று நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது போல் ஹஸ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ×