என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து இங்கிலாந்து 179 ரன்னில் சுருண்டது.
    • தென்ஆப்பிரிக்கா 29.1 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் "பி" பிரிவு கடைசி லீக் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பில் சால்ட், டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சால்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேமி ஸ்மித் டக்-அவுடடில் வெளியேறினார்.

    அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தது. டக்கெட் 24 ரன்னிலும், ஜோ ரூட் 37 ரன்னிலும், ஹாரி ப்ரூக் 19 ரன்னிலும், பட்லர் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து 38.2 ஓவரில் 179 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்கோ யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். மகாராஜ் 2 விக்கெட்டும் லுங்கி நிகிடி, ரபாடா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்டப்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரிக்கெல்டன் 27 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் தென்ஆப்பிரிக்கா 47 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு வான் டர் டுஸ்சன் உடன் ஹென்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவரும் அரைசதம் விளாசினர்.

    வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் கிளாசன் 56 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டுஸ்சன் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார்.

    29.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டுஸ்சன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா "பி" பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 2-வது இடம் பிடித்துள்ளது.

    ஏ பிரிவில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இதில் தோல்வியடையும் அணியடன் தென்ஆப்பிரிக்கா அரையிறுதியில் மோதும்.

    • இரண்டு போட்டிகள் டாஸ் சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.
    • பாக்ஸ் மற்றும் பிசிபி கேலரி டிக்கெட்டுக்கான பணம் திரும்ப வழங்கப்படாது.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இந்த போட்டிக்கான டிக்கெட்டின் முழுத் தொகையும் ரசிகர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் பாக்ஸ் மற்றும் பிசிபி கேலரி ஆகியவற்றிற்கான டிக்கெட் பணம் திருமப் வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

    மார்ச் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துளளது.

    மார்ச் 25-ந்தேதி ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. மழைக் காரணமாக டாஸ் சுண்டப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.

    27-ந்தேதி பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த போட்டியும் மழைக்காரணமாக டாஸ் சுண்டப்படாமல் கைவிடப்பட்டது.

    நேற்று (பிப்ரவரி 28-ந்தேதி) ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 273 ரன்கள் சேர்த்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 12.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருக்கும் போது மழை குறுக்கீட்டது. அத்துடன் போட்டி கைவிடப்பட்டது.

    • தென் ஆப்பிரிக்காவை 207 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
    • இங்கிலாந்து அணியே 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆப்கானிஸ்தானி அரையிறுதி கனவு கலைந்தது.

    லாகூர்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அனி திணறியது. இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்நிலையில் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் 2-வது அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறியுள்ளது.

    இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 207 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் என கூறப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியே 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆப்கானிஸ்தானி அரையிறுதி கனவு கலைந்தது. 

    • இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோரூட் 37 ரன்கள் எடுத்தார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    லாகூர்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட், டக்கெட் களமிறங்கினர். தொடக்கமே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. சால்ட் 8 ரன்னிலும் ஸ்மித் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். டக்கெட் 24 ரன்னிலும் ஹரி ப்ரூக் 19 ரன்னிலும் ரூட் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதனை தொடர்ந்து லிவிங்ஸ்டன் 9, ஓவர்டேன் 11, ஆர்ச்சர் 25, பட்லர் 21 என வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இறுதிபோட்டியில் எந்த 2 அணிகள் மோதும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
    • நிச்சயமாக ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி கிட்டதட்ட அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்த நிலையில் எந்த இரண்டு அணிகள் இறுதிபோட்டியில் மோதும் என்ற கேள்விக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் எனவும் இதில் 1 ரன்னில் இந்தியா வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நிச்சயமாக ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தியா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும். நான் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இந்தியா தான் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி வெல்லும்.

    இந்தியா தான் இப்போது உலகின் சிறந்த ஒருநாள் அணியாக உள்ளது. நம்பர் ஒன் ஒருநாள் அணியாகவும் உள்ளது. எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் மோதும். அதில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

    மேலும் ரோகித் சர்மா நல்ல பார்மில் இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ரோஹித் சர்மா இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறி இருக்கிறார்.

    • ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது.
    • நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் விளையாடி வருகிறது. அங்கே வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக நாளை நியூசிலாந்து அணியை இந்தியா சந்திக்கிறது.

    முன்னதாக துபாயில் விளையாடுவதால் இந்திய அணிக்கு பெரிய சாதகம் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    \இந்நிலையில் துபாயில் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகம் இருக்கிறது என்றாலும் அதைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை என்று நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இது பற்றி பிரேஸ்வெல் பேசியது பின்வருமாறு.

    அது முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதைப் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. சொல்லப்போனால் அது ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும் விஷயமாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு வித்தியாசமான மைதானத்திற்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை கண்டறிவது சுவாரசியமாகும்.

    எனவே இந்த ஆவலான சூழ்நிலைகளில் கற்றுக்கொண்டு நன்றாக முயற்சித்து விளையாடுவதைத் தவிர்த்து வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எனவே துபாயில் எங்கள் முன்னே இருக்கும் சூழ்நிலைகளில் நாங்கள் தொடர்ந்து அசத்துவோம் என்று நம்புகிறோம்.

    இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பெற்ற தன்னம்பிக்கையுடன் இங்கே வந்துள்ளோம். மேலும் ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது. எனவே நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்.

    ஐசிசி தொடரில் இந்தியாவை எதிர்கொள்வது கண்டிப்பாக மிகவும் பெரியப் போட்டி. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்பாக நாங்கள் நிறைய வேகத்தை எடுத்துச் செல்ல முடியும்.

    என்று பிரேஸ்வெல் கூறினார். 

    • குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை.
    • குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

    லாகூர்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் - பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

    அந்த பிரிவிலிருந்து ஆஸ்திரலியா அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. 'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    • சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி லீக் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து நாளை மோதுகிறது.
    • இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.

    மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. அதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் நாளை விளையாடவுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதே போல் முகமது ஷமியும் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் சுப்மன் கில் களமிறங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரோகித் சர்மாவுக்கு பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும் முகமது சமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இரு அணிகளுமே 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
    • இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், வங்காளதேசம் வெளியேற்றப்பட்டன.

    பி பிரிவில் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து வெளியேறியது 2-வது அணியாக தகுதி பெறுவதற்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் (தலா 3 புள்ளிகள்) உள்ளன.

    இதில் தென் ஆப்பிரிக்காவுக்கே அதிகமான வாய்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்திடம் தோற்றாலும் பாதிப்பு இருக்காது. ஏனென்றால் அந்த அணி நிகர ரன் ரேட்டில் 2.140 ஆக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் ரன் ரேட்-0.990 ஆகும்.

    இந்தப் போட்டி தொடரின் கடைசி லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்தையும், 2- வது போட்டியில் பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. துபாயில் மட்டுமே விளையாடும் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா ஆடமாட்டார். தொடைநார் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட மாட்டார். அணியின் துணை கேப்டனான சுப்மன்கில் கேப்டனாக பணியாற்றுவார். ரோகித்சர்மா இடத்தில் ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படும். சுப்மன்கில்லும், கே.எல். ராகுலும் தொடக்க வரிசையில் ஆடுவார்கள்.

    இதேபோல வேகப்பந்து வீரர் முகமது ஷமியும் முழு உடல்தகுதியுடன் இல்லை. அவரது இடத்தில் அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார்.

    இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரும் பந்து வீச்சில் ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் 60 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2-வது பேட்டிங் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது.

    அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் டாம் லாதம், ரச்சின் ரவீந்தர், வில் யங், பிலிப்ஸ் ஆகியோரும் பந்து வீச்சில் பிரேஸ்செல், வில்லியம் ரூர்கே, கேப்டன் சான்ட்னெர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுகிறது. 119-வது போட்டியாகும். இதுவரை நடந்த 118 ஆட்டங்களில் இந்தியா 60-ல் நியூசிலாந்தில் 50-ல் வெற்றி பெற்றார். ஒரு போட்டி டை ஆனது. 7 ஆட்டம் முடிவு இல்லை.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்னை முதன் முதலில் எடுத்தது அற்புதமான உணர்வாகும்.
    • கவாஸ்கர் இல்லாத இந்தியாவை வீழ்த்த விரும்பவில்லை என்று இம்ரான் கூறினார்.

    புதுடெல்லி:

    டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் 10 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை படைத்தவர் சுனில் கவாஸ்கர். 1987-ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த டெஸ்டில் அவர் இந்த மைல்கல்லை தொட்டார்.

    கவாஸ்கருக்கு பிறகு 14 வீரர்கள் 10 ஆயிரம் ரன்னை எடுத்தார்கள். டெண்டுல்கர் (15,921 ரன்), ரிக்கி பாண்டிங் (13,378), காலிஸ் (13,289), ராகுல் டிராவிட் (13,288), ஜோரூட் (12,972), குக் (12,472), சங்ககரா (12,400), லாரா (11,953), சந்தர்பால் (11,867), ஜெய வர்த்தனே (11,814), ஆலன் பார்டர் (11,174), ஸ்டீவ் வாக் (10,271) யூனுஸ்கான் (10,099) ஆகியோர் 10 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்த வீரர்கள் ஆவார்கள்.

    கவாஸ்கர் 1971 முதல் 1987 வரையிலான காலக் கட்டத்தில் விளையாடி 10,122 ரன் (125 டெஸ்ட்)எடுத்தார். டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் அவர் 14-வது இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் 10 ஆயிரம் ரன் சாதனையை தான் எடுப்பதற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் தான் காரணம் என்று தற்போது டெலிவிசன் வர்ணனையாளராக இருக்கும் கவாஸ்கர் தெரிவித்து இருந்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்னை முதன் முதலில் எடுத்தது அற்புதமான உணர்வாகும். கிரிக்கெட்டை தொடங்கியபோது இதை சாதிப்பேன் என்று நினைக்கவில்லை. நான் இந்த மைல்கல்லை தொட முடிந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் இம்ரான்கான் தான்.

    பாகிஸ்தான் இங்கு வருவதற்கு முன்பாக இங்கிலாந்தில் நானும், இம்ரான்கானும் உணவு விடுதிக்குச் சென்றோம். அப்போது , இந்தத் தொடர்தான் எனக்கு கடைசி தொடர், ஓய்வு அறிவிக்கப்போகிறேன் என்றேன். இதை சொல்லும் போது 1986-ம் ஆண்டாகும். ஆனால், இம்ரான் இதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

    பாகிஸ்தான் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது. இந்தியாவை இந்திய மண்ணில் நீங்கள் களத்தில் இருக்கும்போது வீழ்த்த வேண்டும் என்று என்னிடம் கூறினார். அதாவது கவாஸ்கர் இல்லாத இந்தியாவை வீழ்த்த விரும்பவில்லை என்று இம்ரான் கூறினார்.

    இம்ரான் சொன்னது போலவே அறிவிப்பு வந்தது. அப்படி அறிவிப்பு வராமல் நான் அந்தத் தொடரில் ஓய்வு பெற்று இருந்தால் நான் 9200-300 ரன்களில் தான் முடிந்திருப்பேன். அதனால்தான் 10 ஆயிரம் ரன்கள் மைல் கல்லை எட்ட முடிந்தது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.

    • இங்கிலாந்தை வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
    • இங்கிலாந்து அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி

    விட்டனர். பி பிரிவில் ஆஸ்திரேலிய அணி அதிகாரப்பூர்வமாக முன்னேறி விட்டது. 2-வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்கா அணி முன்னேற அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.

    'பி' பிரிவில் நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். 3 புள்ளியுடன் உள்ள தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் சிக்கலின்றி அரைஇறுதிக்கு முன்னேறும். சறுக்கினாலும் மோசமாக தோற்கக்கூடாது. ரன்ரேட் குறையாமல் இருந்தால் போதும்.

    ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தது 300 ரன்கள் எடுத்தால், தென் ஆப்பிரிக்காவை குறைந்தது 207 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இரண்டாவது பேட்டிங் செய்தால், 11.1 ஓவர்களுக்குள் 300+ இலக்கை துரத்த வேண்டும். இந்த அதியசம் நடந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளது.

    ஆனால் இங்கிலாந்தை வீழ்த்தி 5 புள்ளியுடன் தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பதில் தீவிரம் காட்டும். ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. கேப்டனாக ஜோஸ் பட்லரின் கடைசி ஆட்டம் இது என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய முயற்சிப்பார். 

    • இதுநாள் வரைக்கும் ஒவ்வொரு சீசனுக்கும் ரொம்ப வெறியாக பயிற்சி செய்துள்ளேன்.
    • சென்னை அணி தனது முதல் லீக்கில் மும்பை இந்தியன்சை வருகிற 23-ந் தேதி சந்திக்கிறது.

    சென்னை:

    18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9¾ கோடிக்கு சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினை வாங்கியது. 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்சுக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் பிறகு புனே சூப்பர் ெஜயன்ட்ஸ், டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு தாவினார்.

    10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சொந்த ஊர் அணியில் ஐக்கியமாகியுள்ள 38 வயதான அஸ்வின் தற்போது சக வீரர்களுடன் இணைந்து சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் அளித்த பேட்டியில் 'உண்மையில் இது வித்தியாசமான உணர்வாக இருக்கிறது.

    நான் இங்கிருந்து வெளியேறி பல ஆண்டுகள் ஆகி விட்டது அல்லவா? மீண்டும் அதே அணிக்கு திரும்பி வந்துள்ளேன். ஆனால் வீரர்கள் எல்லாம் அதே வீரர்கள் தான். இதுநாள் வரைக்கும் ஒவ்வொரு சீசனுக்கும் ரொம்ப வெறியாக பயிற்சி செய்துள்ளேன். ஆனால் இப்போது திடீரென இங்கு (சென்னை) வந்த உடனே மிகவும் சீனியர் வீரராக உணர்கிறேன். ஓ.கே. இதுவும் நல்ல உணர்வு தான். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்' என்றார்.

    சென்னை அணி தனது முதல் லீக்கில் மும்பை இந்தியன்சை வருகிற 23-ந் தேதி சந்திக்கிறது.

    ×