என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • நான் கிரிக்கெட்டை விரும்பி விளையாடி வருகிறேன். பேட்டிங்கை விரும்புகிறேன்.
    • கடுமையாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

    இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அபாரமாக விளையாடினார். கடினமான துபாய் ஆடுகளத்தில் பவுண்டரி, சிக்ஸ் இல்லாமல் ஒரு ரன், இரண்டு ரன்களாக ஓடி ரன்கள் குவித்தார்.

    அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியது குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    நான் கிரிக்கெட்டை விரும்பி விளையாடி வருகிறேன். பேட்டிங்கை விரும்புகிறேன். கிரிக்கெட்டையும், பேட்டிங்கையும் விரும்புகிற வரை மற்ற அனைத்து விசயங்களையும் அதுவாகவே பார்த்துக்கொள்ளும்.

    தலைக்குணிவை ஏற்படுத்தாத மோசமான நிலைக்கு தள்ளப்படாததற்கு கடவுளுக்கு நன்றி, அணிக்கு என்ன தேவையோ?. அதை நோக்கி உழைத்தால் இதுபோன்ற முடிவுகள் அடிக்கடி கிடைக்கும்.

    என்னைப் பொறுத்தவரையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த நிலையில் இந்த போட்டிகளுக்காக தயாராக வேண்டும், உற்சாகம் பெற வேபண்டும், அதனுடன் களத்தில் இறங்க வேண்டும், அணிக்காக என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட வேண்டும், கடுமையாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்பதுதான்.

    இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து வெளிப்படும்போது நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள். அணி வெற்றிக்கான நிலையை தொடும்போது அது சிறந்த உணர்வாக இருக்கும்.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

    • ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களும் பிசிசிஐ பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • ட்ரெஸ்சிங் அறைகளுக்கு வீரர்களின் குடும்பத்தினர் வரக்கூடாது என பிசிசிஐ கட்டுப்பாடு விதிப்பு

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.

    இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரிலும் 3-1 என தோல்வியை தழுவியது. இந்த தோல்விகளால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் முதல்முறை இந்திய அணி வெளியேறியது. அத்துடன், 10 ஆண்டு கழித்து பார்டர்-கவாஸ்கர் கோப்பையையும் இழந்துள்ளது.

    இதையடுத்து, இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் இந்திய அணி வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களும் விதிக்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி பயிற்சிக்கு செல்லும்போது அணியினர் செல்லும் பேருந்துகளில் தான் வீரர்கள் பயணம் சேயாய் வேண்டும் என்றும் பயிற்சி நாட்களில் கூட வீரர்களின் ட்ரெஸ்சிங் அறைகளுக்கு வீரர்களின் குடும்பத்தினர் வரக்கூடாது என்று பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் பொது அங்கீகார அட்டையையே வீரர்கள் கொண்டு வர மறந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    குறிப்பாக, போட்டி முடிந்த பின்பு நடக்கும் நிகழ்ச்சிகளில் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஆடையை அணிந்து வரக்கூடாது என்றும் இதனை முதல்முறை மீறினால் எச்சரிக்கை விடுக்கப்படும் 2 ஆவது முறையாக மீறினால் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக அதிரடியாக விளையாடிய ஹெட் விக்கெட்டை வருண் வீழ்த்தினார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக, பாலிவுட் நடிகர் வருண் தவானின் இன்ஸ்டா பதிவில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த ட்ரெண்டில் இணைந்து வருண் சக்கரவர்த்தியும் அந்த இன்ஸ்டா பதிவில் தவானை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார்.

    இதற்கு முன், விராட் கோலி அடித்த பந்தை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸின் இன்ஸ்டா கணக்கிற்கு பதில் பிலிப்ஸ் நிறுவனத்தை ரசிகர்கள் திட்டி தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து வீர்ர கார்ஸை ஏலத்தில் எடுத்திருந்தது.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது காயம் ஏற்பட்டதால் விலகியுள்ளார்.

    ஐ.பி.எல். 2025 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் பயிற்சிகளை தொடங்கியுள்ளன. கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்ஸை ஏலம் எடுத்திருந்தது.

    இவர் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும்போது அவரது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.

    இதனால் அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவின் வியான் முல்டரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 75 லட்சம் ரூபாய்க்கு மாற்று வீரராக எடுத்துள்ளது.

    முல்டர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 18 டெஸ்ட், 25 ஒருநாள், 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    மார்ச் 23-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    • விராட் கோலி, பெரிய சவாலை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்.
    • சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் அரையிறுதியில் மோதிய இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் சச்சின், தோனியை விட சேஸிங்கில் விராட் கோலி சிறப்பாக விளையாடுகிறார் என இந்திய அணி முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர் பெரிய சவாலை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். அதில்தான் அவருக்கு ஆற்றல் கிடைக்கிறது. அவர் அந்த அழுத்தத்தில் விளையாட விரும்புகிறார். அவரை போல சில கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த குணம் உள்ளது.

    நாளின் இறுதியில் போட்டியை வென்றுக் கொடுக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. அதை தோனி எந்தளவுக்கு செய்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் விராட் கோலி அதை செய்வதில் மற்ற அனைவரையும் விட ஒரு படி மேலே இருக்கிறார்.

    சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எதிரணியையும் நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது.

    என்று கபில்தேவ் கூறினார்.

    • ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணிக்காக சவுத் ஷகீல் விளையாடினார்.
    • போட்டியின் போது சவுத் ஷகீல் தூங்கி விட்டதால் பேட்டிங் செய்ய வர முடியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறி அந்த நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ளூர் போட்டி நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சவுத் ஷகீல் இந்த தொடரில் விளையாடினார். அவர் ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். பிடிவி அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சவுத் ஷகீல் களத்திற்கு வரவில்லை. மூன்று நிமிடங்கள் ஆகியும் சவுத் ஷகீல் களத்திற்கு வராததால் பிடிவி அணி கேப்டன் நடுவரிடம் அவுட் கேட்டார்.

    இதையடுத்து நடுவர் சவுத் ஷகிலுக்கு அவுட் கொடுத்து விட்டார். இந்த நிலையில் போட்டியின் போது சவுத் ஷகீல் படுத்து தூங்கி விட்டதால் பேட்டிங் செய்ய அவரால் வர முடியவில்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலே முதல் முறையாக டைம்ட் டவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை சவுத் ஷகீல் படைத்திருக்கிறார்.

    பாகிஸ்தான் அணி தற்போது தொடர் தோல்விகளால் தடுமாறி வரும் நிலையில், சவுத் ஷகீல் களத்திற்கு வராமல் படுத்து தூங்கிய சம்பவம் பாகிஸ்தான் ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இந்த போட்டியில் முஹம்மது ஷாசாத் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    சவுத் ஷகீல் பேட்டிங் செய்ய வராமல் தூங்கியதால் அவருடைய அணி 205 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஒரு விக்கெட் விழுந்த பிறகு களத்திற்கு இரண்டு நிமிடத்திற்குள் புது பேட்ஸ்மேன் வந்து பேட்டிங் செய்ய தயாராகவில்லை என்றால் அவருக்கு டைம்ட் அவுட் என்ற முறையில் அவுட் வழங்கப்படும்.

    கடந்த 2023 உலகக்கோப்பை போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் இவ்வாறு ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது.
    • நியூசிலாந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    துபாய்:

    8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டது. லீக் போட்டிகள் கடந்த 2-ந்தேதி முடிவடைந்தது.

    லீக் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன. கடந்த 4-ந் தேதி துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. லாகூரில் நடந்த 2-வது அரையிறுதியில் நியூசிலாந்து 50 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.

    இறுதிப்போட்டி வருகிற 9-ந்தேதி துபாயில் நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. 2000-ம் ஆண்டு கென்யாவில் 2-வது ஐ.சி.சி. நாக் அவுட் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா-நியூ சிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இதுவரை 8 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெற்றுள்ளன. தற்போது தான் முதல் முறையாக ஏற்கனவே இறுதிப்போட்டியில் மோதிய அணிகள் மீண்டும் மோதுகின்றன.

    இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதற்கு முன்பு 2000,2002,2013,2017 ஆகிய ஆண்டுகளில் முன்னேறி இருந்தது. இதில் 2002,2013-ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நியூசிலாந்து 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு முன்பு 2000,2009-ல் இறுதிப்போட்டியில் ஆடியது.

    • நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தது.
    • ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்க அணி 11 முறை அரையிறுதியில் மோதி இருக்கிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டிகள் முடிவடைந்து விட்டது. முதல் அரையிறுதி ஆஸ்திரேலியா - இந்தியா மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து 2-வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் அரையிறுதியில் தோல்வியடைந்ததன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. அதன்படி ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்ரிக்க அணி 11 முறை அரையிறுதியில் மோதி இருக்கிறது. இதில் 1999-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் மட்டுமே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது.

    மற்ற ஒன்பது அரை இறுதியில் தோல்வியும், ஒரு அரையிறுதியில் டிராவும் ஆகி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் அரையிறுதி போட்டிகளில் அதிக முறை தோல்வியை தழுவிய அணி என்ற சோகமான சாதனையை தென் ஆப்பிரிக்க அணி படைத்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் 2000, 2002, 2006, 2013, 2025 ஆகிய 4 ஆண்டுகளிலும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் 1992, 2007, 2015, 2023 ஆகிய ஆண்டுகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. 1999-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் போட்டி டிரா ஆனது.

    • இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது.
    • எங்களை முற்றிலுமாக வெளியேற்றியது.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடத்தப்பட்டது.

    ஒரே மைதானத்தில் (துபாய்) விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமானது என்று கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள், மைக் ஆதர்டன், நாசர் உசேன் கூறி இருந்தனர். இதேபோல ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சும் ஒரே மைதானத்தில் ஆடுவது இந்தியாவுக்கு உகந்தது என்று தெரிவித்து இருந்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதி போட்டி முடிவில் இந்த விமர்சனங்களுக்கு பயிற்சியாளர் காம்பீர் பதிலடி கொடுத்தார்.

    துபாய் பொதுவான மைதானம் என்றும், இந்திய மைதானம் இல்லை என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில் ஒரே மைதானத்தில் ஆடுவது உதவிகரமாக இருப்பதாக வேகப்பந்து வீரர் முகமது ஷமி தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகம் இல்லை என்று ஒருநாள் போட்டியில் இருந்து நேற்று திடீரென ஓய்வை அறிவித்த ஸ்டீவ் சுமித் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. எங்களை முற்றிலுமாக வெளியேற்றியது. ஒரே நகரத்தில் (துபாய்) தங்கி இருப்பது இந்தியாவுக்கு சாதகமானது கிடையாது. அந்த அணி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இவ்வாறு ஸ்டீவ் சுமித் கூறியுள்ளார்.

    • ரச்சின் மற்றும் வில்லியம்சன் பிலிப்ஸ் போன்ற வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
    • நாங்கள் ஒரு விக்கெட்டுக்கு 125 என்ற ஸ்கோரில் இருந்தோம். அதன் பிறகு நாங்கள் அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் இழந்தோம்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 9-ந் தேதி நடக்கிறது.

    இந்நிலையில் எதிரணி வீரர்களுக்கு வாய்ப்புகளை நாங்களே வழங்கி அவர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டோம். இனி அந்த தவறை செய்யக்கூடாது என தோல்வி குறித்து டெம்பா பவுமா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    360 ரன்கள் அடித்தது இந்த ஆடுகளத்தில் ஒரு நல்ல ஸ்கோர் தான். இதுவே ஒரு 350 ரன்கள் என்ற இலக்கு இருந்திருந்தால் கூட நாங்கள் இந்த ஸ்கோரை எட்ட முடியும் என்று நம்பி இருப்போம். இன்றைய ஆட்டத்தில் கூட எங்கள் அணியில் ஒன்று அல்லது இரண்டு பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் சேர்த்தோம்.

    ஆனால் நானோ அல்லது வெண்டர் டூசன் களத்தில் கடைசி வரை நின்று இருந்து நியூசிலாந்து வீரர்கள் போல் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எங்களை கடும் அழுத்தத்தில் நியூசிலாந்து பவுலர்கள் வைத்திருந்தார்கள்.

    ரச்சின் மற்றும் வில்லியம்சன் பிலிப்ஸ் போன்ற வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். நாங்கள் ஒரு விக்கெட்டுக்கு 125 என்ற ஸ்கோரில் இருந்தோம். அதன் பிறகு நாங்கள் அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் இழந்தோம். இதன் மூலம் கடைசியில் வரும் வீரர்கள் பெரிய ஸ்கோரை துரத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். இனி வரும் காலங்களில் நாங்கள் இன்னும் ஆக்ரோஷமாகவும் அதிரடியாகவும் இருக்க வேண்டும்.

    எதிரணி வீரர்களுக்கு வாய்ப்புகளை நாங்களே வழங்கி அவர்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டோம். இனி அந்த தவறை செய்யக்கூடாது. ஆட்டத்தில் இருக்கும் முக்கிய தருணங்களை சரியாக பயன்படுத்தினாலே நம்மால் வெற்றி பெற முடியும்.

    என்று பவுமா கூறியுள்ளார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் சதம் விளாசினார்.
    • மில்லர் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் எடுத்துள்ளார்.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் விளையாடின.

    இதில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் தனி ஆளாக போராடினார். அவர் 67 பந்துகளில் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அசத்தினார். மில்லர் சதம் அடித்தபோதும், நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது. அந்த அணி ஞாயிற்று கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது.

    இந்த போட்டியில், அணியின் தோல்வியால் மில்லர் அடித்த சதம் வீணானது. எனினும், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில், இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக்கின் சாதனையை அவர் முறியடித்து உள்ளார். கொழும்புவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது, 77 பந்துகளில் சதம் அடித்த சேவாக்கின் சாதனை முறியடிக்கப்பட்டது.

    23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இதன்படி சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டியில் மில்லர் விரைவாக சதம் அடித்து உள்ளார். இந்த தொடரில், மில்லர் கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் எடுத்ததும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

    • கடந்த சில வாரங்கள் எனக்கு சவாலாக இருந்தன.
    • வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 9 சதங்களும், 49 அரை சதங்களும் அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    வங்கதேச கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் (வயது 37). சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அந்த அணி ஜொலிக்காத சூழலில், ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை ரகீம் வெளியிட்டார்.

    இதுபற்றி அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்ட செய்தியில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளேன். எல்லாவற்றுக்கும் கடவுளுக்கு நன்றி.

    எங்களுடைய சாதனைகள் உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டபோதும், ஒரு விசயம் நிச்சயம். என்னுடைய நாட்டுக்காக எப்போதெல்லாம் நான் விளையாட களம் இறங்கினேனோ, 100 சதவீதத்திற்கு கூடுதலாக அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் அப்போது விளையாடினேன் என தெரிவித்து உள்ளார்.

    கடந்த சில வாரங்கள் எனக்கு சவாலாக இருந்தன. என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கடந்த 19 ஆண்டுகளாக என்னுடைய விளையாட்டை ரசித்து வரும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என அதில் பதிவிட்டு உள்ளார்.

    வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 2006-ம் ஆண்டு முதல் விளையாட தொடங்கிய முஷ்பிகுர் ரஹீம், இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 7,795 ரன்களை எடுத்துள்ளார். அவற்றில் 9 சதங்களும், 49 அரை சதங்களும் அடங்கும்.

    ×