என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- லீக் போட்டியின் போது இந்தியாவுக்கு எதிராக நாங்கள் கடும் நெருக்கடியை கொடுத்தோம்.
- ஒரே அணியாக இணைந்து எதிரணியின் மீது நெருக்கடி செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் வருகிற 9-ந் தேதி மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த தொடர் முழுவதும் நாங்கள் நல்ல அணிகளால் கடும் சவால்களை எதிர்கொண்டோம். இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறோம். மீண்டும் அவர்களை சந்திப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடியுள்ளது. அதனால் பிட்ச்சை நன்கு அறிந்திருப்பார்கள். லாகூர் மைதானத்தை விட துபாய் பிட்ச் சற்று மெதுவாக இருக்கலாம். இது சவாலின் ஒரு பகுதியாகும்.
ஒரே அணியாக இணைந்து எதிரணியின் மீது நெருக்கடி செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம். அணியில் 4 ஸ்பின்னர் இருப்பதால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. துபாயில் நாங்கள் ஏற்கனவே விளையாடியிருக்கிறோம். அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் கடும் நெருக்கடியை கொடுத்தோம்.
இதன் மூலம் அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறுதி போட்டியில் டாஸ் வெல்வதும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என மிட்செல் சான்ட்னர் கூறினார்.
- இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது சமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார்.
- சமி விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார் என அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் கூறினார்.
இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தின் போது முகமது சமி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறுகையில், ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை. ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ விரதத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பெரிய பாவிகளாகி விடுவார்கள்
முகமது சமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அத்தகைய நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு பாவி. அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஷமா முகமது எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், ரம்ஜான் மாதத்தில் ஒரு மிக முக்கியமான விஷயம் உள்ளது. நாம் பயணம் செய்யும்போது, நோன்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. முகமது சமி பயணம் செய்கிறார், அவர் தனது சொந்த இடத்தில் இல்லை. நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடும்போது, நோன்பு இருக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. உங்கள் செயல்கள்தான் மிகவும் முக்கியம். அது (இஸ்லாம்) மிகவும் அறிவியல் பூர்வமான மதம் என்று ஷமா முகமது கூறினார்.
இதனையடுத்து, முகமது சமி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று அல்லா குர்ஆனில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே சமி விரதம் இருக்காமல் இருக்க விருப்பம் உள்ளது: அவர் மீது விரல் நீட்ட யாருக்கும் உரிமை இல்லை.
என்று தெரிவித்தார்.
மேலும் சுற்றுப் பயணத்தில் இருப்பவர்கள் நோன்பைத் தவிர்க்க குர்ஆன் அனுமதிக்கிறது என சமியின் உறவினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மத குருமார்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- ஒரு கேப்டனாக கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.
- ஒருவர் 15 முதல் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது பெரிய விஷயம்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை யாரும் படைத்திராத சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. நடத்தும் நான்கு வகை கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். இதையடுத்து, எம்.எஸ். தோனி இதுவரை எட்டாத சாதனையை ரோகித் சர்மா தற்போது படைத்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஐ.சி.சி. நடத்திய அனைத்து வித கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இத்தகைய சாதனையை படைத்த முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்த கேப்டனும் பெறாத பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஒரு கேப்டனாக கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார் என ரோகித் சர்மாவுக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு கேப்டனாக கடந்த 4 வருடங்களில் 4 ஐசிசி தொடர்களில் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு ரோகித் சர்மா அழைத்து சென்றுள்ளார். இது மிகப்பெரியது. ஒருவர் 15 முதல் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுவது பெரிய விஷயம்.
அவர் கடினமாக உழைக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் விளையாடும் அவருக்கு என் வாழ்த்துகள்.
என சூர்யகுமார் யாதவ் கூறினார்.
- 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது. அதில் நேற்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணியின் 4-வது வெற்றி ஆகும்.
முன்னதாக உபி வாரியர்ஸ் பேட்டிங் செய்த போது மும்பை இந்தியன்ஸ் அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். இதனால் கடைசி ஓவரில் 3 பீல்டர்கள் மட்டுமே உள்வலையத்திற்கு வெளியே நிற்க வேண்டும் என நடுவர்கள் தெரிவித்தனர். அதனை மும்பை கேப்டனிடம் நடுவர் தெரிவித்து கொண்டிருந்தார். இதனால் கவுர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சோஃபி எக்லெஸ்டோன் நடுவரிடம் கவுரை பார்த்து ஏதோ கூறினார். உடனே பதிலுக்கு கவுர் அவரை பார்த்து (உங்கள் வேலையை பாருங்கள் என்பது போல) எதோ திட்டினார். இதனையடுத்து களநடுவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு 60% ஆகவும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 40 சதவீதமாகவும் உள்ளது.
- நியூசிலாந்து அணியின் கேப்டனாக சாட்னர் சிறப்பாக செயல்படுகிறார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளது. நியூசிலாந்து அணி எப்போதுமே இந்தியாவுக்கு ஐசிசி தொடரில் கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இது அணிகளும் இதுவரை ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 12 முறை மோதி இருக்கிறார்கள். இதில் இந்திய ஆறுமுறையும் நியூசிலாந்து அணியும், ஆறுமுறையும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
இந்த சூழலில் இறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கணித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளுக்கும் எந்த மாதிரியான ஆடுகளம் கிடைக்கப்போகிறது என்பது குறித்து நன்றாக தெரியும். குறிப்பாக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக துபாய் ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட முடியும். இதனால் இந்தியாவுக்கு இது நிச்சயமாக சுலபமாக இருக்காது.
ஆனால் இந்த தொடரை வெல்லும் அணியாக இந்தியா தான் நிச்சயம் இருக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்காது. இந்தியா 70% மற்றும் நியூசிலாந்து 30 சதவீதம் என்று கூட சொல்ல முடியாது. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு 60% ஆகவும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 40 சதவீதமாகவும் உள்ளது. ஏனென்றால் நியூசிலாந்து அணியும் பலமாக இருக்கிறது.
இதேபோன்று நியூசிலாந்து அணியின் கேப்டனாக சாட்னர் சிறப்பாக செயல்படுகிறார். அவரிடம் ஒரு நம்பிக்கையும் அமைதியும் இருக்கிறது. வில்லியம்சன் போல் அவரும் களத்தில் பதற்றமில்லாமல் இருக்கின்றார். அவருடைய இந்த இயல்பு நிச்சயம் அணிக்கு ஒரு பலமாக இருக்கும். களத்தில் அமைதியாக இருப்பதற்கும் சோம்பேறியாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நியூசிலாந்து வீரர்கள் எல்லாம் அமைதியான வகையை சார்ந்தவர்கள்.
என்று வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
- கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
- கங்குலி நடிப்பதை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மைதானத்தில் பவுண்டரி, சிக்சர் என்று ரன்களை குவித்த கிரிக்கெட் வீரர்கள் நடிகர்களாகி வருகிறார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் 'ராபின் ஹுட்' என்ற தெலுங்கு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் நடிகராக மாறி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
வெப்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்குலி நடிக்க இருப்பதாகவும், ஜீத், புரோசன் ஜீத் சட்டர்ஜி, சாஸ்வதா பரம்விரதா சட்டர்ஜி ஆகியோரும் கங்குலியுடன் வெப் தொடரில் நடிக்கின்றனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கங்குலி போலீஸ் சீருடையில் இருக்கும் புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகிறது. இந்த வெப் தொடரில் கங்குலி போலீஸ் உயர் அதிகாரியாக நடிப்பதாக தகவல். கங்குலி நடிப்பதை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
- இந்தியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
- ரச்சின் ரவீந்திராவிடம் சிறப்பு வாய்ந்த திறமை இருக்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 50 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வெளியேற்றி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
வருகிற 9-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, இந்தியாவுடன் மோத உள்ளது. இது குறித்து நியூசிலாந்து முன்னணி பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில், 'இந்தியா ஒரு அற்புதமான அணி, அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எனவே இந்தியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இறுதிப்போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். கடந்த ஆட்டத்தை போன்று அங்கு சூழ்நிலை மீண்டும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது போது இங்குள்ள (துபாய்) சீதோஷ்ண நிலை முற்றிலும் வித்தியாசமானது. இறுதி ஆட்டத்தில், எங்களது திட்டத்தை தெளிவாக செயல்படுத்த வேண்டியது முக்கியம். ரச்சின் ரவீந்திராவிடம் சிறப்பு வாய்ந்த திறமை இருக்கிறது. அவருடன் இணைந்து பேட் செய்வது எப்போதும் உற்சாகமாக இருக்கும்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம். இருப்பினும் இறுதிப்போட்டி மீது எங்களது கவனத்தை விரைவாக மாற்றுவோம். கோப்பையை வெல்ல இது எங்களுக்கு அருமையான வாய்ப்பாகும்' என்றார்.
மற்றொரு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கூறுகையில், 'துபாய் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு அதிகமாக தெரியாது. இந்தியாவுக்கு எதிரான லீக்கில் அங்கு விளையாடிய போது பந்து நன்கு சுழன்று திரும்பியதை பார்த்தோம். ஆனால் இன்னொரு நாள் பந்து பெரிய அளவில் சுழன்று திரும்பவில்லை. எனவே ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப எங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். ஓரிரு நாளில் ஆடுகளத்தை பார்ப்போம். இது சிறந்த ஆடுகளமாக இருக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.
நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி லீக் சுற்றில் இந்தியாவிடம் 44 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த மும்பை அணி 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோ:
3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் லக்னோவில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. ஓரளவு நிலைத்து நின்று ஆடிய ஜார்ஜியா வோல் அரை சதம் அடித்து 55 ரன்களில் ஆட்டமிழந்தார். கிரேஸ் ஹாரிஸ் 28 ரன்னும், தீப்தி ஷம்ரா 27 ரன்னும் எடுத்தனர்.
மும்பை அணி அமெலியா கெர் 5 விக்கெட்டும், ஹெய்லி மேத்யூஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ஹெய்லி மேத்யூஸ் அரை சதம் கடந்து 68 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு ஹெய்லி மேத்யூஸ்-நட் சீவர் பிரண்ட் ஜோடி 92 ரன்கள் சேர்த்தது. நட் சீவர் பிரண்ட் 37 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், மும்பை அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணியின் 4வது வெற்றி ஆகும்.
- வரும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஷ்ரேயஸ் அய்யரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
வரும் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் ஷ்ரேயஸ் அய்யரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
- துபாயில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவில இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியாவும், 2-வது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்காவை நியூசிலாந்தும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
வருகிற ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரைபல் (வயது 58), இங்கிலாந்தை சேர்ந்த இல்லிங்வொர்த் (வயது 61) ஆகிய கள நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரைபல் தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் நடுவராக பணியாற்றினார். இல்லிங்வொர்த் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது நடுவராக பணியாற்றினார்.
இல்லிங்வொர்த் நான்கு முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை வென்றுள்ளார். இவர் இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டி, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றியுள்ளார்.
3-வது நடுவராக ஜோல் வில்சன், 4-வது நடுவராக குமார் தர்மசேனா, போட்டி நடுவராக ரஞ்சன் மதுகலே நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை.
- ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தால் விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தை முன்னிட்டு விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி சுற்றுப்பயணத்தின் போது முகமது ஷமி ரமலான் நோன்பு கடைபிடிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி கூறுகையில், ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விரதம் இருக்க வேண்டியது கட்டாய கடமை. ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ விரதத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் பெரிய பாவிகளாகி விடுவார்கள்
இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமி போட்டியின் போது குளிர்பானம் அருந்தினார். மக்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கிரிக்கெட் விளையாடுகிறார் என்றால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். அத்தகைய நிலையில், அவர் விரதத்தை கடைபிடிக்ககாமல் பாவம் செய்துவிட்டார். ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு பாவி . அவர் கடவுளுக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, முகமது ஷமி மீதான விமர்சனங்களுக்கு பதில் அளித்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக உறுப்பினர் மவுலானா காலித் ரஷீத் ஃபராங்கி மஹ்லி, "ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ, விரதம் கடைபிடிக்காமல் இருக்க அவர்களுக்கு விருப்பம் உள்ளது என்று அல்லா குர்ஆனில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே ஷமி விரதம் இருக்காமல் இருக்க இருக்க விருப்பம் உள்ளது: அவர் மீது விரல் நீட்ட யாருக்கும் உரிமை இல்லை" என்று தெரிவித்தார்.
- நான் கிரிக்கெட்டை விரும்பி விளையாடி வருகிறேன். பேட்டிங்கை விரும்புகிறேன்.
- கடுமையாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அபாரமாக விளையாடினார். கடினமான துபாய் ஆடுகளத்தில் பவுண்டரி, சிக்ஸ் இல்லாமல் ஒரு ரன், இரண்டு ரன்களாக ஓடி ரன்கள் குவித்தார்.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியது குறித்து விராட் கோலி கூறியதாவது:-
நான் கிரிக்கெட்டை விரும்பி விளையாடி வருகிறேன். பேட்டிங்கை விரும்புகிறேன். கிரிக்கெட்டையும், பேட்டிங்கையும் விரும்புகிற வரை மற்ற அனைத்து விசயங்களையும் அதுவாகவே பார்த்துக்கொள்ளும்.
தலைக்குணிவை ஏற்படுத்தாத மோசமான நிலைக்கு தள்ளப்படாததற்கு கடவுளுக்கு நன்றி, அணிக்கு என்ன தேவையோ?. அதை நோக்கி உழைத்தால் இதுபோன்ற முடிவுகள் அடிக்கடி கிடைக்கும்.
என்னைப் பொறுத்தவரையில் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த நிலையில் இந்த போட்டிகளுக்காக தயாராக வேண்டும், உற்சாகம் பெற வேபண்டும், அதனுடன் களத்தில் இறங்க வேண்டும், அணிக்காக என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட வேண்டும், கடுமையாக ஓடி ரன்கள் எடுக்க வேண்டும், சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்பதுதான்.
இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து வெளிப்படும்போது நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள். அணி வெற்றிக்கான நிலையை தொடும்போது அது சிறந்த உணர்வாக இருக்கும்.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.






