என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
    • இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது சஞ்சு சாம்சன் கோபத்தில் "பேட்"டை தூக்கிப்போட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சண்டிகர்:

    ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி பெற்ற 32-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் ஷேன் வார்னே 31 ஆட்டங்களில் வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வி அடைந்தது.
    • பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடித்தார்.

    தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.

    சண்டிகரில் நேற்று நடந்த 18-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த டெல்லி அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

    மற்ற இடங்களில் தலா 2 வெற்றி பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 3-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 4-வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5-வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-வது இடத்திலும் உள்ளன

    தலா ஒரு வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 8-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10-வது இடத்திலும் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஹாட்ரிக் தோல்வி எதிரொலியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது இடத்துக்கு சரிந்துள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள ரசிகர்கள் சென்னை அணி இதிலிருந்து மீண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    சண்டிகர்:

    ஐபிஎல் 2025 சீசனின் 18-வது ஆட்டம் சண்டிகரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 26 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ரியான் பராக் 23 பந்தில் தலா 3 பவுண்டரி, சிக்ஸ் உடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

    நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக ஆடி 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 30 ரன்னில் அவுட்டானார். 5வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 88 ரன்கள் சேர்த்தது. மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை.

    இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் 2வது வெற்றியைப் பதிவு செய்தது. நடப்பு தொடரில் பஞ்சாப் அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, தீக்ஷனா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 205 ரன்களைக் குவித்தது.

    சண்டிகர்:

    ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி சண்டிகரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது அந்த அணியின் டிரஸ்சிங் ரூமில் ஜோப்ரா ஆர்ச்சர் குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

    ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.

    இந்நிலையில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. முதல் ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் விசினார்.

    முதல் ஓவரின் முதல் பந்தில் பிரியான்ஷு ஆர்யாவை டக் அவுட்டாக்கினார். தொடர்ந்து கடைசி பந்தில் ஷ்ரேயஸ் ஐயரை 10 ரன்னில் அவுட்டாக்கினார். ஒரே ஓவரில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

    இதைக் கண்ட நெட்டிசன்கள், தூக்கம் முக்கியமுங்கோ... ஜோப்ரா ஆர்ச்சர் இதற்காகத்தான் குட்டித்தூக்கம் போட்டாரோ என இந்தப்ப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

    • ஜெய்ஸ்வால் 45 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 67 ரன்கள் விளாசினார்.
    • ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் தலா 3 பவுண்டரி, சிக்ஸ் உடன் 43 ரன்கள் எடுத்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 18ஆவது ஆட்டம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இதனால் பவர்பிளேயில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்தது. அதன்பின் ரன் வேகத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 89 ரன்னாக இருக்கும்போது சஞ்சு சாம்சன் 26 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரியாக் பராக் களம் இறங்கினார். ஜெய்ஸ்வால் 40 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 45 பந்தில் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த நிதிஷ் ராணா 7 பந்தில் 12 ரன்கள் எடுத்து வெளியேற 4ஆவது விக்கெட்டுக்கு ரியான் பராக் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி ஸ்கோர் 200-ஐ தொட்டுவிட வேண்டும் நோக்கத்தில் விளையாடியது. 19ஆவது ஓவரில் ஹெட்மையர் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    கடைசி ஓவரை ஸ்டோய்னிஸ் வீசினார். இந்த ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் கிடைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. ரியான் பராக் 23 பந்தில் தலா 3 பவுண்டரி, சிக்ஸ் உடன் 43 ரன்களும், ஜுரெல் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் உடன் 5 பந்தில் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியை எம்.எஸ். தோனியின் பெற்றோர் பார்த்தனர்.
    • முதன்முறையாக சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்ததால் எம்.எஸ். தோனி ஓய்வை முடிவை அறிவிக்கலாம் எனத் தகவல் பரவியது.

    சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியை எம்.எஸ். தோனியின் பெற்றோர் கண்டுகளித்தனர். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து, இன்று முதன்முறையாக அவரது பெற்றோர்கள் போட்டியை பார்க்க வந்தனர்.

    ஒருவேளை எம்.எஸ். தோனி இன்று ஓய்வு குறித்த முடிவை அறிவிக்கலாம். இதனால்தான் பெற்றோர்கள் அவரது கடைசி போட்டியை பார்க்க வந்துள்ளனர் எனச் செய்திகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. ஆனால் எம்.எஸ். தோனி ஓய்வு குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.

    இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஆலோசகர் ஸ்டீபன் பிளமிங் இது தொடர்பாக கூறுகையில் "எம்.எஸ். டோனி இன்னும் வலிமையாக சென்று கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் எம்.எஸ். தோனியிடம் அவருடைய எதிர்காலம் குறித்து கேட்பதில்லை" என்றார்.

    இதனால் எம்.எஸ். தோனி இந்த தொடர் முழுவதும் விளையாடுவார். டெல்லிக்கு எதிராக இன்று கடைசி வரை களத்தில் நின்று 26 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சருடன் 30 ரன்கள் அடித்தார்.

    • ஒரு கேப்டனாக சரியான போட்டியில் நாங்கள் இதுவரை விளையாடியதாக நினைக்கவில்லை.
    • ஐபிஎல் நீண்ட தொடர். உத்வேகம் எந்த நேரத்திலும் மாறலாம்.

    ஐபிஎல் 2025 சீசனின் 16ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் 77 ரன்கள் விளாசினார்.

    பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பேட்ஸ்மேன்கள் சொதப்பலாம் தோல்வியை எதிர்கொண்டது.

    2010ஆம் ஆண்டுக்குப் பின் முதன்முறையாக சேப்பாக்கம் மைதான்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தியுள்ளது. அத்துடன் இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    சிஎஸ்கே அணிக்கெதிரான வெற்றி குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:-

    மூன்று போட்டிகளில் மூன்று வெற்றி என்பது எளிதாக கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் பங்களிப்பை கொடுத்தார்கள். டீம் பேலன்ஸ் சிறப்பாக உள்ளது. ஒரு கேப்டனாக ஹாட்ரிக் வெற்றி சந்தோசம் அளிக்கிறது.

    எனது கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்று அதிகமாக பந்து வீசவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் சில சிறந்த கேட்ச்கள் இருக்கும். சில கேட்ச்கள் தவறவிடப்படும். ஒரு கேப்டனாக தரமான போட்டியில் நாங்கள் இதுவரை விளையாடியதாக நினைக்கவில்லை. ஐபிஎல் நீண்ட தொடர். உத்வேகம் எந்த நேரத்திலும் மாறலாம்.

    இவ்வாறு அக்சர் படேல் தெரிவித்தார்.

    • நாங்கள் 15 முதல் 20 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம் அல்லது அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக பந்து வீசியது. கண்டிசனை சிறப்பாக பயன்படுத்தினர்.

    சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்னில் தோல்வியை சந்தித்தது. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 183 ரன்கள் குவித்தது. 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே அணியால் 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    தோல்வி குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    கடந்த சில போட்டிகளில் இருந்து முடிவுகள் நாங்கள் நினைத்த வழியில் செல்லவில்லை. முன்னேற்றம் காண முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய சிறந்த பங்களிப்பை கொடுக்க முயற்சி செய்கிறோம். இருந்தாலும் எங்களுடைய வழியில் செல்ல முடியவில்லை. உறுதியாக நாங்கள் தொடக்கத்தில் ஏராளமான விக்கெட்டுகளை இழந்து விட்டோம். பவர்பிளேயில் பேட்டிங் மட்டுமல்ல, பந்து வீச்சு துறையிலும் மிகப்பெரிய கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

    நாங்கள் 15 முதல் 20 ரன்கள் அதிகமாக கொடுத்துவிட்டோம் அல்லது அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நடக்கவில்லை. பவர்பிளேயில் யார் பந்து வீச வந்தாலும் உங்களுக்கு சிறிய கவலை இருக்கிறது. அல்லது சந்தேகம் ஏற்படுகிறது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக பந்து வீசியது. கண்டிசனை சிறப்பாக பயன்படுத்தினர். ஷிவம் துபே பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அதில் இருந்து உத்வேகத்தை எதிர்பார்த்தோம். அது நடக்கவில்லை.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

    • மும்பைக்கு எதிரான தொடக்க போட்டியில் வெற்றி பெற்றது.
    • ஆர்சிபிக்கு எதிராக தோல்வியை எதிர்கொண்ட நிலையில், தற்போது டெல்லிக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 16ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுல் 77 ரன்கள் விளாசினார்.

    பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பேட்ஸ்மேன்கள் சொதப்பலாம் தோல்வியை எதிர்கொண்டது.

    3ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் விஜய் சங்கர் களம் இறங்கினார். கடைசி நின்று 54 பந்துகளை சந்தித்து 69 ரன்கள் மட்டுமே அடித்தார். கடைசி வரை விளையாடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. மேலும், டோனியும் கடைசி வரை களத்தில் நின்று 26 பந்தில் 30 ரன்களே அடித்தார்.

    ரச்சின் ரவீந்திரா (3), கான்வே (13), ருதுராஜ் கெய்க்வாட் (5) ஆகிய மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதாலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது.

    டெல்லி அணி கடந்த 2010ஆம் ஆண்டு கடைசியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக ஆர்சிபி 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் வீழ்த்தியிருந்தது. அதன்பின் தற்போது டெல்லி அணி சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியுள்ளது.

    சிஎஸ்கே கடந்த 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அதன்பின் 28ஆம் தேதி ஆர்சிபிக்கு எதிராக 50 ரன்னில் தோல்வியடைந்திருந்தது. இன்று டெல்லிக்கு எதிராக 25 ரன்னில் தோல்வியை சந்தித்துள்ளது.

    கவுகாத்தில் 30ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக 6 ரன்னில் தோல்வியடைந்தது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்றில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.

    • விஜய் சங்கர் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • எம்.எஸ். தோனி 26 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் விளாசினார். அபிஷேக் பொரேல் 33 ரன்களும், அக்சர் படேல் 21 ரன்களும், சமீர் ரிஸ்வி 20 ரன்களும், ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் சேர்த்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கலீல் அகமது 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகேஷ் சவுத்ரி 4 ஓவரில் 50 ரன்கள் வாரி வழங்கினார்.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. ரச்சின் ரவீந்திரா, கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரின் 5ஆவது பந்தில் ரச்சின் ரவீந்திரா 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட்டை 5 ரன்னில் வெளியேற்றினார் மிட்செல் ஸ்டார்க். 20 ரன்னுக்குள் சிஎஸ்கே முக்கிய இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அந்த சரிவில் இருந்து சிஎஸ்கே அணியால் மீள முடியவில்லை. கான்வே 14 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷிவம் துபே 18 ரன்களும் எடுத்த நிலையிலும் விப்ராஜ் நிகம் பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் விஜய் சங்கர் களத்தில் நின்றுகொண்டிருந்தார். ஆனால் இவரால் அதிரடியாக ரன்கள் குவிக்க இயலவில்லை. 6ஆவது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் எம்.எஸ். டோனி ஜோடி சேர்ந்தார்.

    விஜய் சங்கர் 43 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி 3 ஓவரில் சென்னை அணிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் தோனி ஒரு சிக்ஸ் பறக்க விட்டார். இதனால் சிஎஸ்கே அணிக்க 13 ரன்கள் கிடைத்தன.

    கடைசி 2 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் சென்னை அணியால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    கடைசி ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸ் அடித்தார். தோனி ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் சிஎஸ்கே-வால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி 25 ரன்னில் வெற்றி பெற்றது. 

    விஜய் சங்கர் 54 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.எஸ். தோனி 26 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் உடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை

    • பஞ்சாப் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் 3-ல் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 9ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 18ஆவது ஆட்டம் மொகாலியில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ×