என் மலர்
விளையாட்டு
- ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- காயம் காரணமாக நிதிஷ் ரெட்டி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமாகி உள்ளனர்.
இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐதராபாத் அணி வீரரான நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:-
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய், ஷிவம் துபே.
- டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்துள்ளன.
- முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறுகின்றன.
டிரினிடாட்:
டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து அரையிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.
முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதியில் வென்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறியதாவது:
கடந்த காலங்களில் மிக முக்கியமான போட்டிகளில் நெருங்கி வந்து தோற்றுள்ளோம். தற்போதைய அணி அப்படி தோற்கவில்லை. இந்த அணி வித்தியாசமான அணி.
நாங்கள் இந்தத் தொடரில் எல்லைகளை தாண்டி இருக்கிறோம். நாங்கள் சரிசெய்த விஷயங்கள் குறித்து யோசிக்கிறோம். இது ஒரு உலகக் கோப்பையின் அரையிறுதி. அதை நாங்கள் பாராட்டுகிறோம், அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
அதிர்ஷ்டத்தால் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. சில விஷயங்கள் உங்கள் வழியில் செல்லக்கூடும் என்று நான் நினைக்கிறேன். திறமை எப்போதும் அதிர்ஷ்டத்தை வெல்லும், அது நிச்சயம்.
நவீன கிரிக்கெட்டில் அணிகளைப் படிப்பது கடினம் அல்ல. ஏராளமான தொழில்நுட்பம் அதன் வசம் உள்ளது. அவர்களின் பல வீரர்கள் உலகெங்கிலும் உள்ள பல லீக் போட்டிகளில் விளையாடுகிறார்கள்.
டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் வந்துள்ளது கிரிக்கெட் விளையாட்டிற்கு அற்புதமானது. அவர்கள் விளையாடும் விதம் மற்றும் அவர்கள் அதை ஆதரிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
- ஆலி ராபின்சன் நோ பால் ஆக வீசிய மூன்று பந்துகளிலும் லூயிஸ் கிம்பர் சிக்ஸர் விளாசியுள்ளார்.
- இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ராபின்சன் 76 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
அதில், சசெக்ஸ் - லீசெஸ்டர்ஷையர் அணிகள் மோதின. அப்போட்டியில் , லீசெஸ்டர்ஷையர் வீரர் லூயிஸ் கிம்பர், ஆலி ராபின்சன் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர், 3 பவுண்டரி, ஒரு சிங்கிள் உடன் 43 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.
ஆலி ராபின்சன் நோ பால் ஆக வீசிய மூன்று பந்துகளிலும் லூயிஸ் கிம்பர் சிக்ஸர் விளாசியுள்ளார்.
லீசெஸ்டர்ஷையரின் இரண்டாவது இன்னிங்ஸில் எட்டாவதாக இறங்கிய 27 வயதான கிம்பர் 62 பந்துகளில் தனது இரண்டாவது கவுண்டி சாம்பியன்ஷிப் சதத்தை எட்டினார். 18 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 191 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன்மூலம் கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் படைத்தார்.
இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ராபின்சன் 76 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக ஒரு ஓவரில் 38 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி கடும் போராட்டத்திற்குப் பிறகு 6(21)- 7(23) என இழந்தது.
- 2-வது செட்டை 4-6 என இழந்து தோல்வியை தழுவியது.
ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா சாம்பியன்ஷிப் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி- அல்பனோ ஆலிவெட்டி (பிரான்ஸ்) ஜோடி காலிறுதியில் அமெரிக்காவின் வித்ரோ- லம்மோன்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.
முதல் செட்டில் இரண்டு ஜோடிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் 6-6 என சமநிலை பெற்ற நிலையில் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் மாறிமாறி கேம்ஸை கைப்பற்றினர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு அமெரிக்க ஜோடி 23-21 என தனதாக்கியது. இதனால் முதல் செட்டை பாம்ப்ரி ஜோடி 6(21)- 7(23) என இழந்தது.
2-வது செட்டை 4-6 என இழக்க நேர்செட்டில் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. மற்றொரு காலிறுதியில் ஜே.கேஷ்- ஆர்.காலோவே ஜோடி 6-1, 6-2 என மார்ட்டினேஸ்- முனார் ஜோடியை வீழ்த்தியது.
- கடைசியில் அது போட்டியினை பெரிதாக பாதிக்கவில்லை. அதனால் நாங்கள் சிரித்துக்கொண்டுதான் பார்த்தோம்.
- அது மிகவும் நகைச்சுவையாக இருந்தது. போட்டி நன்றாக இருந்தது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளில் யார் அரையிறுதிக்கு முன்னேறுவது என்பதில் பலத்த போட்டி நிலவியது.
வங்காளதேசத்தை வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் தகுதி பெறும். ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 116 ரன் இலக்கை 12.1 ஓவரில் எட்டினால் வங்காளதேசம் தகுதி பெறும். மாறாக 12.1 ஓவரில் எட்ட முடியாமல் வங்காளதேசம் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், வங்காளதேச அணியின் ஆட்டத்தை அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். 116 எளிதான இலக்குதான். வங்காளதேசம் எப்படியும் எட்டிவிடும் என எதிர்பார்த்தனர். ஆனால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று இரண்டு அணிகளையும் வெளியேற்றியது.
வங்காளதேசம் சேஸிங் செய்யும்போது அடிக்கடி மழை குறுக்கீடு செய்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்படும் நிலை உருவாகியது. ஒரு சில நேரத்தில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் இருப்பதும், ஒரு சில நேரத்தில் வங்காளதேசம் முன்னிலையில் இருப்பதுமாக இருந்தது.
இதனால் போட்டியின் முடிவு பரபரப்பானதாகவே சென்றது. ஒரு கட்டத்தில் மழை வருவதுபோல் இருந்தது. அப்போது வங்காளதேசத்தை விட ஆப்கானிஸ்தான் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 3 ரன்கள் முன்னிலை இருந்தது. அந்த நேரம் ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக இருந்தது.
அப்போது ரஷித் கான் பந்து வீசிக் கொண்டிருந்தார். ஒருவேளை அடுத்த சில பந்துகளில் சிக்ஸ் அல்லது பவுண்டரி சென்றால் அது வங்காளதேசத்திற்கு சாதகமாக மாறிவிடும். இதனால் ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட், ஆப்கானிஸ்தான் வீரர்களை பார்த்து போட்டியை மெதுவாக கொண்டு செல்லுங்கள் என சைகை காட்டினார்.
இதை ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த குல்பதின் நைப் கவனித்துக் கொண்டார். ரஷித் கான் பந்து வீச தயாராகும்போது, தசைப்பிடிப்பு எனக் காலைப்பிடித்துக் கொண்டு கீழே சரிந்தார். அவரது செயலை பார்த்து வர்ணனையாளர்கள் சிரித்தனர். பலர் விமர்சனம் செய்தனர்.
இது பெரும் பேசும்பொருளாக மாறியது. என்ற போதிலும் இந்த செயல் போட்டியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இறுதியாக ஆப்கானிஸ்தான் 8 ரன்னில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறியதாவது:-
குல்பதின் நைப் செயலைப் பார்க்கும்போது எனக்கு சிரித்து சிரித்து கண்ணீர் வந்துவிட்டது. கடைசியில் அது போட்டியினை பெரிதாக பாதிக்கவில்லை. அதனால் நாங்கள் சிரித்துக்கொண்டுதான் பார்த்தோம். அது மிகவும் நகைச்சுவையாக இருந்தது. போட்டி நன்றாக இருந்தது.
அணியாகத்தான் அந்தப் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இது வெளிப்படையாக ஒரு அற்புதமான போட்டி அல்லவா? போட்டியில் அதிகமான சுவாரசியங்களும் திருப்பங்களும் இருந்தன. எங்களின் கட்டுக்குள் இல்லாமல் போட்டி சென்றுவிட்டது. அதற்காக நாங்கள் எங்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.
நாங்கள் உலகக் கோப்பையில் தொடர வேண்டுமென நினைதோம். ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். எங்களையும் வங்காளதேசத்தையும் வீழ்த்தியுள்ளார்கள். நிச்சயமாக அரையிறுதிக்கு தகுதியானவர்கள்.
இவ்வாறு மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
- டி20 உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
- இதையடுத்து டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
டிரினிடாட்:
டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவறவிட்டது. சூப்பர் 8 சுற்றில் வங்காளதேச அணியிடம் மற்றும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.
இதனால் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மோதிய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லுமா அல்லது வெளியேறுமா என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது.
இதையடுத்து, அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோர் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஐசிசி, அதில் இரு சாம்பியன்கள் என பதிவிட்டுள்ளது.
ஐ.சி.சி. வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் விராட் கோலி ஓய்வு பெறுகிறார் என்ற வதந்தியும் பரவி வருகிறது. இந்தப் பதிவின் மூலம் ஏற்கனவே ஓய்வை அறிவித்த வார்னருடன், விராட் கோலியும் ஓய்வை அறிவிக்க வேண்டும் என ஐசிசி வலியுறுத்துகிறதா என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
- இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
டிரினிடாட்:
டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிகள் நாளை நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அசாதாரண திறமையை வெளிப்படுத்த வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் பால் காலிங்வுட் தெரிவித்தார். இதுதொடர்பாக காலிங்வுட் கூறியதாவது:
இந்திய அணி இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் பும்ரா முழுமையான ஃபார்மில் உள்ளார்.
வேகம், துல்லியம் மற்றும் உயர்மட்ட செயல்திறனை பும்ரா வெளிப்படுத்தி வருகிறார். எந்த அணியும் அவரது செயல்பாட்டுக்கு விடைதர முடியாத வகையில் விளையாடி வருகிறார்.
இன்னிங்சில் 120 பந்துகள் மட்டுமே கொண்ட போட்டியில் பும்ரா மாதிரியான வீரர்கள் வீசும் அந்த 24 பந்துகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்துகின்றன.
சவாலான, கடினமான அமெரிக்க ஆடுகளத்தில் இந்திய அணி நன்றாக விளையாடியதைப் பார்க்க முடிந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி கேப்டன் ரோகித் சர்மா தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த முறை இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அணி அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
- நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
கிங்ஸ்டவுன்:
கிங்ஸ்டவுனில் நடந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.
இந்தப் போட்டியில் ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 150 விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் படைத்துள்ளார்.
ரஷித் கான் இதுவரை 92 போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
150 விக்கெட் வீழ்த்திய பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 164 விக்கெட்டுடன் முதலிடத்தில் உள்ளார்.
வங்காளதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறார்.
- பாரிசில் அடுத்த மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
- இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜூலை 27-ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
புதுடெல்லி:
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் ஜூலை 26 -ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும், ஹர்திக் சிங் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய அணி ஜூலை 27-ம் தேதி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
ஜப்பானின் டோக்கியோவில் கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- மோதிய இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
- சிலி, கனடா, பெரு அணிகள் காலிறுதிக்கு முன்னேற கடைசி ஆட்டத்தில் கடுமையாக போராடும் நிலை.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா- சிலி அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜென்டினா 1-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டம் முடியும் தருவாயில் அர்ஜென்டினா அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை கிடைத்தது. அந்த அணியின் மார்ட்டினேஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் "ஏ" பிரிவில் அர்ஜென்டினா இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கனடா 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
3 அணிகளின் காலிறுதி வாய்ப்பு
சிலி ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 3-வது இடத்தில் உள்ளது. பெரு ஒரு தோல்வி, ஒரு டிரா உடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நான்கு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கின்றன.
அர்ஜென்டினா பெருவை எதிர்கொள்கிறது. கனடா சிலியை எதிர்கொள்கிறது. கனடாவுக்கு எதிராக சிலி வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முன்னேற முடியும். டிரா செய்தால் கனடா முன்னேறி விடும்.
அதேபோல் அர்ஜென்டினாவுக்கு பெரு அதிர்ச்சி அளித்து, கனடா தோல்வியடைந்தால் சிலி, பெரு இடையே கோல் அடிப்படையில் காலிறுக்கு முன்னேறும் போட்டி நீடிக்கும்.
கனடா- பெரு போட்டி
மற்றொரு போட்டியில் கனடா- பெரு அணிகள் மோதின. இதில் கனடா 1-0 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் பெரு வீரர் மிகுயேல் அராயுஜோ சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். இதனால் பெரு 10 வீரர்களுடன் விளையாடும் நிலை ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கனடா 74 நிமிடத்தில் கோல் அடித்தது. ஜோனாதன் டேவிட் இந்த கோலை அடித்தார்.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகின்றன.
- முதல் அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டிரினிடாட்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து அரையிறுதி சுற்றுகள் நாளை தொடங்குகின்றன.
குரூப் 1 பிரிவில் முதல் இரு இடங்கள் பிடித்த இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் குரூப் 2 பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தரூபா பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில், தான் ஆடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
பேட்டிங்கில் டி காக் 199 ரன்கள், டேவிட் மில்லர் 148 ரன்கள், கிளாசென் 138 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 134 ரன்கள் அடித்துள்ளனர்.
பந்துவீச்சில் அன்ரிச் நார்ஜே 11 மற்றும் ரபாடா 10 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். கேசவ் மகராஜ் 9, ஷம்சி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதி வரை முன்னேறும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த முறை இறுதிப்போட்டிக்கு சென்று சாதித்துக் காட்டவேண்டும் என்ற எழுச்சியுடன் உள்ளது.
இதேபோல், ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை வலுவான அணிகளை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் உகாண்டா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தையும் வீழ்த்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது.
பேட்டிங்கில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 281 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சட்ரான் 229 ரன் அடித்து 3-வது இடத்தில் உள்ளர்.
பவுலிங்கில் ஃபசல்ஹக் பரூக்கி 7 போட்டியில் 16 விக்கெட் வீ்ழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார். கேப்டன் ரஷித் கான் 14 விக்கெட் எடுத்ததுடன், கடைசி கட்டங்களில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்கிறார். நவீன் உல் ஹக் 13 விக்கெட் எடுத்துள்ளார்.
எனவே இம்முறை ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைய கடுமையாகப் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான திரவிஸ் ஹெட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
- வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சாளர் தரவரிசையில் 44வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் நீடித்த இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான சூர்ய குமார் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவை வீழ்த்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான திரவிஸ் ஹெட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதேபோல், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சாளர் தரவரிசையில் 44வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் முதல் ஆண்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்தார்.
ஆனால் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கைத் தொடங்கும் போது ஹெட்டின் போர்க்குணமிக்க ஆட்டம் தரவரிசையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.
அந்த வகையில், ஹெட் நான்கு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்தார். சூர்யகுமார், பில் சால்ட், பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஒரு இடத்தைக் கீழே இறங்கி முதல் ஐந்து இடங்களைப் பிடித்தனர்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கடைசி சூப்பர் எட்டு ஆட்டத்தில் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தனர்.
ஹெட் ஏழு போட்டிகளில் 42 சராசரியாக 255 ரன்களை எடுத்தார். இந்த போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன்களில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 158 ஆகும். அங்கு ரன் குவிப்பது எளிதான பணியாக இல்லை.
இந்த உலகக் கோப்பையில் 139 ஸ்டிரைக் ரேட்டில் 149 ரன்கள் எடுத்த சூர்யகுமார், வரும் வியாழன் அன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்ளும் போது, மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெறுவார் என நம்பப்படுகிறது.
சூர்யா ஹெட்டை விட இரண்டு ரேட்டிங் புள்ளிகள் மட்டுமே பின்தங்கி இருக்கிறார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி, சனிக்கிழமையன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மற்றுமொரு கிராக் இருந்தால், அவர் மீண்டும் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆக முடியும்.
மார்கஸ் ஸ்டோனிஸ், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் அவர் நம்பர் 1 ஆக குறுகிய காலத்திற்குப் பிறகு முதல் இடத்தைப் பிடித்தார்.
ஸ்டோனிஸ் நான்காவது இடத்துக்கும், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்துக்கும், ஆப்கானிஸ்தானின் முகமது நபி இரண்டாவது இடத்துக்கும், இலங்கையின் வனிந்து ஹசரங்கா மீண்டும் முதலிடத்துக்கும் உள்ளனர்.
ஆல்-ரவுண்டர்களில் வெஸ்ட் இண்டீஸின் ரோஸ்டன் சேஸ் 17 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.






