என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியாவின் அபிஷேக் சர்மா சதமடித்தார்.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் அபிஷேக்குடன் இணைந்து பொறுமையாக ஆடினார்.

    முதலில் நிதானமாக ஆடிய அபிஷேக் சர்மா அரை சதம் கடந்தார். அதன்பின் அதிரடியில் இறங்கினார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    அறிமுகமான தொடரிலேயே அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார். அவர் 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் சதமடித்து அவுட்டானார்.

    • டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய சேப்பாக் அணி 166 ரன்களை எடுத்துள்ளது.

    சேலம்:

    டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் குமார், ஜெகதீசன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 58 ரன்கள் எடுத்த நிலையில், சந்தோஷ் குமார் 41 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெகதீசன் அரை சதம் கடந்தார். பாபா அபராஜித் 24 ரன்னும், சித்தார்த் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார்.

    நெல்லை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறஙகுகிறது.

    • இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது.
    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    ஹராரேவில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே நிர்ணயித்த 116 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 102 ரன்னுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, விளையாடுகிறது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்ட்சேவா உடன் மோதினார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 1-6, 2-6 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் யூலியா புடின்ட்சேவா 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • சேலத்தில் ஜூலை 11ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.
    • இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    சேலத்தில் ஜூலை 11-ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.

    இன்றைய முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி டாஸ் வென்றதை தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, பிரான்ஸ் வீரர் குயிண்டென் ஹேல்ஸ் உடன் மோதினார். இதில் 1-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • கனடா ஓபனில் பிரியன்ஷு ரஜாவத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • இவர் அரையிறுதியில் பிரான்ஸ் வீரரிடம் தோல்வி அடைந்தார்.

    ஒட்டாவா:

    கனடா ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று நேற்று நடந்தது. இதில், உலக தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள ரஜாவத், பிரான்ஸ் வீரர் அலெக்ஸ் லேனியரை எதிர்கொண்டார்.

    இதில் ரஜாவத் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் தோற்று அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    • எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
    • எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலத்தரப்பினரும் எம்.எஸ். டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    எம்.எஸ். டோனியின் பிறந்தநாளை ஒட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை எம்.எஸ்.டோனி பிடித்திருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பிறந்த நாள் தெரிவித்துள்ளது. 

    • இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற கடைசி கால் இறுதி போட்டியில் பிரேசில்-உருகுவே அணிகள் மோதின.
    • உருகுவேயிடம் பெனால்டி ஷூட்டில் தோற்று வெளியேறியது.

    லாஸ் வேகாஸ்:

    கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    இன்று அதிகாலை நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் கொலம்பியா -பனாமா அணிகள் மோதின.

    இதில் கொலம்பியா 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.ஜான் கோர்டோபா ( 8-வது நிமிடம்), ரோட்ரிக்ஸ் (15-வது நிமிடம். பெனால்டி) , லூயிஸ் டியாஸ் (41-வது நிமிடம்) , ரிச்சர்ட் ரியோஸ் ( 70-வது நிமிடம்) , போர்ஜா (94-வது நிமிடம். பெனால்டி) கோல் அடித்தனர்.

    இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற கடைசி கால் இறுதி போட்டியில் பிரேசில்-உருகுவே அணிகள் மோதின.

    முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனர். 74-வது நிமிடத்தில் உருகுவே வீரர் நான்டஸ் முரட்டு ஆட்டத்துக்காக 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்றார். இதனால் சிவப்பு அட்டையுடன் அவர் வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக 10 வீரர்களுடன் ஆடும் நிலை உருகுவேக்கு ஏற்பட்டது.

    ஆட்டத்தின் இறுதி வரையும், கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதனால் பெனால்டி "ஷூட் அவுட்" கடைபிடிக்கப்பட்டது.

    இதில் பிரேசில் அணி 2-4 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது. உருகுவே அரையிறுதிக்கு முன்னேறியது.

    பெனால்டி ஷூட் அவுட்டில் உருகுவே அணிக்காக வால்வர்ட், பென்டான்கர், அர்ராஸ்கேட்டா , உகர்டே கோல் அடித்தனர். ஜிம்மென்ஸ் வாய்ப்பை தவறவிட்டார். பிரேசில் அணியில் பெரைரா, மார்டினெலி கோல் அடித்தனர். மிலிட்டோ, டக்ளஸ் லூயிஸ் வாய்ப்பை தவறவிட்டனர்.

    10-ந் தேதி நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-கனடா அணிகளும், 11-ந்தேதி நடக்கும் 2-வது அரை இறுதியில் உருகுவே-கொலம்பியா அணிகளும் மோதுகின்றன.

    • இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களை பாகிஸ்தான் குவித்தது.
    • உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை 2024 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.

    இந்த லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்ரான் அக்மல் மற்றும் சர்ஜீல் கான் இந்திய அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். 30 பந்துகளில் 72 ரன்கள் குவித்து சர்ஜீல் கான் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கம்ரான் அக்மல் 77 ரன்களும் சோயப் மக்சூத் 51 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை பாகிஸ்தான் அணி குவித்தது.

    244 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், சோயப் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த சர்ஜீல் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது.

    • இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நடக்கிறது.
    • இந்திய அணி பந்து வீச்சு சிறப்பாக உள்ளது.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

    ஹராரேவில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வே நிர்ணயித்த 116 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 102 ரன்னுக்கு இந்தியா ஆல்-அவுட் ஆனது.

    இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஜிம்பாப்வேவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. ரவி பிஷ்னோய், முகேஷ்குமார், வாஷிங்டன் சுந்தர், அவேஷ்கான் ஆகியோர் உள்ளனர். பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். முன் வரிசை வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.

    சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி வெற்றி உத்வேகத்தை தொடர முயற்சிக்கும். அந்த அணியில் பென்னெட், மயர்ஸ், சத்தாரா, முசரபானி உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

    • எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
    • எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலத்தரப்பினரும் எம்.எஸ். டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், எம்.எஸ். டோனியின் பிறந்தநாளை ஒட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.

    டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பையை டோனியிடம் கொடுப்பது போன்ற AI படத்தை பகிர்ந்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அதில், 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல' என்று பதிவிட்டுள்ளது.

    ×