search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chepak Super Gillies"

    • நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.
    • அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.

    நெல்லை:

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நாளை இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் மதுரை ஸ்பார் டன்ஸ்கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடக்கிறது.

    கோவை அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த அணியில் கேப்டன் ஷாருக்கான், சுஜய், ராம் அரவிந்த், எம்.முகமது சித்தார்த், தாமரை கண்ணன், யுதீஸ்வரன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    கோவை அணியின் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன், முதல் தர போட்டிகளில் விளையாட இருப்பதால் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி உள்ளார்.

    மதுரை அணி 5 ஆட்டத் தில் 3 வெற்றி, 2 தோல்வி யுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே-ஆப் சுற்றை நெருங்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

    அந்த அணியில் கேப்டன் ஹரி நிஷாந்த், வாஷிங்டன் சுந்தர், கவுசிக், பி.சரவணன், முருகன் அஸ்வின், குர்ஜப்னீத்சிங், ஸ்வப்னில் சிங், அஜய் கிருஷ்ணா போன்ற வீரர்கள் உள்ளனர்.

    நெல்லையில் நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.

    அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க நாளைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி பெற வேண்டியது முக்கியமாகும். அதன்பின் மற்ற அணிகளின் போட்டி முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கில் ஜெகதீ சன், பாபா அபராஜித், சந்தோஷ் ஷிவ், பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் ரஹில் ஷா, ரோகித், ஹரீஷ் குமார், எம்.சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர்.

    திருச்சி அணி இதுவரை மோதிய 5 ஆட்டத்திலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும்.

    • முதலில் விளையாடிய நெல்லை அணி 140 ரன்கள் அடித்தது.
    • சேப்பாக் அணி வீரர் சாய் கிஷோர் 43 ரன்கள் குவித்தார்.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

    இந்த நிலையில் சேலத்தில் இன்று நடைபெற்ற முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ், கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடின.

    டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 33 ரன்கள் சேர்த்தார்.

    ஷாஜகான் 25, சஞ்சய் யாதவ் 21, கேப்டன் பாபா இந்திரஜித் 20, சூர்யபிரகாஷ் 19 ரன்கள் எடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த், சந்தீப் வாரியர், சோனு யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் கவுசிக் காந்தி 40 ரன் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் டக் அவுட்டானார்கள். சாய் கிஷோர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். சசியாதவ் 4 ரன்னுடன் வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த ராஜகோபால் சதீஷ், ஹரிஷ்குமார் ஜோடி அணியின் வெற்றிக்கு போராடியது.

    அதிரடி காட்டிய சதீஷ் 19 பந்துகளில் 31 ரன்கள் குவித்ததுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹரீஷ்குமார் 13 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். இதனையடுத்து சேப்பாக் அணி 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்ததுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி.என்.பி.எல்.இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

    ×