என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.
    • நியூசிலாந்தின் பிராண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

    இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸின் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 602 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.

    இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 88 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.

    பின்னர் நியூசிலாந்து ஃபாலோ ஆன் ஆனதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையிலும், டெவான் கான்வே 61 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 78 ரன்களையும், மிட்செல் சான்ட்னர் 67 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 360 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணியானது இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் 2-0-என டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவிய பட்சத்திலும் அந்த அணி கேப்டன் டிம் சவுத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி இப்போட்டியில் டிம் சவுத்தி ஒரு சிக்சரை விளாசியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்களை விளாசிய 7-வது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

    முன்னதாக வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா மற்றும் நியூசிலாந்து கேப்டன் டிம் சவுத்தி ஆகியோர் தலா 88 சிக்சர்களை விளாசி 7-ம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது, டிம் சவுத்தி 89 சிக்சர்களை விளாசி 7-ம் இடத்தை பிடித்துள்ளார்.

    அதேசமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 131 சிக்சர்களை விளாசி முதலிடத்திலும், நியூசிலாந்தின் பிராண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

    • அயர்லாந்து அணி தரப்பில் ரோஸ் சதம் விளாசினார்.
    • 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை அயர்லாந்து வீழ்த்தியது.

    தென் ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகள் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோஸ் சதம் விளாசினார்.

    இதனையடுத்து விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதனால் அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து அணி சரித்திர சாதனையை படைத்துள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 7-வது முறை மோதிய அயர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தி உள்ளது.

    • இங்கிலாந்துக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ஹாரி புரூக் அரை சதம் கடந்தார்.

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது வரை நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்தது.

    இதையடுத்து தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது பென் டக்கெட், ஹாரி புரூக் மற்றும் பில் சால்ட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இந்த விதியின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 20.4 ஓவரில் 49 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தது. இதன்காரணமாக ஆஸ்திரேலியா டக்வொர் லீவிஸ் விதிப்படி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

    அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் கேப்டனாக அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை முறியடித்து ஹாரி புரூக் புதிய சாதனை படைத்துள்ளார்.

    முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி 310 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஹாரி ப்ரூக் 312 ரன்களை எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்கள்

    312 - ஹாரி புரூக் (இங்கிலாந்து, 2024)

    310 - விராட் கோலி (இந்தியா, 2019)

    285 - எம்எஸ் டோனி (இந்தியா, 2009)

    278 - ஈயோன் மோர்கன் (இங்கிலாந்து, 2015)

    276 - பாபர் அசாம் (பாகிஸ்தான், 2022)

    • மெகா ஏலத்தில் பெங்களூரு அணிக்கு சவால் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
    • தேவையான வீரர்களை ஆர்.டி.எம். கார்டு மூலம் குறைவான தொகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் மாதம் நடக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்கும் பட்சத்தில் முதல் 3 வீரர்களுக்கு ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி வீதமும் கடைசி இரு வீரர்களுக்கு ரூ.18 கோடி, 14 கோடி வீதமும் ஊதியமாக வழங்க வேண்டும். ஏலத்தில் ஒரு அணி ரூ.120 கோடி வரை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. 5 வீரர்களை தக்க வைக்கும் போது அவர்களுக்குரிய மொத்த ஊதியம் ரூ.75 கோடி போக மீதமுள்ள ரூ.45 கோடியை வைத்து தான் ஏலத்தில் மற்ற வீரர்களை வாங்க முடியும்.

    இந்த நிலையில் ஐ.பி.எல்.-ல் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு வீரர்களை எடுப்பது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் சில யோசனைகளை தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில், 'ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பெங்களூரு அணிக்கு சவால் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் விராட் கோலியை தக்கவைத்துவிட்டு, மற்ற வீரர்கள் அனைவரையும் விடுவித்து விடலாம். பிறகு தேவையான வீரர்களை ஆர்.டி.எம். கார்டு மூலம் குறைவான தொகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    உதாரணமாக பெங்களூரு அணியில் ரஜத் படிதாரை விடுவித்து விட்டு பிறகு ஏலத்தில் அவரை ரூ.11 கோடி அல்லது அதற்கும் குறைவான தொகைக்கு ஆர்.டி.எம். சலுகை மூலம் வாங்க முடியும். அதே போல் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜையும் இழுத்துக் கொள்ளலாம். சிராஜை தக்க வைத்தால் ரூ.14 கோடி கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் ஏலத்தில் அவர் அவ்வளவு விலைக்கு போகமாட்டார்.

    எனவே பெங்களூரு அணியினர் புதிய மனநிலையுடன் ஏலத்துக்கு செல்ல வேண்டும். அந்த அணிக்கு விராட் கோலி தேவை. அவர் அணிக்காக பெரிய அளவில் பங்களிப்பு அளித்துள்ளார். அவர் மிகவும் முக்கியமான வீரர். அதனால் பெங்களூரு அணி அவரை சுற்றியே அணியை கட்டமைக்க வேண்டும் அல்லது புதிய சிந்தனையுடன் செயல்பட வேண்டும். இந்த அணியில் விராட் கோலியை தவிர மற்ற வீரர்களின் மதிப்பு ரூ.18 மற்றும் ரூ.14 கோடியாக இருப்பதை நினைத்து பார்க்க முடியாது' என்றார்.

    • 20.4 ஓவரின்போது மழை குறுக்கீடு செய்தது. அதன்பின் ஆட்டம் நடைபெறவில்லை.
    • டக்வொர்த் லீவிஸ் விதிப்படி அப்போது ஆஸ்திரேலியா 49 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு பிரிஸ்டோலில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து பென் டக்கெட் (107) சதத்தால் 309 ரன்கள் குவித்தது.

    பின்னர் 310 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் சிறப்பாக விளையாடி 30 பந்தில் 58 ரன்கள் விளாசினார். டிராவிஸ் ஹெட் 26 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.

    கேப்டன ஸ்டீவ் ஸ்மித் 48 பந்தில் 36 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 20 பந்தில் 28 ரன்களும் எடுத்திருந்தபோது மழை பெய்தது. அப்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. இந்த விதியின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 20.4 ஓவரில் 49 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தது. இதன்காரணமாக ஆஸ்திரேலியா டக்வொர் லீவிஸ் விதிப்படி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

     இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 எனக் கைப்பற்றியது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 20 ஓவர்கள் வீசப்பட்டால் மட்டுமே டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்படும். இங்கிலாந்து 4 பந்துகள் அதிகமாக வீசியதால் விதி பயன்படுத்தப்பட்டு இங்கிலாந்து தோல்வயிடைந்தது.

    டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
    • இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    டாக்கா:

    இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ,நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, மயங்க் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராகவும் ஜிதேஷ் சர்மா பேக்கப் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 ஆண்டுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வாகி உள்ளார்.

    ஐ.பி.எல். தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 150 கி.மீ. வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மயங்க் யாதவ் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    இந்நிலையில், இந்திய அணியுடனான டி20 தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியின் வீரர்கள் விவரம் வருமாறு:

    நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன் தமிம், பர்வேஸ் ஹொசைன் எமான், தவ்ஹித் ஹிருடோய், மஹ்மதுல்லா, லிட்டன் தாஸ், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ஷேக் மெஹிதி ஹசன், ரிஷத் ஹொசைன், முஸ்தபிசுர் ரகுமான், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.

    14 மாத இடைவெளிக்கு பிறகு ஆல் ரவுண்டரான மெஹிதி ஹசன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

    முக்கிய வீரரான ஷகிப் அல் ஹசன் டி20 போட்டியில் இருந்து சமீபத்தில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் காலிறுதிக்குள் நுழைந்தார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், டச்சு வீரரான கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இவர் நாளை நடைபெறும் காலிறுதியில் கரேன் கச்சனோவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

    மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் காரென் கச்சனாவ், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோவை எதிர்கொண்டார். இதில் கச்சனாவ் 7-6 (7-4), 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இங்கிலாந்து 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பிரிஸ்டோல்:

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன.

    இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் பிலிப் சால்ட் 27 பந்தில் 45 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய வில் ஜாக்ஸ் டக் அவுட்டானார்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த பென் டக்கெட், ஹாரி புரூக் ஜோடி அதிரடியில் மிரட்டியது. ஹாரி புரூக் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்த நிலையைல ஹாரி புரூக் 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் சதமடித்து அசத்தினார். அவர் 107 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் போராடிய அடில் ரஷித் 36 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா, ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

    • பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த முகமது யூசுப் இந்த முடிவை எடுத்துள்ளார்.
    • ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் இருந்து முகமது யூசுப் திடீரென விலகியுள்ளார்.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவில் இருந்து முகமது யூசுப் விலகியுள்ளார். பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தைச் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளது.

    இவர் ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.
    • டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு சரிந்தது.

    துபாய்:

    இலங்கை, நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டை வென்ற இலங்கை 3-வது இடத்தில் உள்ளது.

    டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து 3 இடங்கள் சரிந்து 7-வது இடத்திற்கு சென்றது.

    இங்கிலாந்து 4-வது இடத்திலும், வங்கதேசம் 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன.

    நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீரரான சின்னர் காலிறுதிக்குள் நுழைந்தார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ரோமன் சபியுலின் உடன் மோதினார். இதில் 2-6 என முதல் செட்டை இழந்த சின்னர், அடுத்த இரு செட்களையும் 6-2, 6-3 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் நம்பர் 3 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் அட்ரியன் மன்னார்னினோ உடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 7-6 (8-6), 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
    • வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்தது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த வாரம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

     


    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) துவங்கியது இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாளிலேயே மழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்திருந்தது.

     


    இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டமும் மழை காரணமாக தொடர்ந்து தாமதமாகி வந்தது. காலை முதலே பலமுறை களத்தில் விளையாடுவதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என்று அம்பயர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் ஆய்வு செய்து வந்தனர்.

    எனினும், போட்டி மதியம் வரையிலும் ஆடுகளம் போட்டியை நடத்த அனுமதிக்காத காரணத்தால், மூன்றாம் நாள் ஆட்டமும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது. மூன்றாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

    ×