என் மலர்
விளையாட்டு
- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 280 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து 125 ரன்னில் சுருண்டு பரிதாபம்.
நியூசிலாந்து- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து ஹாரி ப்ரூக் (123) சதத்தால் 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 125 ரன்னில் சுருண்டது. இதனால் 155 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. பென் டக்கெட் 92 ரன்களும், பெத்தேல் 96 ரன்களும் விளாசினர். ஹாரி ப்ரூக் 55 ரன்னில் வெளியேறினார்.
ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 73 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இங்கிலாந்து 5 விக்கெட் இழபபிற்கு 378 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது.
ஜோ ரூட் 73 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இங்கிலாந்து 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்யவில்லை.
நாளை காலை 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து விரைவாக ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய வாய்ப்புள்ளது. அல்லது ஜோ ரூட் சதம் அடித்ததும் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்யலாம். நியூசிலாந்து ஏறக்குறைய 600 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கலாம்.
முதல் டெஸ்டில் ஏற்கனவே இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்ற வாய்ப்புள்ளது.
- முதல் இன்னிங்சில் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தி இந்திய பேட்டிங் ஆர்டரை சீர்குலைத்தார்.
- ஐ.பி.எல். மெகா ஏலத்தில் டெல்லி அணி அவரை 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு பிங்க்-பால் போட்டியாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது. இதற்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்தான். இவர் 6 விக்கெட்டுகள் சாய்த்தார். நேர்த்தியான பவுன்சர் மற்றும் ஸ்விங் மூலம் இந்திய பேட்டிங் ஆர்டரை சீரிகுலைத்தார்.
இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் ஸ்டார்க்கை நோக்கி ஐபிஎல் தொடரில் சம்பளம் குறைக்கப்பட்டது தொடர்பாக கோசம் எழுப்பினர்.
கடந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவர் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த முறை நடைபெற்ற மெகா ஏலத்தில் 11.75 கோடி ரூபாய்க்கு டெல்லி எடுத்தது.
அவருடைய சம்பளம் 13 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்த நிலையில்தான் பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த மிட்செல் ஸ்டார்க்கை நோக்கி இந்திய ரசிகர்கள், ஐபிஎல், ஐபிஎல், ஸ்டார்க்கிற்கு ஐபிஎல் பிடிக்கும். கே.கே.ஆர்., கே.கே.ஆர். என கோஷம் எழுப்பினர்.
மேலும் கே.கே.ஆர். சம்பளத்தில் இருந்து எவ்வளவு (Howmuch) குறைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் கோசம் எழுப்பினர்.
- இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது.
- பின்னர் 33 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது. மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்துள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலியா கை ஓங்கியுள்ளது. இந்திய பந்து வீச்சாளர்கள் 33 ஓவர்கள் பந்து வீசியும் 1 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்த முடியவில்லை.
இந்த நிலையில் பேட்ஸ்மேன்களை எவ்வளவு விளையாட வைக்க முடியுமோ, அந்த அளவிற்கு விளையாட வைக்க வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "பேட்ஸ்மேன்களை எவ்வளவு விளையாட வைக்க முடியுமோ, அந்த அளவிற்கு விளையாட வைக்க வேண்டும். அப்படி விளையாட வைத்தால்தான், உங்களால் விக்கெட் வீழ்த்த முடியும்.
இரண்டு மூன்று பந்துகளை ஸ்டம்பிற்கு வெளியே (outside) வீச வேண்டும். அதன்பிறகு பந்தை உள்ளே கொண்டு வர வேண்டும். பெர்த் டெஸ்டில் லபுசேன் மற்றும் மெக்ஸ்வீனி ஆகியோருக்கு எதிராக பும்ரா செய்தது போன்ற செய்ய வேண்டும். பிங்க் பந்தை இந்திய பந்து வீச்சாளர்கள் போதிய அளவிற்கு பயன்படுத்தவில்லை" என்றார்.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அட்கின்சன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
வெல்லிங்டன்:
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் வெல்லிங்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. ஒரு கட்டத்தில் 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் ஹாரி ப்ரூக் (123) சதமும், ஒல்லி போப் (66) அரைசதமும் அடிக்க இங்கிலாந்து 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டும், ஓருக்கே 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். கேன் வில்லியம்சன் ஓரளவு தாக்குப்பிடித்து 37 ரன்கள் எடுத்தார். இறுதியில், நியூசிலாந்து முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அட்கின்சன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன், பிரைடன் கேர்ஸ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
- தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்தது.
- இலங்கையின் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
கெபேஹா:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நாடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன் சிறப்பாக ஆடி சதமடித்தனர். அரை சதமடித்த பவுமா 78 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இலங்கை சார்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டும், அசிதா பெர்னண்டோ 3, விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கை இரண்டாவது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 89 ரன்னில் வெளியேறினார்.
- கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை காலிறுதியில் வெற்றி பெற்றார்.
கவுகாத்தி:
கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் அன்மோல் கர்ப், தாய்லாந்து வீராங்கனையுடன் மோதினார்.
இதில் அன்மோல் கர்ப் 21-13, 22-24, 22-20 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 14 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
- முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஆஸ்திரேலிய சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அடிலெய்டு:
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய சார்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடங்கியது. கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. மெக்ஸ்வீனி 38 ரன்னும், லபுஸ்சேன் 20 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா இன்னும் 94 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் கவாஜா விக்கெட்டை வீழ்த்திய பும்ரா இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் 50 விக்கெட் எடுத்த 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா சமன் செய்தார்.
இதற்கு முன் 1979, 1983-ம் ஆண்டுகளில் கபில் தேவ் 2 முறை 50 விக்கெட்டுகளை எடுத்து அந்த சாதனையை முதல் முறையாக படைத்திருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஜாகிர் கான் 2002-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர்களுக்கு பின்னர் இப்போது தான் பும்ரா 22 வருடங்கள் கழித்து ஒரே வருடத்தில் 50 விக்கெட் எடுத்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
- டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷார்ஜா:
11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை , வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், 2வது அரையிறுதியில் இலங்கை, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லக்வின் அபேசிங்க 69 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட், ஆயுஷ் மத்ரே, கிரண் சோர்மலே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இலங்கை பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
ஆயுஷ் மத்ரே 34 ரன்னிலும், ஆண்ட்ரே சித்தார்த் 22 ரன்னிலும் அவுட்டாகினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி அரை சதமடித்து 67 ரன்னுக்கு அவுட்டானார்.
இறுதியில் இந்தியா 21.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷி க்கு வழங்கப்பட்டது.
முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை சுருட்டி எளிதில் வீழ்த்தியது வங்கதேசம். இறுதிப்போட்டியில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதுகிறது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் தமிழ் தலைவாஸ் அணி 6வது வெற்றியைப் பதிவு செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ் புள்ளிகளை குவித்தது.
இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 40-27 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி 6வது வெற்றியைப் பதிவு செய்தது.
16 போட்டிகளில் விளையாடிய தமிழ் தலைவாஸ் 6 வெற்றி, 9 தோல்வி, ஒரு டிரா என மொத்தம் 38 புள்ளிகளைப் பெற்று 9வது இடத்தில் உள்ளது.
மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 42-36 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. மேலும்
புள்ளிப் பட்டியலில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி முதல் இடத்தில் நீடித்து வருகிறது.
- முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்.
- இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று காலை (இந்திய நேரப்படி 9.30) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா தரப்பில் கே.எல். ராகுல், சுப்மன் கில் முறையே 37 மற்றும் 31 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் நிதிஷ் குமார் 42 ரன்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 22 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய உஸ்மான் குவாஜா பும்ரா வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் பொறுமையாக ஆடினர். நாதன் மெக்ஸ்வீனி மற்றும் லபுஷேன் ஜோடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தாமல், அவுட் ஆகாமல் களத்தில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கவனமாக ஆடினர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் வெறும் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 94 ரன்கள் பின்தங்கியுள்ளது.
- கே.எல். ராகுல் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.
- நிதிஷ் குமார் 42 ரன்களை எடுத்தார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று காலை (இந்திய நேரப்படி 9.30) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் பந்தில் ஜெய்ஸ்வால் எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.
கே.எல். ராகுல், சுப்மன் கில் முறையே 37 மற்றும் 31 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் நிதிஷ் குமார் 42 ரன்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 22 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- கேன் வில்லியம்சன் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- தொடக்க வீரர்களான டாம் லாதம் (17), டேவன் கான்வே (11) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் ஹாரி ப்ரூக் (123) சதமும், ஒல்லி போப் (66) அரைசதமும் அடிக்க இங்கிலாந்து 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். தொடங்க வீரர்களான டாம் லாதம் (17), டேவன் கான்வே (11) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கேன் வில்லியம்சன் தாக்குப்பிடித்து 37 ரன்கள் அடித்தார். ரச்சின் ரவீந்திரா 3 ரன்னிலும், டேரில் மிட்செல் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. ஓ'ரூக்கே ரன்ஏதும் எடுக்காமலும், பிளெண்டல் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து முதல் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.






