என் மலர்
புதுச்சேரி
- நான் அ.தி.மு.க.வில் 40 ஆண்டுக்கு மேலாக கட்சி உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன்.
- பல்வேறு பொறுப்புகளும் ஜெயலலிதாவால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க.வில் ஜெ.பேரவை செயலாளராக இருந்தவர் பாஸ்கர்.
இவர் கடந்த 2006 முதல் 2011 வரை புதுவை நகராட்சி கோலாஸ் நகர் வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். 2011, 2016-ம் ஆண்டுகளில் புதுவை முதலியார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாஸ்கர் தோல்வியடைந்தார். இருப்பினும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் திடீரென இன்று அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தான் விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நான் அ.தி.மு.க.வில் 40 ஆண்டுக்கு மேலாக கட்சி உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் ஜெயலலிதாவால் அளிக்கப் பெற்று பணியாற்றி வந்தேன்.
ஜெயலலிதா அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுவை நகராட்சியில் கவுன்சிலராகவும், 2 முறை தொடர்ந்து முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன்.
2021-ம் ஆண்டு கட்சி பொதுச்செயலாளர் ஆகிய தாங்கள் எனக்கு மீண்டும் முதலியார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தீர்கள்.
நான் தொடர்ந்து கட்சி பணியாற்றி கவுன்சிலராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் சேவை செய்யவும் எனது அரசியல் குரு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தார்கள்.
மேலும் அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் பேரில் கட்சி வளர்ச்சிக்கும் வார்டு மற்றும் தொகுதி வளர்ச்சிக்கும் பல்வேறு பணிகளை செய்து மக்களிடம் நற்பெயரும் பெற்றுள்ளேன்.
தற்போது என்னால் தொடர்ந்து கட்சிப் பணியாற்ற இயலாத சூழல் உள்ளது. எனவே நான் வகித்து வரும் புதுவை மாநில ஜெ.பேரவை செயலாளர் மற்றும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன். கட்சி சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடியார், எனது அரசியல் குரு புதுவை மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரின் அண்ணன் அன்பழகன் புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். பதவி விலகிய பாஸ்கர் மாற்று கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.
புதுவை, வில்லியனூர் குடிநீர் பிரிவு, நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணிவரை நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மடுகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
- மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வில்லியனூர் குடிநீர் பிரிவு மடுகரை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிமுதல் 2 மணிவரை மடுகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.
- வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் சுட்டெரித்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வந்தது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15-ந் தேதி முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. அவ்வப்போது மழையும் பெய்தது.
இதனிடேயே வங்கக்கடலில் அக்டோபர் 27-ந் தேதி மோந்தா புயல் உருவானது. இந்த புயல் புதுச்சேரியை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்தது. ஆனால் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது.
இருப்பினும், புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை சுற்றி உள்ள தமிழக பகுதிகளில் கன மழை பெய்தது. புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களில் வெள்ள நீர் நிரம்பியது.
அதே நேரம் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பெய்த கனமழையால் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.
இந்த மாத தொடக்கத்தில் மழை இல்லை. பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்தது. ஆனால் இடையில் சில நாட்கள் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது.
இன்று அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. அதோடு வானம் இருண்டு காணப்படுகிறது.
இதனிடையே பருவமழையின் தொடர்ச்சியாக இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) கனமழை மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் காற்று மணிக்கு 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும்படியும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.
- அண்மையில் புதுச்சேரி காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
- உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் ஜீப்பில் புதுச்சேரிக்கு கோர்ட்டு விசாரணைக்கு வந்தனர்.
பின்னர் வழக்கு விசாரணை முடித்து மாலை மீண்டும் ஏனாம் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஏனாமில் தடை செய்யப்பட்ட மதுவகையான கள்ளை ஆந்திர மாநிலம் நெல்லூரில் பாட்டில் பாட்டிலாக வாங்கினர்.
ஓடும் ஜீப்பிலேயே அவர்கள் கள்ளு குடிக்க தொடங்கினர். போதை தலைக்கேறியதால் பாடல்களை போட்டு நடனமாடினர். ஏனாம் வரை குடித்து செல்வதற்கு போதுமான அளவிற்கு 'கள்' பாட்டில் வைத்திருந்தனர்.
பணியில் இருந்து கொண்டு 'கள்' குடித்து அட்டகாசம் செய்ததுடன் அதனை தைரியமாக அவர்களது வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளனர்.
போலீசார் 'கள்' குடித்து ஆட்டம் போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
அண்மையில் புதுச்சேரி காவல்துறையில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த பட்டியலில் ஏனாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இடம்பெறுவதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.
இதனை "ஜஸ்ட் மிஸ்டு" என்று அவர் தனது குழுவில் கோடிட்டு காண்பித்துள்ளார். அதற்காக ஜீப்பில் பார்ட்டி வைப்பதாக அவர் கூறியுள்ளார். சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே 'கள்' குடித்து ஆட்டம் போட்டு அதை சமூக வலைதளத்தில் பரப்பி இருப்பது புதுச்சேரி காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
- விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
- பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும்.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுவதால் புதுச்சேரியில் நாளை (15.11.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்து.
டெட் தேர்வு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
நாளைய விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த ஆண்டு ஜன. 3ம் தேதி வேலைநாளாக செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
- காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
- சூரியகாந்தி நகர், எழில்நகர், செயின்ட் சீமோன்பேட், ஜெகராஜ் நகர்,
புதுச்சேரி:
புதுவை மின்துறை நகர செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை வெங்கட்டாநகர் துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் ஒயிட் டவுன் கிழக்கு பகுதி, முத்தியால்பேட்டை வடக்கு பகுதி, சாரம், காமராஜர் சாலை, அண்ணாசாலை, கிருஷ்ணா நகர் (பகுதி) மேற்கு பகுதி, கோவிந்தசாலை, மறைமலை அடிகள் சாலை தெற்கு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 முதல் மதியம் 12 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருவள்ளுவர் நகர், முத்தியால்பேட்டை, சூரியகாந்தி நகர், எழில்நகர், செயின்ட் சீமோன்பேட், ஜெகராஜ் நகர், கருவடிகுப்பம் ரேடு, தெபெசன்பேட், விஸ்வநாதன் நகர், ரெயின்போ நகர் 9-வது குறுக்கு வீதி, ஆதிபராசக்தி கோவில் வீதி, சித்தன்குடி, நேரு நகர், ராஜீவ்காந்தி நகர், இளங்கோ நகர் (பகுதி), காமராஜ் சாலை (பகுதி), சாந்தி நகர், கோவிந்தசாலை (பகுதி), சாரம், ராஜா அய்யர் தோட்டம், சக்தி நகர், லெனின் வீதி(பகுதி), சத்தியா நகர் (பகுதி) ஆகிய பகுதிகளில் நாளை புதன்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மீண்டும் அவருக்கு காய்ச்சல் அதிகமானது.
- ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சரளா (வயது 45). அவரது கணவர் ராமு ஏற்கனவே இறந்து விட்டார்.
இவர்களது மூத்த மகள் லோகேஸ்வரி (21), இவர் கோரிமேடு அன்னை தெரசா அரசு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை புதுச்சேரி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்த போது டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து அவரை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே லோகேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு நர்சிங் கல்லூரி மாணவி பலியான சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 1948-ம் ஆண்டு தொழிற் சாலை சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
- பெண் ஊழியர்களை எந்தவொரு தொழிற்சாலை அல்லது தொழில்துறையிலும் இரவு 10 மணி வரை பணியமர்த்த அனுமதிக்கிறது.
புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் வேலை நேரம் இரவு 7 மணி வரை என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர் துறை அறிவித்திருந்தது.
மேலும் இரவு 7 மணிக்கு மேல் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு தொழிற்சாலைகள் சார்பில் வாகன வசதி செய்து தரவேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் வேலை நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி தொழிலாளர் துறை செயலர் ஸ்மிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1948-ம் ஆண்டு தொழிற் சாலை சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதில் தற்போது பெண் ஊழியர்களை எந்தவொரு தொழிற்சாலை அல்லது தொழில்துறையிலும் இரவு 10 மணி வரை பணியமர்த்த அனுமதிக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம் முன்னர் அனுமதிக்கப்பட்ட வேலை நேரம் இரவு 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு முன், பெண்கள் இரவு ஷிப்டுகளில் இரவு 7 மணி வரை மட்டுமே வேலை செய்ய முடியும்.
இதன் மூலம், தொழிற்சாலைகளில் இரவு நேரப் பணிகளின்போது பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் வேலை தொடர்பான நெகிழ்வுத்தன்மையை அதிகரித்துள்ளது. பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனைப் பேணுவதோடு, சம வாய்ப்புகளை ஊக்குவித்தல், பாலின சமத்துவத்தை உறுதி செய்தல், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார பங்களிப்பை செயல்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு புதுச்சேரி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெண் ஊழியர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- போக்குவரத்து துறையின் வலைத்தளம் மற்றும் அரசு டிஜிட்டல் சேனல்களிலும் அதிகாரப்பூர்வ பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு அங்கீகாரத்துடன் பாதுகாப்பான பயணத்துக்கான 'நம்ம ஊரு டாக்டாக்ஸி' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த செயலியில் நியாயமான கட்டணம், நேரடி சவாரி கண்காணிப்பு, சரி பார்க்கப்பட்ட ஓட்டுனர் சுய விவரம், 24 மணி நேரமும் உதவி மையம், எஸ்.ஓ.எஸ். பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த செயலி புதுச்சேரியில் எலெக்ட்ரிக் ஆட்டோ மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் மிகவும் எளிதாக பயன்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கிலத்தில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது. பணம் அல்லது யு.பி.ஐ. கட்டண பரிவர்த்தனை மூலம் கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது.
பொதுமக்கள் நம்ம ஊரு டாக்ஸி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பயணிகளுக்கும், எலெக்ட்ரிக் ஆட்டோ, ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் தனித்தனி செயலிகள் உள்ளது.
போக்குவரத்து துறையின் வலைத்தளம் மற்றும் அரசு டிஜிட்டல் சேனல்களிலும் அதிகாரப்பூர்வ பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும்.
இந்த தகவலை புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
- 1 யூனிட்டுக்கு ரூ.2.70ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை, 1 யூனிட்டுக்கு ரூ.2.70ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 லிருந்து ரூ.6 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை.
- 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் இடையே இன்றிரவு தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே, 'மோன்தா' புயல் எதிரொலியாக ஏனாமில் இன்று பகல் 12 மணிக்கே கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி அன்கித் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 1800 4252303, 0884-2321223, 0884-2323200 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது.






