என் மலர்
தேர்தல் செய்திகள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர்கள் மீது அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு தென்னிலையில் திறந்தவேன் மூலம் கமல்ஹாசன் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் தொப்பம்பட்டி, நொய்யல், தளவாபாளையம் ஆகிய இடங்களில் வேட்பாளர் மோகன்ராஜிக்கு ஆதரவு கேட்டு தொடர்ந்து பேசுகிறார். வேலாயுதம்பாளையம் மலைவீதியில் இரவு 8.15 மணியளவில் நடக்கிற பொதுக்கூட்டத்திலும் அவர் பங்கேற்று பேசுகிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பா.ம.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் கந்தம்பாளையம் பகுதியில் நடந்தது. இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
பல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை. ஆளும் கட்சியால் மட்டுமே திட்டங்களை கொடுத்திட முடியும் என்பதால், அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி உறுதியாகிவிட்டது.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேலாயுதம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் கதவணை கட்ட முதலமைச்சரே திட்டம் அறிவித்திருக்கிறார். இதே திட்டத்தை ஸ்டாலினும் அறிவித்துள்ளார். ஸ்டாலின் சொல்வதற்கும், முதலமைச்சர் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.
இதில் அரசு சார்பில் சொல்வது தான் நிறைவேறும். அது தான் எதார்த்தம். ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை 100 முறை சொன்னாலும் அது நிறைவேறாது. ஆனால் முதலமைச்சர் ஒரு முறை சொன்னாலே அது நடக்கும்.
அ.தி.மு.க. தோற்க வேண்டும் என்பது தான் டி.டி.வி. தினகரனின் ஆசை. தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. ஆனால் எங்களது (அ.தி.மு.க. கூட்டணி) ஆசை என்னவென்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்க வேண்டும் என வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கிறது.
1½ மாத காலமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின் எந்த வளர்ச்சியை பற்றியும் பேசவில்லை. என்னை, மருத்துவர் ஐயாவை (ராமதாஸ்), முதலமைச்சர், துணை முதலமைச்சர், மோடி ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார். ஆனால் நாங்கள் நாகரீக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம்.
ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்றார் ஸ்டாலின். ஆனால் ராகுலே அதனை ஏற்கவில்லை. பின்னர் மேற்கு வங்கம் சென்ற அவர், தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை சொல்வோம் என பேச்சை மாற்றிவிட்டார். இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார். ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது.
இதனை தெரிந்து கொண்டு 3-வது அணிக்கு போகும் நோக்கில், சந்திரசேகரராவிடம் ஒரு மணிநேரம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் இருந்து மிகுந்த குழப்பத்தில் எதிரணி இருப்பது தெரிகிறது. ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார்.
நீட் தேர்வை ரத்து செய்வேன் என அவர் கூறுகிறார். ஆனால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியின் இருந்த நேரத்தில்தான் அனுமதிக்கப்பட்டது. காவிரியில் டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது தி.மு.க. ஆனால் அதை எதிர்த்து ஸ்டாலின் போராடுகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது கருணாநிதி. அதன் விரிவாக்கத்துக்கு கையெழுத்து போட்டது அன்றைய தொழில்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின்.
அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறார். இலங்கையில் சிங்கள வெறியர்கள் தமிழர்களை கொன்று குவித்தார்கள். அந்த வெறியர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும், இலங்கை பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதன் அடிப்படையில் முதலீடு செய்திருக்கிறார். ஏன் தமிழ்நாட்டில் அவர் முதலீடு செய்யவில்லை?. இதற்கு என்ன ஸ்டாலின் பதில் சொல்ல போகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரூர்:
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலார் டி.டி.வி. தினகரன் அரவக்குறிச்சி புங்கம்பாடி பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுக்கு எல்லா தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என பயம் வந்து விட்டது. துரோகம் என்றைக்கும் வென்றதாக வரலாறு கிடையாது. 18 தொகுதிகளிலும் தோற்று விடுவோம் என்ற பயத்தில் எனது ஆதரவாளர்களான 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய நோட்டீசு அனுப்பியுள்ளனர். அதற்கு நீதிமன்றம் தடைவிதித்து விட்டது.
நடிகர் கமலஹாசன் தேவையில்லாமல் சினிமா வசனம் போல இங்கு பேசியுள்ளார். ஒரு பரபரப்பை உண்டாக்குவதற்காக அவர் பேசியிருக்கிறார். கமல் விஸ்வரூபம் என்ற ஒரு படம் எடுத்தார். பின்னர் அந்த படம் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து நாட்டை விட்டே போய் விடுவேன் என கமலஹாசன் தெரிவித்தார்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக படம் எடுத்ததாக சந்தேகம் வந்ததால், அந்த படத்தை விளக்க வேண்டியது படத் தயாரிப்பாளர்களின் கடமை. நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக அதனை சரி செய்ய ஜெயலலிதா கூறினார். இதனால் ஜெயலலிதா மீது அவருக்கு கோபம்.
எந்த மதத்தையும் புண்படுத்தி பேச வேண்டிய அவசியம் என்ன? இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என மதம் பற்றி எதுக்கு பேசவேண்டும். யாரோ ஒருத்தர் கொலைகாரர் என்றால் அதற்காக மதத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றதை யாருமே எற்றுக் கொள்ளமாட்டோம். அவர் என்ன மதம் என்று பார்த்துக் கொண்டிருப்போமா?
இந்திராகாந்தியை ஒரு சீக்கியர் கொன்றார். ஆனால் மன்மோகன்சிங்கை பிரதமராக்கினார் சோனியாகாந்தி. கோட்சே எந்த மதம் என்றே நமக்கு தெரியவில்லை. அந்த பெயர் ரஷ்யன் பெயர் போல உள்ளது. அந்த கோட்சேவை இந்து பயங்கரவாதி என பேசியிருக்கிறார். இது தேவையா? காந்தியடிகளை கோட்சே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதில் மதம் எங்கிருந்து வந்தது.
தமிழக அரசு சினிமாவை போல ஏதோ செய்துவிடும் என அவரே (கமலஹாசன்) பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்றார். கமலஹாசனின் நாக்கை வெட்டுவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார். இது தவறில்லையா?
துரோகத்தை பற்றி நான் பேசினால் வழக்கு போடுவோம் என்கின்றனர். நீங்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் பார்த்துக்கொள்ளலாம். வருகிற 23-ந்தேதிக்கு பின்னர் நீங்கள் வழக்குபோட இருக்கிறீர்களா? என்று பார்ப்போம். உங்கள் மீதும் வழக்குவராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நம்மகூட இருந்து ஓடிப் போன செந்தில் பாலாஜி என்னை அரவக்குறிச்சிக்கு அழைத்து வந்து மக்களுக்காக உண்ணாவிரம் இருக்க வைத்தார். இப்போது பா.ஜ.க.வின் சி. டீம் என அவர் பேசுகிறார். அவருக்கு இந்த தேர்தலில் தக்க பாடத்தினை புகட்ட வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு பா.ஜ.க., சந்திரசேகரராவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுடன் தி.மு.க. பேசிய உண்மையை தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொடைக்கானல்:
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கொடைக்கானலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விஸ்வரூபம் படம் வெளியாகும்போது முஸ்லீம்களால் கமல்ஹாசனுக்கு கடுமையான மிரட்டல் வந்தது. பின்னர் அவர்களது காலில் விழுந்து தனது படத்தை வெளியிடும்படி கெஞ்சினார்.
அத்தகைய கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்றும், கோட்சேவை தரக்குறைவாகவும் விமர்சிக்க தகுதியற்றவர். பள்ளிக் கூடத்திற்கே செல்லாமல் இடைநின்ற மாணவரான கமல்ஹாசனுக்கு இந்துக்களின் வரலாறு எப்படி தெரியும். அவருக்கு வருகிற தேர்தலில் மக்கள் தெளிவான பாடத்தை புகட்டுவார்கள். 100 ஓட்டுகள் வாங்க வேண்டும் என்பதற்காக பள்ளப் பட்டியில் கமல்ஹாசன் இந்துக்களை தீவிரவாதி என்று கூறி உள்ளார்.

அவரது கருத்துக்கு கே.எஸ்.அழகிரி, வீரமணி போன்றவர்கள் ஆதரவு தெரித்துள்ளனர். அவர்களும் இந்துக்களுக்கு எதிரானவர்களே. வருகிற தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கு போட்டு வாக்காளர்களிடம் கதை சொல்லி வருகிறார். ஜூன் 3-ந் தேதி தான் முதல்-அமைச்சராக பதவி ஏற்பேன் என்று கூறுகிறார். இது அவரது கனவு மட்டுமே. ஒருபோதும் பலிக்காது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சரக்குக்கும், முருக்குக்கும் சொந்தக்காரர். எனவே அவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவாகத்தான் பேசுவார். இதில் வியப்பு இல்லை.
ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஊழல் புகாரில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்கள். அவர்களது ஊழலை நாடே அறியும். தான் நின்றால் தோற்று விடுவோம் என்பதால்தான் தனது மகனை ப.சிதம்பரம் நிறுத்தினார். இருந்தாலும் அவரும் வெற்றி பெறப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகார் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

55 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் ஆட்சியில் செய்யமுடியாத முன்னேற்றத்தை, எங்கள் பாஜக ஆட்சி 55 மாதங்களில் செய்து முடித்திருக்கிறது. 5 ஆண்டுகளில் கரை படியாத நேர்மையான ஆட்சியினை பாஜக நடத்தி இருக்கிறது. மேலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. நான் இதை கோவில் நகரமான தியோகார் பகுதியில் இருந்து கூறுவதை பெருமையாக கருதுகிறேன்.
இது மட்டுமின்றி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான அரசை நடத்தும் பொறுப்பை தந்துள்ளனர். இதனால் மிகுந்த பெருமைக்குரியவன் ஆகிறேன். உங்கள் காவலாளியான நான் எப்போதும் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவதையே கடமையாக கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.






