என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஆலங்குளம் பஸ் நிறுத்தத்தில் மர்மமாக கல்லூரி மாணவர் இறந்து கிடந்தார்.
    • கொலையா? போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமுருகன். இவரது மகன் விஜயகுமார் (வயது19). இவர் ஆலங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலையில் கே.லெட்சுமியாபுரம் பஸ் நிறுத்தத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவரது மூக்கு, கால் முட்டிகள், இடுப்பு பகுதிகளில் காயங்கள் இருந்தன. இடது கண் அருகிலும் காயம் இருந்துள்ளது. இதுகுறித்து ஜோதிமுருகன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவர் எப்படி இறந்தார்? அவர் சாவுக்கான காரணம் என்ன? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் கடைகள் வைக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி சதுரகிரி பழங்குடியினத்தை சேர்ந்த 84 குடும்பங்கள் கடந்த 9-ந்தேதி முதல் சதுரகிரி மலையில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியான சதுரகிரி மலை மேல் பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர்.

    அவர்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் மலை அடிவாரத்திற்கு அழைத்து வந்து தங்க வைத்தனர். பழங்குடியின மக்களுக்காக அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. அடிவாரத்திற்கு வந்த பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாரத்திற்காக சதுரகிரி மலைக்கு சென்று தேன், கிழங்கு, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்று வந்தனர்.

    இந்த நிலையில் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை புலிகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்தது. அதன்பின் வத்திராயிருப்பு, சதுரகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட மலை பகுதிகளை வனத்துறையினர் தங்களது தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்தனர். சதுரகிரி மலைக்கு சென்று பொருட்களை சேகரிக்கவும் பழங்குடியின மக்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

    மேலும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் மலை பாதைகளில் கடைகள் வைக்கவும் பழங்குடியின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். மலை பகுதிகளில் உள்ள தங்களது பாரம்பரிய உரிமையை உறுதி செய்ய வேண்டும். மீண்டும் மலையில் பொருட்களை சேகரிக்கவும், கடைகள் அமைக்கவும் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பாக புகார் அளிக்க வந்த பழங்குடியினரையும் வனத்துறையினர் விரட்டி அவர்களின் பொருட்களை சேதப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதுரகிரி பழங்குடியினத்தை சேர்ந்த 84 குடும்பங்கள் கடந்த 9-ந்தேதி முதல் சதுரகிரி மலையில் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளுடன் சென்ற அவர்கள் அங்கேயே சமைத்து தங்கி உள்ளனர். சதுரகிரி மலைக்கு மேலே உள்ள குத்துக்கல், பூலாம்பாறை ஆகிய பகுதிகளில் தங்கியிருக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 4-வது நாளாக இன்றும் பழங்குடியின மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வனத்துறையினரின் கெடுபிடியை கண்டித்து பழங்குடியின மக்கள் நடத்தும் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் கடைகள் வைக்க வனத்துறையினர் தடை விதித்தனர். கடைகள் வைக்க அனுமதி வழங்க கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் மலை அடிவாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • விருதுநகர் ஊராட்சி பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தண்ட பாணி உள்பட பலர் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ.16.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வரும் ஆண்களுக்கான கழிவறை கட்டிடங்களையும், ரூ.16.60 லட்சம் மதிப்பில் பெண்க ளுக்கான கழிவறை கட்டி டங்களையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.48.75 லட்சம் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை எண்-7 முதல் பனைநகர் வரை சாலை அமைக்கப்படும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சத்திரெட்டி யாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.4.65 லட்சம் மதிப்பில் மிதிவண்டி நிறுத்தம் அமைக்கப் பட்டுள்ளதையும், ரூ.5.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமையல் அறையையும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    பின்னர், சத்திரெட்டி யாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவி களுடன் இலக்கை நிர்ணயிப்பது, அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வது குறித்தும், உயர்கல்விக்கு தேசிய அளவில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினார்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தண்டபாணி உள்பட பலர் இருந்தனர்.

    • பழுதடைந்த சாலைகளை செப்பனிட கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
    • ரெயில்வே பீடர் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை அகற்றிவிட்டு காங்கிரட் சாலை அமைத்திட வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தென்காசி நெடுஞ்சாலையில் உள்ள சொக்கர் கோவில் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்கள் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பது போல் நடித்துக் காண்பித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம் பகுதியில் உள்ள மோசமாக உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும். பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோவில் வரை பாதாள சாக்கடை தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு சேதமடைந்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீர் அமைத்திட வேண்டும். காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து ராஜபாளையம் ரயில் நிலையம் நோக்கிச் செல்லும் ரயில்வே பீட்டர் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை அகற்றிவிட்டு காங்கிரட் சாலை அமைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • பிளஸ்-2 மாணவி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள சேஷபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய பெண், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வளர்மதி(34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். வளர்மதிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வளர்மதி மகளுடன் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சிவகாசி பராசக்தி காலனி யை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று சலூன் கடைக்கு சென்று மாணவர் முடி வெட்டிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது தந்தை முடியை சரியாக வெட்ட வில்லை என கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவர் தொப்பி அணிந்து கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் தொப்பி அணிந்துவர தடை விதித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
    • கிருஷ்ணன் கோவில், ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூரை சேர்ந்த வர் முனீஸ்வரன் (வயது29), ஆட்டோ டிரைவரான இவர், சம்பவத்தன்று பெண் பயணியை ஏற்றிக்கொண்டு சவாரி புறப்பட்டார். வத்திராயிருப்பு ரோட்டில் சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் படுகாய மடைந்த முனீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    ஆட்டோவில் பயணம் செய்த கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த பேராசிரியை சைலஜா காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல் கங்கா குளத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது23). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் வெற்றி கணேஷ்(26). இவர் சம்ப வத்தன்று தூத்துக்குடி -மதுரை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாய மடைந்த வெற்றி கணேஷ் பரிதாபமாக இறந்தார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 வயதுக்கு உட்பட்டோர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் மலையேற அனுமதி கிடையாது.
    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள ஊஞ்சிக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    கடல் மட்டத்தில் இருந்து 3000 அடிக்கு மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி உள்ளதால் மலையேறும் பக்தர்களுக்கு கெடுபிடிகள் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வருடமும் ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் அதிக அளவில் திரளுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாளை (12-ந்தேதி) முதல் 17-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    10 வயதுக்கு உட்பட்டோர்களும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் மலையேற அனுமதி கிடையாது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது. இரவில் மலை கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    நாளை முதல் பக்தர்கள் சதுரகிரிக்கு வரத்தொடங்குவார்கள் என்பதால் இந்தமுறை ஆடி அமாவாசைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் குவிவார்கள் என தெரிகிறது. இதையொட்டி வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் பாதுகாப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதுரகிரியை ஒட்டியுள்ள ஊஞ்சிக்கல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. இதன் காரணமாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் சதுரகிரி மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிகிறது.

    • இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர்புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் பல்வேறு வாகனங்களிலும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.

    இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் சாத்தூரிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர்புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜை தொடங்கியது.

    இதன் பின்னர் சின்னமாரியம்மன் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் இன்று மதியம் 2 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அர்ச்சுனா ஆற்றை கடந்து சந்நதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிக்காக சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்துள்ளனர். கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான (பொறுப்பு) வளர்மதி, பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • சாத்தூர் மெயின் ரோடு தாயில்பட்டி பகுதியில் 3 பேர், 4 பேர் என குழு, குழுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
    • சக பக்தர்கள் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு தாயில்பட்டி போலீசார் விரைந்து வந்தனர்.

    தாயில்பட்டி:

    தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ஆடி கடைசி வெள்ளியான இன்று இருக்கன்குடி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். இதில் நேர்த்திக்கடனாக ஏராளமானோர் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, திருத்தங்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து பங்கேற்றனர்.

    அதேபோல் சிவகாசி அருகே உள்ள நதிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று இரவு தங்கள் ஊரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    அவர்கள் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சிவகாசியை அடுத்த சாத்தூர் மெயின் ரோடு தாயில்பட்டி பகுதியில் 3 பேர், 4 பேர் என குழு, குழுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த லாரி சாலையோரமாக நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.

    இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதைப் பார்த்த அவர்களுடன் வந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். இந்த கோர விபத்தில் பழனியம்மாள் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் சென்ற சண்முகப்பிள்ளை (50) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

    சக பக்தர்கள் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு தாயில்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சண்முகபிள்ளையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் முத்துராஜ் (38) பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுதொடர்பாக தாயில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேரிந்த லாரி டிரைவர் லட்சுமணன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி டிரைவர் மது போதையில் இருந்தாரா? அல்லது தூக்க கலக்கத்தில் பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தாரா? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பாதயாத்திரை சென்ற இரண்டு பெண்கள் லாரி மோதி பலியானது அவர்களது சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருச்சுழியில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளுடன், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார்.
    • பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சியு–டன் சாப்பிட்டு அதன் சிறப் புகள் குறித்து விவசாயி–களிடம் கேட்டறிந்தார்.

    திருச்சுழி

    தமிழக பா.ஜ.க. தலைவர் என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபய–ணத்தை தொடங்கிய அவர் மாலையில் திருச்சுழி வந் தார்.

    திருச்சுழியில், பிரதமர் நரேந்திர மோடியின் விவசா–யிகளுக்காக வகுக்கப்பட்ட திட்டமான பிரதம மந்திரி கிஸான் யோஜனா திட்டத் தின் பயனாளிகளான விவ–சாயிகள் மற்றும் விவசாய மதிப்புக் கூட்டுப் பொருட் கள் உற்பத்தியாளர்களைச் சந்தித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உரையாடினார்.

    கடந்த ஒன்பது ஆண்டுக–ளில், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதையும், விவசாயம் சார்ந்த புதிய தொழில் முனைவோர்கள் பலர் உருவாகியிருக்கின்றனர் என்பதையும் அறியும்போது, பாரதப் பிரதமர் நரேந்திர–மோடியின் விவசாயிகளுக் கான நலத்திட்டங்களின் நேரடிப் பலன்களை உணர முடிந்தது என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விவசாயிகளிடம் பேசினார்.

    முன்னதாக கிராமப் பகுதிகளில் விளைந்த வெள்ளரிக்காய் மற்றும் சிறுதானியங்களால் செய் யப்பட்ட உணவு பொருட் களை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சியு–டன் சாப்பிட்டு அதன் சிறப் புகள் குறித்து விவசாயி–களிடம் கேட்டறிந்தார்.

    • விருதுநகரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (11-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இத்தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்த குதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும். மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

    இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • அரசு இணைய சேவை உபகரணங்களை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450 கிராம ஊராட்சி களிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழைவலை யமைப்பு நிறுவனம் (டான்பிநெட்) மூலம் தற்போது முழு வீச்சில் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பானது, 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரைவழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான ரேக்குகள்/யுபிஎஸ் உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவைமையம் (VPSC) அல்லது அரசுகட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மையங்களில் வைக்கப்பட்டுள்ள யுபிஎஸ், ரூட்டர், ரேக்குகள், கண்ணாடி இழை கேபிள் உபகரணங்கள் யாவும் அரசின் கடமைகளாகும்.

    இவற்றை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது காவல்துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×