search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்மமாக இறந்து கிடந்த கல்லூரி மாணவர்
    X

    மர்மமாக இறந்து கிடந்த கல்லூரி மாணவர்

    • ஆலங்குளம் பஸ் நிறுத்தத்தில் மர்மமாக கல்லூரி மாணவர் இறந்து கிடந்தார்.
    • கொலையா? போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் டி.என்.சி. முக்குரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமுருகன். இவரது மகன் விஜயகுமார் (வயது19). இவர் ஆலங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலையில் கே.லெட்சுமியாபுரம் பஸ் நிறுத்தத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவரது மூக்கு, கால் முட்டிகள், இடுப்பு பகுதிகளில் காயங்கள் இருந்தன. இடது கண் அருகிலும் காயம் இருந்துள்ளது. இதுகுறித்து ஜோதிமுருகன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவர் எப்படி இறந்தார்? அவர் சாவுக்கான காரணம் என்ன? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×