என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்ளகாக உயர்த்தவேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறி உள்ளார்.
    • 100 நாள் வேலைத் திட்ட பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் கேட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட் டியில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை மாணிக் கம் தாகூர் எம்.பி. பார்வை–யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாத்தூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரு–கிறது. விருதுநகர் மாவட்டத் தில் 300 கிராமங்களிலும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 382 கிராமங்க–ளிலும் 100 நாள் வேலை திட்ட பணிகளை ஆய்வு செய்துள்ளேன்.

    90 சதவீதம் பேர் பணி களை செய்து வருகின்றனர். மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்க பார்க்கிறது. கடந்த 5 வாரங்களாக ஊதியம் வழங் கப்படாத நிலை நீடிக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தில் ஏதேனும் புகார் இருந்தால் என்னிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ கொடுத் தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட் களாக உயர்த்த வேண்டும்.

    கப்பலூர் சுங்கச்சாவடி யில் ஆண்டுக்கு 41 லட்சம் வாகனங்கள் செல்லும் நிலை யில் 10 லட்சம் வாக னங்கள் வி.ஐ.பி. வாகனங்க ளாக கணக்கு காட்டப்பட்டுள் ளது. ஒரு வாகனத்திற்கு குறைந்தபட்சம் ரூ.100 வசூல் என்றாலும் பெரும் தொகை முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    சமையல் கியாஸ் சிலிண் டருக்கு மத்திய அரசு ரூ.1200 வாங்கி வந்த நிலை யில் தற்போது ரூ.200 குறைத் துள்ளது. இதுதேர்தலுக்கான கண்துடைப்பு நடவடிக்கை. மக்கள் மீது அக்கறை இருந்தால் ராஜஸ்தானில் வழங்குவது போல் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்க வேண்டும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை இதுகுறித்து பிரதம ரிடம் முறையிட வேண்டும். தேசிய அளவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் அதிக தொகை செலுத்தும் மாநி லங்களில் தமிழகம் 5-வது இடத்தில் வருகிறது. இதில் எந்த அளவிற்கு தமிழ கத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது என்பதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்.

    மதுரை ரெயில் நிலை யத்தில் நடந்த தீ விபத்து ரெயில்வே துறையின் அலட் சியத்தை காட்டுகிறது. ரெயில் பெட்டியில் கியாஸ் சிலிண்டரை எப்படி அனும தித்தார்கள் என்று தெரிய வில்லை. ரெயில்வே மந்திரி ரெயில் விபத்திற்கு பொறுப் பேற்று பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    அப்போது சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்த னர்.

    முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. சாத்தூர் யூனியன் சின்னகொல்லப் பட்டி, சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால் உள்ளிட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்ட பணிகளை ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகள் கேட்டார்.

    • தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்ற கணவர்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிக்க ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சரவெடி தயாரிப்பு பாதிக்கப் பட்டுள்ளது.

    இந்நிலையில் சரவெடி பட்டாசுகள் தள்ளுபடி விலையி்ல் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரம் செய்துள்ளனர். இது குறித்து போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சரவெடி பட்டாசுகள் வேண்டும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பர செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர்களும் சிவகாசி அருகே மீனம்பட்டிக்கு வரும்படி கூறியுள்ளனர். அங்கு சென்ற தனிப்படை போலீசார், அனுமதி பெறாத குடோனில் பெட்டி பெட்டியாக தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

    சரவெடி பட்டாசுகளை விற்பனைக்கு வைத்திருந்த சிவகாசி திருப்பதி நகரை சேர்ந்த நாகராஜ் (வயது40). அவரது மனைவி அழகு லட்சுமி (32) ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் முழுதும் தி.மு.க. கரை வேட்டி கட்டிய நிர்வாகிகள், தொண்டர்களாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.
    • அமைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் வடக்கு மற் றும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அவை தலைவர்கள் தங்க–ராஜ், செல்வமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விருதுநகருக்கு வருகிற 6-ந்தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் பேசியதா–வது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 6-ந்தேதி விருதுநகர் வருகை தர உள்ள நிலையில் அன்றைய தினம் விருதுநகர் முழுவதும் தி.மு.க. கரை வேட்டி கட்டிய தொண்டர்கள், நிர்வாகிகள் இருக்கும் நிலையை ஏற்ப–டுத்த வேண்டும். மேலும், அன்று காலை 9 மணிய–ளவில் சூலக்கரை மேட்டில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அவரை வரவேற்ப–தற்கு மாவட்டம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் திர ளாக பங்கேற்க வேண்டும்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்பு மாலை கழக முன் னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய தாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகருக்கு வருகை தருகிற 6-ந்தேதிதான் நமக்கெல்லாம் தீபாவளி. அவரது வருகையை நாம் எல்லோரும் திருவிழாவாக கொண்டாடும் வகையில் அமைய வேண்டும். கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையி–ல் தாமிரபரணி நதிக்கரையில் தி.மு.க. இளைஞரணி முதல் மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் சேலத்தில் 2-வது தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய நம்மை தயார்படுத்த தான் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், தனுஷ்குமார் எம்.பி., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜன் மற்றும் விருதுநகர் நகராட்சி தலை–வர் மாதவன் உள்ளிட்ட நகரசபை தலைவர்கள், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் உள்ளிட்ட யூனியன் தலைவர்கள், பேரூராட்சி தலை வர்கள், நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசுக்கு தெரியாமல் மனைவி உடலை எரித்த கணவர்-உறவினர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
    • சக்தீஸ்வரி மன விரக்தியில் இருந்துள்ளார்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சக்தீஸ்வரி (வயது 55). இவர்களின் எதிர்ப்பை மீறி மகன் காதல் திருமணம் செய்து கொண்டு தனியே வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் சக்தீஸ்வரி மன விரக்தியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான வயல்காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசுக்கு தெரிவிக்காமல் கணவரும், உறவினர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணின் பிணத்தை எரித்துள்ளனர். ஆனால் மனைவி மாயமாகி விட்டதாக முருகன் கூறி வந்துள்ளார்.

    இதுகுறித்து புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மாரீஸ்வரனுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் முருகன் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கியூ.ஆர். கோடு மூலம் பண பரிவர்த்தனை நடந்தது.
    • பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் சங்கங்களில் உள்ள நியாய விலை கடைகளில் கியூ.ஆர். கோடு இயந்திரம் மூலம் பண வர்த்தனை மேற்கொள்ள உரிய கருவிகளை கூடுதல் பதிவாளர் வில்வசேகரன் வழங்கினார்.

    அப்போது மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராஜலஷ்மி. அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் வீரபாண்டி, பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இருவரும் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 22). ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவைச் சேர்ந்தவர் முத்துமணி (29). நண்பர்களான இவர்கள் இருவரும் ராஜபாளையம் செல்லும் வழியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் கார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ராஜபாளையம் ரோட்டில் வன்னியம்பட்டியை அடுத்த தனியார் குண்டூசி மில் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அதே சமயம் கேரள மாநிலம் கொல்லம் அவனேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மெரின் வினிதா (32) என்பவர் தனது குடும்பத்தினருடன் வேளாங் கண்ணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மின்னல் வேகத்தில் வந்த கார் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குருமூர்த்தி, முத்துமணி இருவரும் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த வன்னியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கல்லூரி மாணவி வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புலியூர் சித்தன். இவரது 17 வயது மகள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத் தன்று அவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைத்தார். அவரது தந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஊருக்கு வருமாறும் அவர் கூறியுள்ளார்.

    அதனை நம்பிய மாணவி உடனடியாக ஊருக்கு புறப்பட்டார். கல்லூரிக்கு வெளியே வந்து பஸ் ஏறுவதற்காக காட்டன் மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலை யத்தில் சித்தன் புகார் செய்தார். அதில், ராஜ பாளையம் தாட்கோ காலனியை சேர்ந்த முத்துப் பாண்டி மகளை கடத்தி யிருக்கலாம் என சந்தே கிப்பதாக அவர் கூறியுள் ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள மெய்யனூத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது75). இவரது 17 வயது பேத்தி திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

    பெரியசாமி அவரிடம் விசாரித்தபோது காரியா பட்டியில் நடந்த பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக உறவினர் வீட்டுக்கு சென்ற போது கீழஉப்பிலிக்குண்டு பகுதியை சேர்ந்த பால் பாண்டி என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

    இதையடுத்து பால்பாண்டியிடம் சிறு மியை திருமணம் செய்து கொள்ளுமாறு உறவி னர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்தார். இதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் செய்தார். போலீசார் பால்பாண்டி மீது போக்சோ வில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    விருதுநகரில் கிழக்கு பகுதியில் உள்ள குடி யிருப்பை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து பெற்றோர் கள் சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவருடன் ஒரு வருடமாக பழக்கம் இருப்பதாகவும், அவர் அங்குள்ள தியேட்டர் பகுதிக்கு அழைத்து சென்றும் பெற்றோர் வெளியே செல்கிறபோது வீட்டிற்கு வந்தும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

    இதையடுத்து சிறுமி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே செல்போன் டவர்கள் மாயமானது.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியில் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைத்திருந்தது. அதற்கான உபகர ணங்களும் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் அந்த செல்போன் டவர் மற்றும் உபகரணங்கள் காணாமல் போயின. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 30 லட்சத்து 38 ஆயிரத்து 638 ஆகும்.

    அதேபோல் கல்குறிச்சி பகுதியில் செல்போன் டவர் அமைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த செல்போன் டவர் மற்றும் உபகரணங்க ளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். செல்போன் டவர்கள் காணாமல் போனது குறித்து தனியார் நிறுவன மேலாளர் முத்துவெங்கடகிருஷ்ணன் விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை பாலையம்பட்டி பகுதியில் சென்னையை சேர்ந்த மற்றொரு நிறுவனம் செல்போன் டவர் அமைத்திருந்தது. அந்த செல்போன் டவரை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சத்து 24 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக தனியார் நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ்குமார், அருப்புக் கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபரை கொலை செய்து கிணற்றில் வீசி சென்ற 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆத்தியப்பன் (வயது 33). இவருடைய மனைவி மலர்கொடி. இவர்களுக்கு 2 குழந்தைகள்.

    கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவி குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். ஆத்தியப்பன் வேலை எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்ப டுகிறது.

    இந்த நிலையில் கட்ட னார் பட்டியில் ரங்கராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் சாக்கில் கைகள் கட்டப்பட்டு, வெட்டு காயங்களுடன் ஆத்தி யப்பன் பிணமாக கிடந்தார்.

    தகவலறிந்த வச்சக்கா ரப்பட்டி போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விருதுநகர் துணை போலீஸ் சூப்பி ரண்டு பவித்ரா மற்றும் வச்சகாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா மேற்பார்வையில் வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஆத்தியப்பனை முன் விரோதத்தில் ஓ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (19), மாரீஸ்வரன் (24), மைன் பீட்டர் (28) வசந்தகுமார் (19) மற்றும் 2 சிறுவர்கள் ஆகியோர் கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றது தெரிய வந்ததுது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
    • விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து 38-வது தேசிய கண் தான இருவார விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் கண்தானம் செய்த 30 குடும்பங்களுக்கு பாரட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் கண்தானத்திற்கு சிறப்பாக செயல்பட்ட தற்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சங்குமணிக்கு, பார்வை யிழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்டமேலாளர் பொன்னுசாமி, கண் மருத்துவத்துறைத்தலைவர் பாரதிராஜன், சட்டம் சார்ந்த மருத்துவத்துறை தலைவர் சீதாலட்சுமி ஆகிேயாருக்கு நினைவு நினைவு பரிசு வழங்கினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் கண்தானம் செய்வதற்கு 75985 20007 என்ற சிறப்பு எண்ணையும் அறிமுகப் படுத்தினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    கருவிழி கண் தானம் மட்டுமல்லாமல் நம் உடலின் மிகமுக்கியமான பகுதிக ளான சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல்கள் போன்ற உறுப்புகளையும் தானம் அளிக்கலாம். இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் வைக்கிறது. நுரையீரல், சிறுநீரகம், கண்கள் போன்ற உடல் உறுப்புகளை சரியான நேரத்தில் தேவைப்படு வோருக்கு மாற்றம் செய்யும் போது, அவரது வாழ்க்கை யையும், உயிரையும் காப்பாற்ற முடிகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம்.

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து வதன் மூலமாக ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடல் உறுப்புகளை தான மாக வழங்குவது பல உயிர்களை காப்பாற்று வதற்கான வாய்ப்பாக அமைகிறது என்பதை அறிந்து கொள்ள செய்ய முடியும்.

    இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் வெங்கடேஷ் பிரஜ்னா, அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி மேலாளர் சரவணன், அரசு மருத்துவர்கள், கண் தானம் செய்த குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முடங்கியார்சாலையில் உள்ள கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

    மாலையாபுரம் பகுதியில் சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கி ளில் வந்த ஒரு தரப்பினர் கல்லூரி மாணவர்களிடம் தகராறு செய்து அவர்களை துரத்திச் சென்று சரமாரி யாக தாக்கினர்.

    கல்லூரி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ராஜபாளையத்தில் ஒரு தரப்பினரை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி கூறியதை யடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதோடு மட்டுமின்றி அன்றிரவே கல்லூரி மாணவர்களை தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்ததாக தெரிகிறது. ஆனால் அவர்களை போலீசார் விடுவித்ததாக கூறி மீண்டும் நேற்று காலை ராஜபாளையம் முடங்கியார் சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சாலை மறியலால் ராஜபாளையத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகம் வெளியிட் டுள்ள செய்தி அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    ராஜபாளையம் சோமையாபுரத்தை சேர்ந்த அய்யனார் மகன் சதீஷ் (வயது19). இவருக்கும் அம்பேத்கார் நகரை சேர்ந்த ராசு மகன் (21) என்ப வருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் செல்வம் தரப்பினர் சதீஷ் மற்றும் அவரது தரப்பினரை தாக்கினர். இது தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அழகுராஜ் மகன் அமர்நாத்(21), கந்தசாமி மகன் கார்த்தீஸ்வ ரன்(25), ராசு மகன் செல்வம், ராஜேந்திரன் மகன் அருண்குமார்(20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்ட சோமையாபுரத்தை சேர்ந்த தங்கபழம், சடைபாண்டி, ஜமீன்தார், மலை ராஜா, வெள்ளை யம்மாள், அவ்வம்மாள், பாண்டியராஜ், சின்ன இருளாயி, விக்டோரியா, இதயக்கனி, ஜாக்குலின், கருப்பையா, வரதன், லிங்கராஜ், முனியசாமி, செல்லக்கனி, முத்துமணி ஆகிய 17 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.

    ×