search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mulaipari Festival"

    • மந்தையம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா நடந்தது.
    • வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மந்தையம்மனை வழிபட்ட னர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே இருஞ்சிறை கிரா மத்தில் உள்ள மந்தையம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ திருவிழா கடந்த வாரம் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷே கங்களுடன் காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கி யது. இந்த நிலையில் மந்தை யம்மன் கோவில் திருவிழா வின் ஒரு பகுதியாக நடை பெற்ற திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடை பெற்றது. இந்த திபூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சுலோகங்க ளுடன் துதி பாடி பய பக்தி யுடன் அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ் வாக நேற்று முளைப்பாரி எடுத்து வந்த பொதுமக்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் மற்றும் வழக்கமான கோவில்களில் வைத்து வழி பட்டனர். அதன் பின்னர் கோவிலின் அருகேயுள்ள குளத்தில் முளைப்பாரியை பொதுமக்கள் கரைத்தனர்.

    இதனையடுத்து கோவி லில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வழிபாடுகள் செய்த நிலையில் முளைப் பாரி உற்சவம் நிறைவ டைந்தது.இந்த சிறப்பு பூஜையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு மந்தையம்மனை வழிபட்ட னர்.

    • வீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி விழா நடந்தது.
    • பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கிராமத்திலுள்ள ஊரணியில் கரைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மாரநாடு கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா நடந்தது. இதையொட்டி ஏராளமானோர் காப்புக்கட்டி ஒரு வாரமாக விரதம் இருந்து வந்தனர். கிராமத்தில் உள்ள அனைவரது வீடுகளிலும் முளைப்பாரி வளர்க்கப்பட்டது. விழா நாட்களில் தினமும் முளைப்பாரிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பெண்கள் கும்மிப்பாடல்களை பாடினர்.

    முளைப்பாரி கரைப்பு நாளன்று வீடுகளில் இருந்து முளைப்பாரிகள் முளைக்கொட்டு திண்ணைக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக வீரமாகாளிக்கும் பூஜைகள் நடந்தது. அதன்பின் பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கிராமத்திலுள்ள ஊரணியில் கரைத்தனர்.

    • சாயல்குடி அருகே சந்தன மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
    • விழாஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவில் முளைப்பாரி உற்சவர் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காரண மறவர் சங்கத் தலைவர் சிதம்பர நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் முருகன், பொருளாளர் மூக்காண்டி, கூட்டமைப்பு தலைவர் சுந்தர கணபதி, ஒன்றிய கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி சந்தன மாரியம்மன், செல்வவிநாயகர், வள்ளி, தெய்வானை, ஆஞ்சநேயர், கருப்பசாமி, மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    மேலும் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சிறுமிகளின் கோலாட்டம், கும்மியாட்டம், குதிரை எடுப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நிறைவு நாளான நேற்று முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்று தெற்கு நரிப்பையூர் கடலில் கரைத்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலமுருகன் விழாஏற்பாடுகளை பாலாஜி, மலைக்கண்ணன், இளங்கோ, சித்தார்த்தையன், ஆனந்த், பொறியாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×