வீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி விழா

வீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி விழா நடந்தது. பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கிராமத்திலுள்ள ஊரணியில் கரைத்தனர்.
வீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி விழா
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மாரநாடு கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் முளைப்பாரி விழா நடந்தது. இதையொட்டி ஏராளமானோர் காப்புக்கட்டி ஒரு வாரமாக விரதம் இருந்து வந்தனர். கிராமத்தில் உள்ள அனைவரது வீடுகளிலும் முளைப்பாரி வளர்க்கப்பட்டது. விழா நாட்களில் தினமும் முளைப்பாரிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பெண்கள் கும்மிப்பாடல்களை பாடினர்.

முளைப்பாரி கரைப்பு நாளன்று வீடுகளில் இருந்து முளைப்பாரிகள் முளைக்கொட்டு திண்ணைக்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக வீரமாகாளிக்கும் பூஜைகள் நடந்தது. அதன்பின் பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கிராமத்திலுள்ள ஊரணியில் கரைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com