என் மலர்
விருதுநகர்
- திருச்சுழி அருகே மதுபாட்டில்களை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 15 மதுபாட்டில்களும், ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதாக திருச்சுழி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது குலசேகர நல்லூர் பகுதியில் சாக்கு பையுடன் நின்று கொண்டி ருந்த குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் செல்வம் (வயது 51) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான கூறிவந்தார். இதில் சந்தேகம் அடைந்த போாலீசார் அவரது பையை சோதனை செய்ததில் சட்ட விரோதமாக சுமார் 75 மதுபான பாட்டில் கள் விற்பனைக்காக வைத் திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து திருச்சுழி போலீசார் அவற்றை பறிமுதல் செய்து செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் மேலகண்ட மங்கலம் பகுதியிலும் திருச்சுழி போலீசார் ரோந்து சென்ற போது அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் புலிக்குறிச்சி பகுதியை சேர்ந்த கடம்பன் மகன் மருதுபாண்டி (வயது 33) என்பவரிடம் சோதனை செய்ததில் அவரிடம் இருந்து சுமார் 15 மதுபாட்டில்களும், ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்த னர். பின்னர் மருதுபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுவை ஒழிக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏன்? என டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி விடுத்துள்ளார்.
- நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வந்து விடும்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் புதிய தமிழகம் கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ஊழல் ஒழிப்பு யுத்தம் குறித்த பொதுக் கூட்டம் நடந்தது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் ஆட்சிபுரிந்து வரும் தி.மு.க. கடந்த 2021 தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வரப்படும் என வாக்குறுதி களை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது. மேலும் மதுவால் தமிழகமே தள்ளாடுகிறது. ஒரு புறத்தில் டாஸ்மாக்கை அடைத்து விட்டு மறுபுறம் திறக்கப் பட்டு வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் அமர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகும் மதுவை ஒழிக்க தயங்குவது ஏன்?. நாடாளு மன்ற தேர்தல் விரைவில் வந்து விடும்.
அப்போது மீண்டும் தி.மு.க.வினர் வாக்குகள் கேட்டு உங்களி டம் வரும்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையான மதுவிலக்கு குறித்து பொது மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
மது ஒழிப்பு பிரச்சினை யில் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக் கும் சேர்த்தே புதிய தமிழகம் போராடுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடையை வருகிற அக்டோபர் 2-ந் தேதிக்குள் மூட வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் கணிதம் குறித்த விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
- மாணவிகள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் கணித ஆராய்ச்சி துறை, விருதுநகர் மாவட்ட கல்லூரிகளின் கணித ஆசிரியர்களின் கூட்டமைப்பு இணைந்து 'நிஜஉலகில் கணிதம்'என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்ச்சியினை நடத்தியது.
கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை தாங்கினார். எஸ்.எப்.ஆர். கல்லூரி கணித துறை தலைவர் பெத்தனாட்சி செல்வம் வரவேற்றார். இணை பேராசிரியை மாலினிதேவி அறிமுக உரையாற்றினார்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவிபேராசிரியர் சந்திர சேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கணித பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியர் முத்துமாரி நன்றி கூறினார்.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- வெவ்வேறு சம்பவங்களில் அச்சக உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி சித்துராஜபுரம் கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது56). இவர் அதே பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத் தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்தநிலையில் செல்வராஜின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன. சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வராஜ் அச்சகத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
சந்தேக மடைந்த அவரது மனைவி செல்வி மற்றும் மகள் அச்சகத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது குடோனில் செல்வராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகா ரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவனத்தம் வடக்குபட்டியை சேர்ந்தவர் சங்கிலி.
இவரது மகன் அய்யப்பன் (19). டிராக்டர் டிரைவரான இவர் வேலைக்கு செல்லாமல் பெற்றோரிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. இதனை அவர்கள் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த அய்யப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டகுளத்தை சேர்ந்தவர் சின்ன கருப்பசாமி. டிரைவரான இவருக்கு அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதில் விரக்தியடைந்த சின்னகருப்பசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பாண்டி யம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து தி.மு.க. வெவ்வேறான நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது என முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
- சட்டமன்றத்தில் நிறைவேற்ற தாமதம் ஆகும்.
விருதுநகர்
விருதுநகர் பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டிய ராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஏற்கனவே கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பேசப்பட்டது. அப்போது கருணாநிதி அதனை ஆதரித்தார். நாங்கள் (அ.தி.மு.க.) ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது ஆளுங்கட்சி யாக இருந்து ஆதரித்தோம்.
தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும்போதும் நாங்கள் அதனை ஆதரிக்கிறோம். ஆனால் தி.மு. க.வை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப் பாட்டையும் கையாளுகிறது.
இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் உடனடியாக வரப்போவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனை கொண்டு வருவதற்கு மத்திய அரசு 8 பேர் கொண்ட பிரநிதித்துவ குழுவை நியமித்துள்ளது. அந்த குழு தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை அளித்து, அது நாடாளு மன்றத்திற்கு கொண்டு வர குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது ஆகும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சரியான பாதையாகும். இதில் தி.மு.க. நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பேசி வருகிறது. தொழிலாளர் நலச்சட்டம் இயற்றி பாராளுமன்றம், அதன் பிறகு சட்டமன்றத்தில் நிறைவேற்ற தாமதம் ஆகும். அதேபோல் தான் இந்த ஒரே நாடு, ஒரே தேர்தலும் உடனடியாக கொண்டு வரப்படாது. அதற்கும் கால அவகாசம் தேவைப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மனநலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தமிழியல் துறை சங்க பலகை இலக்கிய மன்றம் சார்பில் மனம் நிரல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி உடல்நலம், மனநலம் குறித்து பேசினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
சிவகாசி அரசு மருத்துவமனை ஆலோசகர் சங்கர், மாவட்ட மனநல மருத்துவ திட்ட அதிகாரி நித்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். மனநல மருத்துவர் இளையராஜா மனதை பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், மனகட்டுப்பாடு குறித்தும் பேசினார்.
முன்னதாக மாணவி அங்காள பரமேஸ்வரி வரவேற்றார். மாணவி மாலதி நன்றி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- மின்சார தொழிலாளர் சம்மேளன விழா நடந்தது.
- மத்திய கோட்ட செயலாளர் கணேசன் மூர்த்தி நன்றி கூறினார்.
விருதுநகர்
தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் விருதுநகர் வட்ட கிளை யின் சார்பில் தமிழக முதல் பொதுச் செயலாளர் டாக் டர் எஸ். சி.கிருஷ்ணனின் நூற்றாண்டு விழா, கல் வெட்டு திறப்பு விழா, கொடியேற்று விழா நடை பெற்றது.
விருதுநகர் மின் வாரிய மேற் பார்வை என் ஜினீயர் அலுவலகம் முன்பு வட்டக்கிளை தலைவர் ஆதி மூலம் தலைமையிலும், சம் மேளன துணைத்தலைவர் ராஜ் குமார் முன்னிலையிலும் நடந்த இந்த விழாவின் போது மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி கல்வெட்டை திறந்து வைத்தார்.
மாநில தலைவர் தனசேகரன் சம்மேளன கொடியேற்றினார். சம்மேளன பொருளாளர் அருள் தாஸ் தொழிற் சங்க பலகையை திறந்து வைத்தார். மாநில நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.
பொருளாளர் கார்த்தி கேயன் வரவேற்றார். முடிவில் மத்திய கோட்ட செய லாளர் கணேசன் மூர்த்தி நன்றி கூறினார்.
- கணவனை அரிவாளால் வெட்டிய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
- ராமர் தன்னை தாக்கியதாக ராஜலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் குறிஞ்சிபட்டியை சேர்ந்தவர் ராமர்(வயது43). இவரது மனைவி ராஜலட்சுமி. கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று வீட்டை சுத்தமாக பராமரிக்கவில்லை என மனைவியை, ராமர் கண்டித்துள்ளார். இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜலட்சுமி அரிவாளால் ராமரை வெட்டினார்.
காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜலட்சுமியை தேடி வருகின்றனர்.
இதேபோல் ராமர் தன்னை தாக்கியதாக ராஜலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார்.
- கடந்த மாதம் குழுவிற்கு கட்ட வேண்டிய பணம் செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது.
- பணம் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன குழு ஊழியர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அய்யாமாளிடம் கடன் தவணைத் தொகையை செலுத்த கோரி வற்புறுத்தி உள்ளனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆண்டாத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர்கள் சக்தி குமார்-அய்யம்மாள் தம்பதியினர். சக்திகுமாருக்கு முதல் திருமணமாகி விவாகரத்தான நிலையில் இரண்டாவதாக அய்யம்மாளை பெரியோர்கள் சம்மதத்துடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
அவர்களது மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த நிலையில் அதற்கு சான்றாக கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தம்பதிக்கு சிவமணி என்ற ஆண் குழந்தை பிறந்தது. கொத்தனாராக வேலை பார்த்து வரும் சக்திகுமாருக்கு சில மாதங்களாக சரிவர வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. குழந்தையை வளர்க்கவும், குடும்பம் நடத்தவும் தம்பதியினர் தவித்து வந்தனர். இதனை சரிசெய்யும் நோக்கத்தில் அய்யம்மாள் தனியார் நிதி நிறுவன மகளிர் குழுவில் ரூ.50,000 கடன் பெற்று மாதந்தோறும் ரூ.2,300 தவணைத்தொகையாக செலுத்தி வந்தார்.
கடந்த மாதம் குழுவிற்கு கட்ட வேண்டிய பணம் செலுத்த காலதாமதம் ஆகியுள்ளது. பணம் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன குழு ஊழியர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அய்யாமாளிடம் கடன் தவணைத் தொகையை செலுத்த கோரி வற்புறுத்தி உள்ளனர். மேலும் கால அவகாசம் கேட்ட அய்யமாளிடம் கடுமையான வார்த்தைகளினாலும் திட்டி தீர்த்துள்ளனர்.
11 மாத கைக்குழந்தையுடன் அய்யம்மாள் கண்ணீர் வடித்து நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது குழு தொகையை கட்டியுள்ளனர். பலரது முன்னிலையில் அவமானமாக எண்ணிய அய்யம்மாள் கணவரிடமும், நெருங்கிய உறவினர்களிடமும் கூறி அழுதுள்ளார். கணவரும் அவரை தேற்றினார்.
இந்த நிலையில் அண்டை வீட்டாருடன் பேசிக்கொண்டிருந்த அய்யம்மாள் இரவு வீட்டிற்குள் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதற்கிடையே வீட்டிற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் மட்டும் நீண்டநேரமாக கேட்டுக்கொண்டே இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அய்யம்மாள் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இதுபற்றி உடனடியாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் விரைந்து வந்த ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி தலைமையிலான போலீசார் அய்யம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனியார் நிதி நிறுவன குழு பிரச்சனையால் அய்யம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயை இழந்தது கூட தெரியாமல் தவித்து வந்த 11 மாத கைக்குழந்தையை உறவினர்கள் கையில் வைத்து கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- அத்தைக்கு உதவி செய்வது போல் நடித்து தங்க நகைகளை சகோதரர்கள் திருடி விற்றனர்.
- ஒருவர் கைது-மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள வலையப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த வர் முத்துலட்சுமி (வயது 52). இவரது பிள்ளைகள் அனைவருக்கும் திருமண மாகி வெளியூர்களிலும், அதே ஊரிலும் தனிக்குடித்த னம் இருந்து வருகிறார்கள்.
எனவே முத்துலட்சுமி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு உதவி செய்வ தற்காக முத்துலட்சுமியின் அண்ணன் மகன் அஜித் குமார், தம்பி மகன் முத்துச் செல்வம் ஆகியோர் அவ்வப் போது அத்தையின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடைக்கு செல்வது, மருத்து வமனைக்கு அழைத்து செல் வது போன்ற பணிக ளில் அவர்கள் ஈடுபட்டு வந்துள் ளனர்.
மருமகன்கள் மீது அதிக நம்பிக்கையில் முத்துலட்சுமி இருந்து வந்தார். இதனால் அவர்களின் நடவடிக்கை களில் முத்துலட்சுமிக்கு எப்போதுமே சந்தேகம் வந்த தில்லை. இதற்கிடையே சம்பவத்தன்று முத்துச்செல் வம் பக்கத்து வீட்டின் திண் ணையில் அமர்ந்திருந்தார்.
அவரது கையில் தங்கச் சங்கிலி ஒன்று இருந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக வந்த முத்துலட்சுமி யின் மகள் கலைகுமாரி, இந்த செயின் யாருடையது என்று கேட்டவாறு அதை கையில் வாங்கி பார்த்தார். அப்போது அது 8 பவுன் எடை கொண்ட தன்னுடைய தாய் முத்துலட்சுமிக்கு சொந் தமானது என்பது தெரிந்தது.
உடனே தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்ட கலைகுமாரி, உன்னுடைய தங்க சங்கிலி, உனது தம்பி மகன் வைத்தி ருப்பதாகவும், வீட்டில் வேறு ஏதாவது தங்க நகை கள் மாயமாகி இருக்கிறதா என்று கேட்டார். பின்னர் சிறிது நேரத்தில் தங்க கம்மல்களையும் காண வில்லை என்று முத்துலட்சுமி தெரிவித்தார்.
இதுபற்றி முத்துச்செல்வத் திடம் கேட்டபோது, அத்தை வீட்டில் இருந்து திருடியதை ஒப்புக்ெகாண்டார். மேலும் திருடிய கம்மலை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றதாக வும், அதை அஜித்குமார் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் மீது முத்துலட்சுமி ஆலங்கு ளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்துசெல் வத்தை கைது செய்தனர். தலைமறைவான அஜித்கு மாரை தீவிரமாக தேடி வரு கிறார்கள். உதவி செய்வது போல் நடித்து அத்தை வீட்டில் நகை திருடிய சம்ப வம் அப்பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியது.
- கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் வலியுறுத்தினார்.
- ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
சாத்தூர் - நென்மேனி - நாகாலாபுரம் சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரூ.30 கோடி மதிப்பீட்டில், 8 கி.மீ. தொலைவில் பக்தர்கள் சிரமமின்றி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.இதற்கான பணிகள் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் சாத்தூர் நகராட்சியில் எம்.ஏ.சி பூங்காவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.444.71 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.
சாத்தூர் நகராட்சிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சிவகாசி அனுப்பங்குளத்தில் மின்வாரிய பணிகளையும், சிவகாசி ஆணையூர் பகுதிகளில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் வட்டம், மல்லியில் அறிவியல் பூங்கா அமைய உள்ள இடத்தினை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) பாக்கியலட்சுமி, உதவிக் கோட்ட பொறியா ளர்கள்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) ஆனந்த குமார், அபிநயா, நிர்வாக பொறியாளர்(தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- திருச்சுழி அரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்சாதனப்பெட்டி வசதியில்லாததால் இறந்தவர்கள் உடல்கள் துர்நாற்றம் வீசுகிறது.
- பிரீசர் வசதி செய்து தர அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அரசு மருத்துவ–மனை செயல்பட்டு வருகி–றது. இங்கு நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் பல் வேறு நோய்களுக்கான சிகிச்சைகளுக்காக மருத்து–வமனை வந்து செல்கின் றனர். மேலும் அவ்வப்போது விபத்துக்கள் மற்றும் இயற்கை மரணங்களும் நிகழ்கிறது.
இந்த நிலையில் திருச்சுழி, நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் அசம்பாவிதங் கள் நிகழும் போது ஆங் காங்கே உள்ள பகுதிகளுக்கு உட்பட்ட அரசு சுகாதார நிலையங்களில் முதலுவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உடனடியாக தீவிர சிகிச் சைகளுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். அப்போது விபத்து மற்றும் அநேக நபர்களுக்கு இதய அடைப்பு போன்ற பல்வேறு தவிர்க்க முடியாத காரணங் களால் பெரும்பாலான நேரங்களில் இறப்பு சம்ப வங்களும் நடக்கிறது.
மேலும் திருச்சுழி அரசு மருத்துவமனையை தவிர வேறு எங்கும் பிரேத பரி–சோதனை செய்யும் வசதி இல்லை. எனவே விபத்துக–ளால் ஏற்படும் மரணம், இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்படும் மரணம், தற் கொலை மரணங்கள் ஆகிய வற்றால் இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனை யில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டு அதன் பிறகு பிரேத பரிசோதனை செய் யப்பட்டு சம்மந்தப்பட்ட உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிக்குடி பகுதிகளில் வாகன விபத்து மற்றும் நெஞ்சுவலி காரணமாக திடீரென இரண்டு பேரும் இறந்து–போன நிலையில் பிரேத பரிசோதனைக்காக அவர்க–ளின் உடல்களை அருகருகே ஒரே அறையில் ஒரே மேடையில் பாதுகாப்பின்றி கேட்பாரற்று போடப்பட்டி–ருந்ததாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோ–தனை செய்யப்படாமல் பல மணி நேரங்களாக பிணவ–றையிலேயே கிடந்தது.
அந்த உடல்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி பி–ணவறை பகுதிக்கே செல்ல முடியாத நிலையில் இறந்த–வர்களின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களு–டன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல் நாள் மாலையில் இறந்து மறுநாள் மதியம் வரை ஒருநாள் முழுவதும் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோ–தனை செய்யப்படாமல் பிணவறையிலேயே கிடப் பில் போடப்பட்டதா–லும், பிரேதங்களை பாதுகாக்கும் பிரீசர் வசதி இல்லாத கார–ணத்தாலும் நேரம் செல்ல செல்ல இறந்தவர்களின் உடல்கள் கடும் துர்நாற்றம் வீசியதாகவும் உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.பிரேத பரிசோதனைக் காக பல மணிநேரம் காத் துக்கிடக்கும் அவலநிலையும் தொடர் கதையாகி வருவதா–கவும் குற்றம் சாட்டி வரு–கின்றனர். ஒரு வேளை பிரேத பரிசோதனை செய் வ–தற்கு பல மணி நேரங்கள் தாமதமானால் உறவினர் களே தங்களது சொந்த செலவில் குளிர்சா–தனப் பெட்டியை ரூ.2000 முதல் வரை ரூ.4000 ரூபாய் வரை வாடகை செலுத்தி இறந்த–வர்களின் உடல்கள் பிண–வறையில் கெட்டுப்போ–காமல் இருக்க பொதுமக்கள் தங்களது சொந்த செலவி–லேயே பாதுகாக்கும் நிலை–யும் நடந்து வருகிறது.
இறந்தவர்களின் உடல் களை கிடப்பில் போட்டு பல மணி நேரங்களுக்கு பிறகு தாமதமாக உடற்கூ–ராய்வு செய்யப்படும் போது கடும் துர்நாற்றத்துடன் கூடிய இறந்தவர்களின் உடல்களை வாங்கி சென்று உறவினர்கள் இறுதி சடங் குகள் செய்து அடக்கம் செய்வதிலும் சிக்கல்கள் நீடித்து வருகிறது.மேலும் இறந்தவர்களின் உடல்களை துர்நாற்றத்துடன் கொண்டு செல்வதால் நோய்த்தொற் றுக்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின் றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அவலநிலை தொடர்வதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பிரேதங்கள் மிகவும் தாமதமாக பரிசோதனை செய்வது குறித்து மருத்து–வர்களிடம் கேட்டாலும் சரிவர விபரங்களை தெரி விப்பதில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் திருச்சுழி அரசு மருத்துவமனையில் பிரீசர் வசதியில்லாத கார–ணத்தால் இறந்தவர்களின் உடல்களை 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விருதுந–கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்ப–தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகி–றார்கள். ஆகவே திருச்சுழி, நரிக் குடி மற்றும் அதனை சுற்றி–யுள்ள பகுதிகளில் விபத்து மற்றும் தற்கொலை மரணங் கள் நிகழும் சமயங்களில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக தாமத–மாகும் நேரங்களில் இறந்த–வர்களின் உடல்களை கெட் டுப்போகாமல் பாதுகாப் பாக வைக்க திருச்சுழி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் குளிர்சாதன பெட்டி (பிரீசர்) வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கும், மாவட்ட கலெக் டருக்கும் பொதுமக்கள் கூட்டாக கோரிக்கை விடுத் துள்ளனர்.






