காளீஸ்வரி கல்லூரியில் பணி வாய்ப்பு கருத்தரங்கு

காளீஸ்வரி கல்லூரியில் பணி வாய்ப்பு கருத்தரங்கு நடந்தது. முடிவில் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.
காளீஸ்வரி கல்லூரியில் பணி வாய்ப்பு கருத்தரங்கு
Published on

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மற்றும் பணி வாய்ப்பு மையம் சார்பில் அரசு அலுவலகங்களில் தட்டச்சு மற்றும் ஸ்டெனோகிராபி திறன் கொண்டவர்களுக்கு "வேலைவாய்ப்பு" எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குமரேசன் பேசுகையில், அரசு பள்ளிக்கு செல்வதற்குரிய தகுதிகள் தமிழகம் மற்றும் மத்திய தேர்வாணையங்களில் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் பணி அமர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேசன் வரவேற்றார். முடிவியல் வணிகவியல் துறை பேராசிரியர் லட்சுமணகுமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com