search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Offering Money"

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.86 லட்சம், 225 கிராம் தங்கம் கிடைத்தது.
    • இந்த காணிக்கை எண்ணும் பணியில் ராஜபாளையம் சரக ஆய்வாளர் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம் மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக வழங்கும் பணம் மற்றும் நகைளை ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறந்து எண்ணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பக்தர்கள் காணிக்கையை கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் மற்றும் 3 தற்காலிக உண்டியல் மற்றும் கோசாலை உண்டியல் 1 என மொத்தம் 15 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    இதில் மதுரை கூடலழகர் திருக்கோயில் உதவி ஆணை யரும் செயல் அலுவலருமான செல்வி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையாளர் வளர்மதி (பொறுப்பு) ஆகியோர் முன்னிலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணம் எண்ணப் பட்டன.

    மேலும் கோவிலில் மண்டபத்தில் வைத்து உண்டியல் எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ.86 லட்சத்து 37 ஆயிரத்து 70 ரொக்கமும் 225 கிராம் தங்கமும், 133 கிராம் வெள்ளியும் இருந்தது.

    இந்த காணிக்கை எண்ணும் பணியில் ராஜபாளையம் சரக ஆய்வாளர் மகளிர் சுய உதவி குழுவினர் பக்தர் சேவா சங்க உறுப்பின்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    • உண்டியல் பணம் கிரேன் மூலம் புதிய கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டது.
    • உண்டியல் பணம் எண்ணுவதை பக்தர்கள் அறையில் கண்ணாடிக்கு வெளியே இருந்து காணலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி கூறியதாவது:

    ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை புதிய பரகாமணி கட்டிடத்தில் தொடங்கியது.

    புதிய கட்டிடத்தில் அதிநவீன பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளதால், நேற்று முதல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. உண்டியல் பணம் கிரேன் மூலம் புதிய கட்டிடத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    ஒரு மாதத்திற்கு பின், கோவிலில் உள்ள பரகாமணி மண்டபம், பக்தர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்படும் என்றார்.

    முன்னதாக, புதிய பரகாமணி கட்டடத்தில் உள்ள படத்துக்கு வாஸ்து ஹோமம், கோபூஜை, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. உண்டியல் பணம் எண்ணுவதை பக்தர்கள் அறையில் கண்ணாடிக்கு வெளியே இருந்து காணலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 78, 340 பேர் தரிசனம் செய்தனர். 27,063 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.30 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×