என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
    • இந்த ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் இயங்கும்.

    விருதுநகர்

    பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை 8-ந் தேதி சென்னை வருகிறார். அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தாம்பரம்-செங்கோட்டை வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

    இந்த ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் இயங்கும். இந்த ரெயில் ஞாயிற்க்கிழமை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும். மறுமார்கத்தில் திங்கட்கிழமை செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு செல்லும். 20683 என்ற எண் கொண்ட ரெயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 10.50 செங்கோட்டை செல்லும்.

    மறுமார்கத்தில் திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 6.05 மணிக்கு தாம்பரத்தை அடையும். விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய நிறுத்தங்களில் இந்த ரெயில் நின்று செல்லும்.

    9-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை 2 மாதங்களுக்கு இந்த வாராந்திர ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    • 11 வருடங்களுக்கு பிறகு நடந்த தேரோட்டம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பொங்கல் மற்றும் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த திருவிழாவில் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேர்த்திக்கடனை செலுத்தி பூக்குழி இறங்குவார்கள். இந்த வருடமும் மார்ச் 28-ந் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. ஏப்ரல் 6-ந் தேதி பூக்குழி திருவிழா நடந்தது. இந்த நிலையில் 11 வருடங்களுக்குப் பிறகு இன்று முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டம் பெரிய கடை வீதி, பழைய பஸ் நிலையம் வழியாக மதுரை சாலையில் நடைபெற்றது.

    இதில் உறவின்முறை தலைவர் காமராஜர், செயலாளர் முத்துசாமி, டிரஸ்டி ராஜரத்தினம், முன்னாள் உறவின்முறை தலைவர் மனோகரன், சிறப்பு ஆலோசகர் ரவீந்திரன், பள்ளிச் செயலாளர்கள் மணி முருகன், செல்வம், சவுந்திரபாண்டி, குணசேகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டை அருகே கோவில் திருவிழா முளைப்பாரி ஊர்வலம் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • இது தொடர்பாக அந்த சமூகத்தினர் போராட்டமும் நடத்தினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு அந்தப்பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அங்குள்ள பெரிய கண்மாயில் கரைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு முளைப்பாரி ஊர்வலம் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருந்ததால் வேறு பாதையில் செல்ல அந்த சமூகத்தினர் முடிவு செய்தனர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    வேறொரு பகுதி வழியாக முளைப்பாரி சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பாதிக்கப்படும். எனவே குறிப்பிட்ட பகுதியில் முளைப்பாரி ஊர்வலத்தை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தினர். இது தொடர்பாக அந்த சமூகத்தினர் போராட்டமும் நடத்தினர்.

    தகவல் அறிந்த போலீசார் அந்த சமுதாயத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் 40 பேர் மட்டும் அந்தப்பகுதியில் முளைப் பாரி எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அந்த கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் விருது நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு சமுதா யத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். அதில், கடந்த காலங்களில் முளைப்பாரி ஊர்வலம் நடந்த பகுதியி லேயே தற்போது ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும். வேறொரு பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கக்கூடாது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவித்தனர்.

    கோவில் முளைப்பாரி ஊர்வலம் செல்வது தொடர்பாக இரு சமுகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்ட சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • விவசாயம், மண்பாண்ட தொழில்களுக்கு கண்மாய்களில் இருந்து வண்டல்- களிமண் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு வண்டல், களிமண் எடுக்க தகுதி வாய்ந்த கண்மாய்களாக தேர்வு செய்யப்பட்ட விவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு வெளியீடு விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாடு பணிகளுக்கு அரசு அனுமதித்த வண்டல் மண், களிமண்ணை சிறப்பு அரசிதழில் வெளியீடு செய்யப்பட்ட கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக எடுத்துச் செல்ல விவசாய பணி செய்யும் விவசாயிகள் தங்களுடைய நில உடைமை ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய வற்றுடன் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழை இணைத்தும், மண்பாண்ட தொழில் செய்பவர்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற அங்கத்தினருக்குரிய சான்றிதழை இணைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநரிடம் மனு செய்து தேவையான வண்டல் மண், களிமண்ணை கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.

    விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றிற்கு 75 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 185 க.மீட்டருக்கு மிகாமலும், புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 90 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 222 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் களிமண் எடுக்க அனுமதி வழங்கப்படும். மேற்கண்ட பயன்பாட்டிற்காக அளிக்கப்படும் இலவச அனுமதியினை வணிக நோக்கத்துடன் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சியால் ராஜபாளையத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
    • ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியடைவார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. ராஜபாளையம் தொகுதியில் விவசாயிகளின் 50 வருட கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாழ்பழக்கூழ் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் மற்றும் சிறு-குறு நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தேன்.

    இதையடுத்து முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் அன்பரசனால் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் சின்மயா பள்ளி செல்லும் சாலையில் தென்காசி மெயின்ரோட்டில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ளது என்ற அறிவிப்பு சட்டபேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதை ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜபா ளையம் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற காரணமாக இருந்து தொடர்ந்து வலியுறுத்திய வருவாய்த்துறை அமைச்சர் , தொழில்துறை அமைச்ச ருக்கு எனது சார்பிலும், விவசாயிகளின் சார்பிலும் ராஜபாளையம் தொகுதி பொதுமக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் அன்பரசன், அந்த துறையின் நிர்வாக இயக்குநர் மதுமதி ஆகியோரை ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆப்பிரிக்கன் காய்ச்சல் எதிரொலியாக 63 பன்றிகள் ஊசி போட்டு கொல்லப்பட்டன.
    • பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அமீர்பாளையம் பகுதியில் கடந்த மாதம் ஒரு பன்றி இறந்து கிடந்தது. அந்த பன்றியின் உடலை கால்நடை அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது அந்த பன்றி ஆப்பிரிக்கன் காய்ச்சலால் இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் ஆப்பிரிக்கன் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 63 பன்றிகளை ஊசிபோட்டு கொல்ல மாவட்ட கால்நடைதுறை அதிகாரிகள் முடிவு செய்து அந்த பன்றிகளுக்கு ஊசிபோட்டு கொன்றனர். அதற்காக 18 அடி நீளம், 20 அடி அகலத்தில் குழி வெட்டி பன்றிகளை புதைத்தனர்.

    மாவட்ட கால்நடைதுறை இணை இயக்குநர் கோவில்ராஜா இதுகுறித்து கூறுகையில், ஆப்பிரிக்கன் காய்ச்சலால் பன்றிகள் மட்டுமே பாதிக்கப்படும். வேறு விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ பரவாது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டுவிட்டன. எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
    • சில ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூரை அடுத்த ஒத்தையால் பகுதியில் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பட்டாசு ஆலையின் உரிமம் காலாவதி ஆகிவிட்டதால் அதனை புதுப்பிக்க பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெறவில்லை.

    ஒரு அறையில் மட்டும் பட்டாசுகள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான சல்பர் அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மழை பெய்ததால் சல்பர் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் மழைநீர் புகுந்ததால் நேற்று இரவு வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இந்த தீ விபத்து பற்றி சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்தபோது ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில ஆலைகளில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டாசு ஆலைகளை அடிக்கடி ஆய்வு செய்து, அவை தகுந்த பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள்.
    • பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



    ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குவதற்கு முன்பு வளாகத்தில் மாணவிகள் படிப்பதை படத்தில் காணலாம்.

     விருதுநகர்

    தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை சுமார் 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு இன்று (6-ந் தேதி) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. முதல் தேர்வாக இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடந்தது.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 12,755 மாணவர்களும், 12,791 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 25 ஆயிரத்து 776 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.

    இன்று காலை சரியாக 10 மணிக்கு தேர்வு தொடங்கி யது. ஆனால் மாணவ- மாணவிகள் 20 நிமிடம் முன்பே தேர்வு அறைக்குள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். முதன்மை கண்காணிப்பா ளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பா ளர்கள் என 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 8,890 மாணவர்களும், 9,123 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்காக அமைக்கப்பட்டி ருந்த 101 தேர்வு மையங்களில் இன்று காலை தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் 1,500க்கும் மேற்பட்டோர் ஈடு படுத்தப்பட்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 84 தேர்வு மையங்களில் 8,359 மாணவர்களும், 8,480 மாணவிகளும், 497 தனி தேர்வர்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 501 பேர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். 1264 கண்கா ணிப்பாளர்கள், 84 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 84 துறை அலு வலர்கள், மற்றும் 148 பணியாளர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டி ருந்தனர்.உற்சாகம்

    முதல்முறையாக இன்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொண்ட பத்தாம் வகுப்பு மாணவ-மாணவி கள் தமிழ் மொழிப்பாட தேர்வை உற்சாகமாக எழுதினர். தேர்வு மையங்க ளுக்கு முன்கூட்டியே வந்தி ருந்த அவர்கள் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுதுவது குறித்து விளக்கியதை நேரில் காண முடிந்தது.

    தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மாணவ மாணவிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். துண்டு தாள் வைத்துக்கொள்வது, பிறரை பார்த்து எழுதுவது, ஆள் மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 3 ஆண்டுகள் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை எச்ச ரித்திருந்தது.

    எனவே 3 மாவட்டங்க ளிலும் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.


    • கல்லூரி மாணவர் திடீரென மரணமடைந்தார்.
    • கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பாட்டக்குளத்தைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் மெல்வின் கிறிஸ்டோபர்(வயது19). சிவகாசியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் 1½ மாதங்களுக்கு முன்பு பேண்ட் கிழிந்த நிலையில் மெல்வின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஜோசப் அது குறித்து விசாரித்தபோது, கல்லூரியில் மயங்கி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது மெல்வின் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜோசப் கொடுத்த புகாரின் பேரின் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நியாய விலை கடை விற்பனையாளர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
    • இணைப்பதிவாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும் சாத்தூரில் உள்ள நியாய விலை கடையின் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த ரத்தினம் மாலா என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட ரூ.25 லட்சத்திற்கான காசோலையை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், விருதுநகர் மண்டல கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில் குமார்,பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் முருகவேல், பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் விநாயகரசன், இணைப்பதிவாளர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோதி(வயது35). அவரது சொந்த ஊரான பழைய சென்னாகுளத்தில் வீடு மற்றும் நிலங்கள் உள்ளது. இந்தநிலையில் வீடு இடிந்து அதில் இருந்த தேக்கு கட்டைகளை சிலர் திருடிச் சென்று விட்டதாக உறவினர் ஒருவர் ஜோதிக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து ஜோதி அங்கு சென்று பார்த்தபோது தேக்கு கட்டைகள் திருடப் பட்டது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த கதிரேசன், முருகே சன் மற்றும் சிலர் தேக்கு கட்டைகளை திருடிச் சென்றதாக தெரியவந்தது.

    இதுகுறித்து ஸ்ரீவில்லி புத்தூர் கோர்ட்டில் ஜோதி வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் ஜோதி தனது கணவருடன் விசா ரணைக்கு சென்றுவிட்டு வரும்போது முருகேசனும், அவரது நண்பர்களும் அவர்களை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு சொந்தமான வாழை தோப்பையும் அவர்கள் சேதப்படுத்தி யுள்ளனர்.

    இதுகுறித்தும் ஜோதி வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் கதிரேசன், முருகேசன், மோகன், ஜெயராஜ் உள்ளிட் டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    • சாத்தூர் அருகே கோவில் உண்டியல் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • கம்பிகள் வளைக்கப்பட்டிருந்தது.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள வடமலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் நாரணம்மாள் கோவில் பூசாரியாக உள்ளார். இவர் காலையில் கோவிலுக்கு சென்ற போது கோவிலின் கதவு திறந்து கிடந்தது.

    அவர் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உண்டியலை பார்த்த போது பணம் திருடப்பட்டது தெரியவந்தது. உண்டியலில் சுமார் ரூ.40 ஆயிரம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருச்சுழி தாலுகா வீரக்குடி வேளாளர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அங்குள்ள முருகய்யனார் கோவில் அர்ச்சகராக உள்ளார். சம்பவத்தன்று காலையில் கோவிலுக்கு சென்ற போது கிரில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் சில கம்பிகள் வளைக்கப்பட்டிருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. மர்ம நபர்கள் யாரோ கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து ஜெயக்குமார் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×