என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • நட்பை துண்டித்ததால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது26). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட பெருமாள். இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் மணிகண்ட பெருமாளின் நட்பை மணிகண்டன் துண்டித்து கொண்டார். மணிகண்டபெருமாள் பலமுறை பேச முயன்றும் மணிகண்டன் அதை தவிர்த்து விட்டார். இதுகுறித்து மணிகண்டபெருமாள் அவரது சகோதரர் பாண்டியிடம் தெரிவித்தார். அவர்கள் இருவரும் மணிகண்டனை சந்திப்பதற்காக வந்தனர். அப்போது மணிகண்ட பெருமாளிடம் ஏன் பேசுவதில்லை என மணிகண்டனிடம் பாண்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த பாண்டி மற்றும் மணிகண்டபெருமாள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை வெட்டினர். இதில் அவருக்கு உச்சந்தலையில் காயம் ஏற்பட்டது. அவரது கூச்சல் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டதால் மணிகண்டபெருமாளும், பாண்டியும் தப்பி சென்றனர். மணிகண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயங்கி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55), தச்சு வேலை பார்த்து வந்தார். சம்ப வத்தன்று வேலை நிமிர்த்த மாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த ராஜேந்திரன் அங்குள்ள நகராட்சி கழிவறை அருகே மயங்கி கிடந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் அவரது ஆலோசனையின் பேரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமினை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். பயிற்சி முகாமில் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்கள் பாண்டியராஜன், வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், செந்தலை குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

    • சிறுவன்- வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • வெட்டு விழுந்து விரல்கள் துண்டானது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் வீரவேல். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி புவனேசுவரி மகன் லிவின்ஷாவுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். சம்பவத்தன்று அங்கு வந்த வீரவேல் மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வீரவேல் அரிவாளால் மனைவியை வெட்ட வந்தார். அப்போது அங்கிருந்து மகன் லிவின்ஷா, புவனேசுவரியின் சகோதரர் ஆகியோர் தடுத்தனர். இதில் 2 பேருக்கும் வெட்டு விழுந்து விரல்கள் துண்டானது. இது தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரவேலை தேடி வருகின்றனர்.

    • 3 குல தெய்வ கோவில்களில் கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
    • 31-ந் தேதி தங்களது சொந்த கிராமங்களை சென்றடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவகாசி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பை தலைமை யாக கொண்ட 56 கிராமங் களை சேர்ந்த ஒரே சமு தாயத்தை சேர்ந்த மக்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது குல தெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்க மாக கொண்டுள்ளனர்.

    கடந்த 16-ந்தேதி 215 மாட்டுவண்டி களில் குல தெய்வ வழிபாட்டுக்கு புறப்பட்டு சென்ற கிராம மக்கள் சிவ காசி அருகே எம்.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள கூட முடையார்அய்யனார் கோவிலுக்கும், சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள மல்லி வீரகாளியம்மன் கோவிலுக்கும், ராஜபாளை யம் அருகே கீழராஜகுல ராமன் கிராமத்தில் உள்ள பொன் இருளப்பசுவாமி கோவிலுக்கும் 3 பிரிவுகளாக பிரிந்து சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

    56 கிராம மக்களும் குல தெய்வ தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் வருகிற 27-ந்தேதி ஒரே இடத்தில் சந்தித்து அங்கு கிடா வெட்டி விருந்து வைத்து சாப்பிட்டு விட்டு செல்வார்கள்.

    அதனை தொடர்ந்து 28-ந் தேதி தாங்கள் சென்ற மாட்டு வண்டிகள் மற்றும் வாகனங்களில் சிவகாசியில் இருந்து புறப்பட்டு வருகிற 31-ந் தேதி தங்களது சொந்த கிராமங்களை சென்றடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடைகளில் காலாவதியான எலக்ட்ரானிக் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் இறைச்சி கடைகளில் பொதுமக்களுக்கு கிலோ கணக்கில் வழங்கப்படும் மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளின் எடை அளவுகள் குறைவாக இருப்பதாக பொதுமக்களி டம் இருந்து மாவட்ட தொழிலாளர் துறைக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாவட்ட தொழிலாளர் துறையின் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மைவிழி செல்வி உத்தரவின்பேரில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் வீரசோழன் பகுதிகளில் உள்ள மீன், கோழி, மட்டன் கடைகளில் தொழிலாளர் துறை ஆய்வாளர் சதாசிவம், உதவி ஆய்வாளர் உமா மகேஸ்வரன் தலைமையி லான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    தராசுகளில் சரியான அளவு காட்டுகிறதா? என சோதனையிட்ட அதிகாரி கள் தாங்கள் கொண்டு வந்த எடைக்கற்கள் தராசு களில் வைத்து அளவுகளை சரிபார்த்து ஆய்வுகள் மேற்கொண்டனர். கடைக்கு இறைச்சி வாங்க வந்த பொதுமக்களிடம் கடைகளில் வழங்கப்படும் இறைச்சியின் எடை சரியான அளவில் இருக்கி றதா? என்றும் விசாரித்தனர்.10-க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த சோதனையின்போது சில இறைச்சி கடைகளில் தராசுகள் காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. காலாவதி யான எலக்ட்ரானிக் தராசு, எடை மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விளையாட்டு விடுதி, மையங்களில் சேர தேர்வு போட்டிகள் நடக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சா வூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாத புரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களு க்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது.

    மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்க ளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை யிலும், மாணவிகளுக்கான முதன்மை நிலை விளை யாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம் மற்றும் ஈரோட்டிலும் செயல்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்காக 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு, முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் 6 ,7, 8-ம் வகுப்பு சேர்க்கையும் நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணி அளவில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்பதை திவிறக்கம் செய்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேர்வு போட்டியின்போது கொண்டு வர வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தின் 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள 24-ந் தேதி காலை 7 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்திய தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வருகிற 5-ந் தேதி திறக்க ஏற்பாடு செய்தார்.
    • வார்டு செயலாளர் மதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோடு ரெயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பாலமுருகனுடன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டார்.

    இந்த நிகழ்வில் தலைமை பொறியாளரிடம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல ஏதுவாக ரெயில்வே மேம்பாலத்தை திறக்க வேண்டும்.

    அதன்பின்னர் 2 மாதத்தில் சர்வீஸ் ரோடு பணியை முடித்து முதல்-அமைச்சர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மூலம் முறையாக திறப்பு விழா நடத்த வேண்டும் என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியதுடன் பணிகளை விரைவு படுத்தினார். அதற்கு தலைமை பொறியாளர் கண்டிப்பாக மேம்பால பணியை விரைவு படுத்தி ஜூன் 5-ந்தேதி மேம்பாலம் மட்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.

    இதில் கண்காணிப்பு பொறியாளர் ஜவகர்முத்து, கோட்டப்பொறியாளர் லிங்கசாமி, உதவிக்கோட்ட பொறியாளர்கள் ஜெகன்செல்வராஜ், காவு மைதீன், உதவிப்பொறியாளர் முரளி, தி.மு.க. நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் கார்த்திக், குணா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, வார்டு செயலாளர் மதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்திய ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளை சமையல் செய்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பாக ராஜா முத்து திருத்தங்கள் பகுதியில் உள்ள உணவுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி களை சமையலுக்கு பயன்படுத்த வைத்திருப்பது தெரிய வந்தது. இந்த சோதனையின் போது 46 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் சில ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்துவதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7 ஓட்டல்க ளுக்கு தலா ரூ.2000 அபரா தமும்,5 ஓட்டல்களுக்கு ரூ.5000 ஆயிரம் என மொத்தம் ரூ.39 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாமுத்து கூறும் போது, ஓட்டல்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். கெட்டுப்போன இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்தினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அருப்புக்கோட்டை யூனியனில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சூரியகுமாரி, காஜாமைதீன் பந்தே நவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரிய வள்ளிகுளம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழுமானிய திட்டத்தின் கீழ் ரூ.60 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கூட சமையலறை புனரமைப்பு பணிகளையும், பெரிய வள்ளிகுளம் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியலறை கட்டுமான பணிகளையும், குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 70 வீடுகள் ரூ.351.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குல்லூர்சந்தை, வண்ணான் ஊரணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் மேற்குவரத்து கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதையும், பாலவநத்தம் ஊராட்சியில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டுவரும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.76 ஆயிரம் மதிப்பில் நூலக கட்டிட பராமரிப்பு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    செட்டிபட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களத்தையும், வடக்கு ஊரணியில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் மற்றும் கரை பலப்படுத்துதல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதையும், கோபாலபுரம் ஊராட்சியில் ரூ.12.98 லட்சம் மதிப்பில் புதிய அங்கன் வாடி மைய கட்டிட பணிகளையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைந்து முடித்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் தண்டபாணி, செயற்பொ றியாளர் இந்துமதி, வட்டாட்சியர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவர்கள் சூரியகுமாரி, காஜாமைதீன் பந்தே நவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • சட்ட விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட அ.முக்குளம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் ஆயுதப்படை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப் பட்டனர்.

    இதனையறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாரின் இத்தகைய பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அ.முக்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பல வருடங்க ளாக கஞ்சா விற்பனை, திருட்டு, மதுபாட்டில்கள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வந்தது.

    சில மாதங்களுக்கு முன்பு அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி வந்த சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் சக போலீசாருடன் இணைந்து கஞ்சா விற்பனை, சட்ட விரோத மதுபான விற்பனை, கொலை, கொள்ளை, மணல் திருட்டு போன்ற குற்ற சம்பவங்க ளுக்கு எதிராக நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அதன் காரணமாக அந்த பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவு குறைந்திருந்தன. மேலும் அ.முக்குளம் பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கும் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்த நிலையில் பணிக்கு வந்த சில வாரங்களிலேயே வாகன தணிக்கையின் போது நரிக்குடி சரகத்தில் ஒரே நேரத்தில் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அதில் சம்பந்தப்பட்ட 8 குற்றவாளி களை அதிரடியாக கைது செய்தனர்.

    அது மட்டுமின்றி நரிக்குடி மற்றும் அ.முக்குளம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள், ஆடு திருட்டு என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்க ளையும் கைது செய்வதற்கு உதவியாக இருந்தனர்.

    இவ்வாறு பணியில் சேர்ந்தது முதல் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதோடு அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கிராமங்க ளுக்கு நேரில் சென்று மாணவர்களின் எதிர்கா லத்தை சீரழிக்கும் கஞ்சாவை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் குற்றச்செயல்கள் குறைந்து வந்ததுடன் காவல் நிலையம் செல்லும் பொது மக்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்ட றிந்து அது தொடர்பாக புகார் கொடுக்கப்படும் நபர்கள் மீது பாரபட்சமின்றி முறையான விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இவர்களை போன்ற நேர்மை யாகவும், பொது மக்களுக்கு பாதுகாவ லனாகவும் இருக்கும் போலீசாரை திடீரென்று இடமாற்றம் செய்யப் பட்டதால் அ.முக்குளம் பகுதியில் மீண்டும் கஞ்சா விற்பனை, கொள்ளை, திருட்டு போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. அதன் காரணமாக மீண்டும் சீர்கேடான பகுதியாக அ.முக்குளம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

    எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் அ.முக்குளம் காவல் நிலையத்தில் நேர்மையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மற்றும் ஏட்டுவின் பணியிட மாற்றத்தை பரிசீலனை செய்து மீண்டும் அ.முக்குளம் காவல் நிலையத்திலேயே பணி அமர்த்த வேண்டும்.

    இதன் மூலம் அ.முக்குளம் காவல் நிலைய எல்லைப்ப குதிகளில் உள்ள கிராமங்களை மீண்டும் அமைதி பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    • இளம்பெண் திடீரென மாயமானார்.
    • ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள வலையப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் பத்மபிரியா (வயது19). வீட்டில் தூங்கி கொண்டிருந்த இவர் திடீரென மாயமானார்.

    கடந்த ஜனவரி மாதத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அப்போது கொடுத்த புகாரின் பேரில் கருப்பசாமி என்பவருடன் தங்கியிருந்த அவரை போலீசார் மீட்டு வந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தந்தை சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×