search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருப்புக்கோட்டை  யூனியனில்  வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    அருப்புக்கோட்டை யூனியன் கோபாலபுரம் ஊராட்சியில் நடைபெறும் அங்கன்வாடி மைய கட்டிட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அருப்புக்கோட்டை யூனியனில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

    • அருப்புக்கோட்டை யூனியனில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சூரியகுமாரி, காஜாமைதீன் பந்தே நவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரிய வள்ளிகுளம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழுமானிய திட்டத்தின் கீழ் ரூ.60 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கூட சமையலறை புனரமைப்பு பணிகளையும், பெரிய வள்ளிகுளம் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியலறை கட்டுமான பணிகளையும், குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 70 வீடுகள் ரூ.351.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குல்லூர்சந்தை, வண்ணான் ஊரணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் மேற்குவரத்து கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதையும், பாலவநத்தம் ஊராட்சியில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டுவரும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.76 ஆயிரம் மதிப்பில் நூலக கட்டிட பராமரிப்பு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    செட்டிபட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களத்தையும், வடக்கு ஊரணியில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் மற்றும் கரை பலப்படுத்துதல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதையும், கோபாலபுரம் ஊராட்சியில் ரூ.12.98 லட்சம் மதிப்பில் புதிய அங்கன் வாடி மைய கட்டிட பணிகளையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைந்து முடித்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் தண்டபாணி, செயற்பொ றியாளர் இந்துமதி, வட்டாட்சியர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவர்கள் சூரியகுமாரி, காஜாமைதீன் பந்தே நவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×