என் மலர்
விருதுநகர்
- அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள எம்.ராமசந்திராபுரம் பகுதியில் ஆமத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் மரத்தடியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. அங்கிருந்து சரவெடி பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட சிவகாசி விசாலாட்சி நகரை சேர்ந்த பரணிதரன்(வயது34), விஜயகுமார்(21) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஆலை உரிமையாளர் சோலையம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர், கன்னிசேரி நாரணாபுரம் ரோட்டில் வாடியூர் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு உள்ள செட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதும் தெரியவந்தது. அங்கிருந்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த வச்சகாரப்பட்டி போலீசார் வாடியூரை சேர்ந்த கருப்பசாமி(36), கீழ திருத்தங்கல் கருப்பசாமி(48), ஓ.கோவில்பட்டி தர்மர்(33) ஆகியோரை கைது செய்தனர்.
- கூர்நோக்கு இல்ல சிறுவன்-கல்லூரி மாயமானார்கள்.
- ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மல்லி புதூரில் சிறுவர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருக்கும் சிறுவன் மாடியில் காய வைக்கப்பட்ட துணிகளை எடுத்து வருவதாக கூறி சென்றார். பின்னர் அவனை காணவில்லை. எங்கு சென்றார்? என தெரியவில்லை.
இதுகுறித்து கூர்நோக்கு இல்லத்தின் கண்காணிப்பாளர் திலகவதி கொடுத்த புகாரின்பேரில் மல்லி போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகள் காயத்ரி(19). விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தோழியுடன் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்ைல. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இதுகுறித்து மாணவியின் தாய் இதயகனி கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை நெசவாளர்காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜனனி(28). குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கணவர் ராஜ்குமார் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருடச்சென்ற வீட்டில் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் விட்டு சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் சூலக்கரை மேடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் முருகன்(வயது57). இவரது மனைவி புஷ்பம். இவர்கள் ஊருக்கு வரும் மகனை அழைத்து வருவதற்காக ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தனர். அப்போது மர்மநபர்கள் வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முருகன் குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். இவர்கள் வருவதை கண்ட மர்மநபர்கள் பின்கதவு வழியாக தப்பி சென்றனர்.
அப்போது அவர்கள் பை ஒன்றை விட்டு சென்றனர். அதில் வெள்ளியிலான விநாயகர் சிலை, கரண்டிகள், கிண்ணங்கள், காமாட்சி விளக்கு, தட்டுகள், உடைந்த தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அவைகளை சூலக்கரை போலீஸ் நிலையத்தில் முருகன் ஒப்படைத்தார். மேலும் தனது வீட்டில் மர்மநபர்கள் திருட முயற்சி செய்தது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய கும்பல் பிடிபட்டது.
- பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக ேதாப்பு ராம் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ேபாலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு 3 பெண்கள் மற்றும் வாலிபர் ஒருவர் இருந்தார்.
அவர்களில் ஒருவர் விபசார அழகி என்பதும் மற்ற 3 பேரும் புரோக்கர்கள் என்பதும் தெரியவந்தது. புரோக்கர்களாக செயல் பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்த கற்பகம்(வயது 33), ராஜபாளையம் திருவள்ளு வர் நகரை சேர்ந்த ரெஜினா பீவி என்கிற பாத்திமா (44), ராஜபாளையம் அருகே உள்ள மொட்டமலையை சேர்ந்த செந்தூரான் (36) ஆகியோர் செயல்பட்டுள்ள னர்.
அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து இளம் பெண்ணை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் தெருவை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை மீட்டனர்.
அவரை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த பெண்ணை காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
- மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
- உரிமையாளர்-டிரைவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி மற்றும் போலீசார் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அந்த வழி யாக வந்த டிராக்டரை நிறுத்துமாறு சைகை காண் பித்தனர்.
டிராக்டரை ஓட்டி வந்த நபர், போலீசாரை பார்த்த தும் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அந்த டிராக்டரை சோதனை செய்தபோது, அதில் வண்டல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். டிராக்டரை ஓட்டி வந்த மாரியப்பன் மற்றும் உரிமை யாளர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
- தன்னை பிரிந்து சென்றதால் ராஜேஸ்வரி மீது பரமசிவத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
- ரங்கப்பநாயக்கன்பட்டி கண்மாயில் பகுதியில் பதுங்கி இருந்த பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துப்பாண்டி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி ராஜேஸ்வரி தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்கு பதிந்து அவரை கொன்றது யார்? என்று விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.
சாத்தூர் அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி பரமசிவம் (51). விறகு விற்க வந்தபோது இவருக்கும், ராஜேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இந்நிலையில் ராஜேஸ்வரி கணவரை பிரிந்து பரமசிவத்துடன் சென்று விட்டார். அவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேஸ்வரி தனது கணவர் வீட்டுக்கே வந்து விட்டதாக தெரிகிறது.
தன்னை பிரிந்து சென்றதால் ராஜேஸ்வரி மீது பரமசிவத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அந்த ஆத்திரத்திலேயே சம்பவத்தன்று ராஜேஸ்வரியை கழுத்து அறுத்து கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பரமசிவம் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரங்கப்பநாயக்கன்பட்டி கண்மாயில் பகுதியில் பதுங்கி இருந்த பரமசிவத்தை போலீசார் கைது செய்தனர். ராஜேஸ்வரியை கொலை செய்து விட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த பரமசிவத்தை 18 நாட்களுக்கு பிறகு போலீசார் இன்று கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- 2 வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே சீதாலட்சுமி பிரிந்து சென்றுவிட்டார்.
- உடனடியாக பெண் பார்க்க வேண்டும் என கார்த்திக் வற்புறுத்தி உள்ளார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே பந்தநேந்தலை சேர்ந்தவர் தவமணி. இவரது மனைவி லட்சுமி(வயது55). இவர்களுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவருக்கும் சீதாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருணமாகி 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
2 வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே சீதாலட்சுமி பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் குழந்தைகள் கார்த்திக்கின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் 2-வது திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தார்.
சம்பவத்தன்று தாயிடம் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது பெண் பார்ப்பதாக தாய் கூறியுள்ளார். ஆனால் உடனடியாக பெண் பார்க்க வேண்டும் என கார்த்திக் வற்புறுத்தி உள்ளார். அப்போது பொறுமையாக இருக்குமாறு தாய் கூறியுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயை குத்தினார்.
அதை பார்த்து தடுக்க வந்த தந்தையையும் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் காயமடைந்த லட்சுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
- ஈஸ்வரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
- தான் இறந்து விட்டால் குழந்தைகள் அநாதையாகி விடுமே என்று கருதிய பாண்டீஸ்வரி, அவர்களையும் கொல்ல திட்டமிட்டார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன், விவசாயி. இவரது மனைவி பாண்டீஸ்வரி(வயது35). இவர்களுக்கு வைத்தீஸ்வரி (16), காளீஸ்வரி(11) என்ற 2 மகள்களும், 1 வயதில் விக்னேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இதில் வைத்தீஸ்வரி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பும், காளீஸ்வரி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் ஈஸ்வரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் கடும் அவதியடைந்தார். பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதன் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது மனைவி பாண்டீஸ்வரி மற்றும் மகள்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஈஸ்வரனின் இழப்பை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உறவினர்கள் இறுதி சடங்குகளை முடித்து விட்டு சென்றபின் வீட்டில் பாண்டீஸ்வரி தனது மகள்கள் மற்றும் மகனுடன் தனியாக இருந்தார். கணவர் இறந்தபின் வாழ விருப்பமில்லாத அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கொண்டதாக தெரிகிறது.
தான் இறந்து விட்டால் குழந்தைகள் அநாதையாகி விடுமே என்று கருதிய பாண்டீஸ்வரி, அவர்களையும் கொல்ல திட்டமிட்டார். அதன்படி நேற்று இரவு கோட்டையூரில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்துக்கு மகள்கள் மற்றும் மகனை அழைத்துச் சென்ற பாண்டீஸ்வரி அங்குள்ள கிணற்றில் முதலில் 2 மகள்களை தள்ளிவிட்டும், பின்னர் மகனை கிணற்றில் போட்டும் கொன்றார். அதன் பின் அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக தெரிகிறது.
இன்று காலை வீட்டில் பாண்டீஸ்வரி மற்றும் குழந்தைகள் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் அவர்கள் தோட்டத்து வீட்டில் பிணமாக மிதந்தது தெரியவந்தது.
ஒரே கிணற்றில் 4 பேர் இறந்து கிடப்பது குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் இறந்த 3 நாளில் தனது 2 மகள்கள், மகனுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள், சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சாதி அடையாளங்களை தவிர்ப்பது ஆகியவை குறித்தும் போலீசார் ஆலேசானை வழங்கினர்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், உத்தரவின்பேரில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள், சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆலோசனைப் படி அ.முக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் போதை தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். அ.முக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோ சனைகளை வழங்கினார்.
கூட்டத்ததில் சைபர் குற்றங்கள் குறித்தும், 1930 புகார் எண் குறித்தும் விளக்கப்பட்டது.
பாலியல் குற்றங்கள் குறித்தும், குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும்? என்பது பற்றியும் எடுத்து கூறப் பட்டது. பெற்றோர்களை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள், போக்சோ சட்டம், குழந்தை திருமணம், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை, சாதி அடையாளங்களை தவிர்ப்பது ஆகியவை குறித்தும் போலீசார் ஆலேசானை வழங்கினர்.
- மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 வாலிபர்களை கைது செய்தனர்.
- ராஜபாளையம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து சென்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக ராஜபாளையம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சீனிவாச பெருமாள் துணை சூப்பிரண்டு பிரீத்திக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி மற்றும் போலீசார் ராஜ பாளையம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது தனியார் பெட்ரோல் பல்க் அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்றுகொண்டி ருந்தார். அவரிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில ளித்தனர். பின்னர் அந்த இடத்தில் சோதனையிட்ட போது 30 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது பெயர் கருப்பசாமி (60) என்பது தெரியவந்தது.
அதேேபால் தவ வனபுரம் போலீசார் நேற்று இரவு புத்தூர் இனாம்கோவில் அருகே உள்ள சுடுகாட்டு பகுதியில் ரோந்து சென்ற னர். அப்போது ஜெய் சங்கர்(39) மதுபாட்டில்கள் விற்றது தெரியவந்தது. அப்போது அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
- பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் சரியான பதிலடி தருவார்கள்.
- மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டிளித்தார்.
விருதுநகர்
சாத்தூர் அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தன்மை மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி., ரகுராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து சாத்தூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவி களுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. பரிசு வழங்கினார். தலைமையாசிரியை மெர்சிக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.மாநிலத்தில் அமைச்சர்க ளின் துறைகளை மாற்றி அமைக்க முதல்-அமைச்ச ருக்கு உரிமை உள்ள நிலை யில் அதனை முறையாக தெரிவித்தும் கவர்னர் ஏற்க மறுத்தது ஏற்புடையதல்ல.
கடந்த 2005-ல் குஜராத்தில் மோடி முதல்-அமைச்சராக இருந்தபோது அமித்ஷா ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராக செயல்பட்டார்.
ஆனால் தற்போது தமிழக கவர்னர் இதுகுறித்து கேள்வி கேட்டது வியப்பாக உள்ளது. சி.பி.ஐ. அமைப்பு அனுமதி பெற்று தான் தலைமை செயலகத்தில் சோதனை நடத்த வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்தி உள்ளது பாராட்டத்தக்கது.
அமலாக்கத்துறை தலைமை செயலகத்தில் சோதனை நடத்தியது தமிழகத்தின் மீது செய்த தாக்குதலாகும். இந்த நடவடிக்கைகளுக்கு சரியான பதிலை வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறி னார்.பேட்டியின்போது விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கடற்கரை ராஜ், நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன்,மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ், மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் உடனிருந்தனர்.
- கள் விற்ற தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
- 2 பேர் பிளாஸ்டிக் பாட்டில்களில் பதநீர் விற்றுக் கொண்டிருந்தனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் கள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அன்னையர் தோப்பு பண்ணை அருகே 2 பேர் பிளாஸ்டிக் பாட்டில்களில் பதநீர் விற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அந்த பாட்டில்க ளை சோதனை செய்த போது அது கள் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள்
மீனாட்சி தோட்ட தெருவை சேர்ந்த அர்ஜு னன் (வயது 56) மற்றும் அவரது மகன் செல்வகுமார் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப் பட்டிருந்த 80½ லிட்டர் கள்ளை அழித்த போலீசார் தந்தை, மகனை கைது செய்தனர்.






