search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டுவண்டி பந்தயம்
    X

    மாட்டுவண்டி பந்தயம்

    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழக்குடி கிராமத்தில் உள்ள தூய அமல உற்பவி அன்னை மாதா கோவில் திருவிழா நடந்து வருகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் தொடங்கியது. இதில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளுக்கான பந்தய போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயமானது கீழ்க்குடி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை 10 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பெற்றது. இதில் 9 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 19 ஜோடி சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் அதன் சாரதிகளும் கலந்து கொண்டனர்.

    கோவில் திருவிழாவை யொட்டி நடைபெற்ற இந்த ரேக்ளா மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கும், சாரதி களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த ரேக்ளா மாட்டு வண்டி பந்தயத்தினை பொதுமக்கள் ஏராள மானோர் கண்டு களித்தனர். திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலை மையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×