என் மலர்
விழுப்புரம்
- எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது.
- நீரில் மூழ்கி திருமலை பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மேல்செவலாம்பாடி பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன் மகன் திருமலை (வயது 45)விவசாயி.நேற்று மாலை மேல்செவலாம்பாடியில் இருந்து எயில் பகுதியை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது. பின்னர் நீரில் மூழ்கி திருமலை பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து மேல்மலையனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய சிறப்பு அதிகாரி பரஞ்சோதி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்து இறந்து கிடந்த திருமலை உடலை மீட்டு அவலூர்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்த னர். அவலூர்பேட்டை போலீசார் திருமலை உடலை பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
- பக்தர்கள் அந்த மஞ்சளை எடுத்துச் சென்று கட்டி வைப்பதால் சகல பாக்கியமும் உண்டாகும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் மலையடி வாரத்தில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மஞ்சள் இடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டுக்கான மஞ்சள் இடிப்பு திருவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மகா காளியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணி அளவில் சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து மகாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4.30 மணி அளவில் அக்னி தீர்த குளக்கரையில் கரகம் ஜோடிக்கப்பட்டு உடுக்கை அடித்து காளியம்மனை அழைத்து சென்று மல்லாக்காக படுக்க வைத்து மார்பின்மீது உறல் வைத்து அதில் மஞ்சளை கொட்டி மயிலம்குரு மகா சன்னிதானம் குமாரசிவ விஸ்வநாதன் மற்றும் பக்தர்கள் சேர்ந்து மஞ்சளை இடித்து இடிக்கப்பட்ட மஞ்சளை பக்தர்கள் மீது வாரி இறைத்தனர்.
பக்தர்கள் அந்த மஞ்சளை எடுத்துச் சென்று வீடு மற்றும் வியாபார தலங்களில் கட்டி வைப்பதால் சகல பாக்கியமும் உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாத வர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம் என்பதால் அந்த கோவில் அருகில் பக்தர்கள் முண்டி மோதிக் கொண்டு அந்த மஞ்சளை எடுத்துச் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மயிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மபுர ஆதினம்20-ம் பட்டம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் குமாரசிவ விஸ்வநாதன் முன்னிலையில் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
- ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
மரக்காணம் பாலகிருஷ்ணா தெருவில் வசிக்கும் விஜயகுமார் (வயது 23) தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதும், ஜாமீனில் வெளியில் வரும் அவர், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் மரக்காணம் போலீசார் விஜயகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- லாரிகளில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
- ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் செம்மண்ணை எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு அதிகளவில் செம்மண் மற்றும் கிராவல் மண் கிடைக்கும். இதனை ஒரு சிலர் லாரிகளில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில் நடுக்குப்பத்திலிருந்து ஆலத்தூருக்கு செல்லும் வழியில் நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் செம்மண்ணை எடுத்து லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த விவசாயி ஒருவர் இது குறித்து கிராம மக்களிடம் கூறினார்.
உடனடியாக 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைக் கண்ட செம்மண் கொள்ளையர்கள் வாகனங்களை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். இது தொடர்பாக கிராம மக்கள் வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செம்மண் மற்றும் கிராவல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. எந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் குருமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்?, இந்த வாகனங்களின் உரிமையாளர் யார்? என்பது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
- ஆண்களுக்கு 8சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.2 கோடியும் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.2 கோடி அளவிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்க சிறப்பு லோன் மேளாக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியின் கிளைகளான விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி, விழுப்புரத்தில் 17-ந் தேதியும், திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கி,திண்டிவனத்தில் 18-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி,வானூரில்22-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, விக்கிரவாண்டியில் 24-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி,மரக்காணத்தில்25-ந் தேதியும், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி செஞ்சியில் 29-ந் தேதியும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெறும். திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20 லட்சத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. மகளிருக்கான சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.கடன் விண்ணப்பங்களானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கியின் கிளைகளிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலும் கிடைக்கும். முகாமில் கலந்து கொள்ள வரும் முன்பே விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் , திட்ட அறிக்கை, ஒட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். எனவே,விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இச்சிறப்பு லோன் மேளாக்களில் கலந்து கொண்டு கடன் உதவி பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- நேற்று இரவு 10 மணி முதல் விழுப்புரம் நகரப் பகுதியில் லேசான குளிர்ந்த காற்று வீசியது.
- திடீர் மழையால் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்ததுள்ளனர்.
விழுப்புரம்:
ஆடி மாத காற்றில் அம்மியும் நகரும் என்ற வழக்கு மொழி உள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஆடிமாதம் பிறந்தது முதல் விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெயில் அடிக்கிறது. சித்திரை மாத கத்திரி வெயிலை விட அதிகமாக காணப்பட்டது. இதனால் விழுப்புரம், கோலியனூர், பெரும்பாக்கம், சாலை அகரம் மற்றும் செஞ்சி பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வரும் 10-ந்தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். 110 டிகிரி வரையில் வெயில் அடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை விழுப்புரம் நகர சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த அளவிலேேய காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் விழுப்புரம் நகரப் பகுதியில் லேசான குளிர்ந்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து 11 மணி முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. விடியற்காலை 3 மணி வரை மழை நீடித்தது. இதனால் விழுப்புரம் நகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. வெப்பசலனத்தால் பெய்த இந்த திடீர் மழையால் விழுப்புரம் நகரப்பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல இரவு நேரங்களில் ஒரிரு நாட்கள் மழை பெய்தால் வெயிலின் தாக்கம் குறைந்து விடும். அதேசமயம் இந்த திடீர் மழையால் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்ததுள்ளனர்.
- சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
- விமல் தான் லட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடு த்–து ள்–ளார்.
விழுப்புரம்:
விக்கரவாண்டி தாலுகா நாரங்கசிங்கனூரை சேர்ந்தவர் வினோத் (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (26). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த 4-ந்தேதி லட்சுமியின் சேலையில் தீப்பற்றி பலத்த தீக்காய மடைந்தார். இவரை அப்ப குதியில் உள்ளவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து கஞ்சனூர் போலீசார் தீ விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். லட்சுமியின் உடல் நேற்று மாலை நாரங்கசி ங்கனூருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு வந்த லட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்கள் திடீரென விழுப்புரம் - செஞ்சி சாலையில் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்ட னர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கஞ்சனூர் போலீசார், லட்சுமியின் உறவினர்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், லட்சுமி இறப்புக்கு அவரது கணவரின் தம்பி விமல்தான் காரணம். சென்னையில் சினிமா படக்குழுவில் வேலை பார்த்து வரும் அவர் தனது அண்ணன் மனைவியான லட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடு த்து ள்ளார். அதனால் தான் லட்சுமி தீக்குளித்து இறந்தார். எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்–மையான குற்றவாளியை கைது செய்திட வேண்டும் என்று தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து கஞ்சனூர் போலீசார் வினோத்தின் தம்பி விமலை இன்று அதிகாலை கைது செய்தனர். கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
- காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
விழுப்புரம்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை மறுநாள்( 9 -ந் தேதி ) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், நவமால்மருதூர், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ராமரெ ட்டிக்குளம், வெள்ளா ழங்கு ப்பம், மிட்டாம ண்டகப்பட்டு, ஆலமரத்து க்குப்பம், வடுக்கு ப்பம் உள்ளிட்ட 10 கிரா மங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- மர்ம நபர்கள் 31/2 பவுன் தங்க நகை 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
- தடாவிற்கு சென்று மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒலக்கூர் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட பல்வேறு பகுதி களில் தொடர்ந்து வீட்டில் வெளியே தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களை குறி வைத்து அவர்கள் வீடுகளுக்கு சென்று நகை, பணத்தை கொள்ளை யடிப்பது தொடர்கதை யாகவே இருந்து வந்தது. கடந்த 1-ந் தேதி கோனேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த பாபு வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 31/2 பவுன் தங்க நகை 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
அதேபோல அன்னம் பாக்கம் கலையரசி, கம்பூர் வேலு, பாதிரி முரளி ஆகி யோர் வீட்டில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மர்ம நபர்கள் கொள்ளை யடித்துச் சென்றனர். இது குறித்து ஒலக்கூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கைரேகை மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் குற்றவாளி களை போலீசார் தேடிய நிலையில் இந்த 4 பேர் வீட்டிலும் கொள்ளை அடித்த நபர்கள் ஆந்திர மாநிலம் தடாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இைதயடுத்து ஒலக்கூர் சப் -இன்ஸ்பெக்டர் ஆன தனாசன், தலைமை காவலர் கணேசன் ஆகியோர் ஆந்திரா மாநிலம் தடாவில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதி யைச் சேர்ந்த சாரதி (20)மற்றும் வாழப்பட்டு பல்ல நிமிலி செய்யூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (20) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த பணத்தில் தடாவிற்கு சென்று மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட 2 பேரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.சாரதி செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்படிப்பை2 ஆண்டு வரை படித்துவிட்டு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சூர்யாவிடம் சேர்ந்து குடித்துவிட்டு உல்லாசமாக ஆடம்பரமாக இருப்பதற் காக திருடியதும் விசார ணையில் தெரியவந்தது.
- ஜானகிராமன் உறவினர் இல்ல காதணி விழா திண்டிவனத்தில் நடைபெற்றது.
- தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் பலத்த காயமடைந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மடவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல் மகன் ஜானகிராமன் (வயது 29). இவர் சுகாதாரத் துறையில் ஊழியராக சிதம்பரத்தில் பணியாற்றி வந்தார். இவரது உறவினர் இல்ல காதணி விழா திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது முண்டியம்பாக்கம் ஆலைப் பகுதியில் உள்ள கூட்ரோட்டை கடக்க முயன்றார். இவரது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் பலத்த காயமடைந்தார். அவ்வழியே சென்றவர்கள் இவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆற்று கரையோ ரத்தில் போர் போட்டு தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்சி வருகிறார்.
- இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாய் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆமூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு அருகில் ஆறு ஒன்று உள்ளது. இந்நிலை யில் ஆறுமுகம் தனது விவசாய நிலத்தின் அருகில் உள்ள ஆற்று கரையோ ரத்தில் போர் போட்டு தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்சி வருகிறார்.
ஆறுமுகம் விவசாய நிலத்திற்கு பக்கத்து விவசா ய நிலத்தின் உரிமையாளர் கண்ணன். ஆறுமுகம் போ ட்ட போர் பக்கத்திலேயே கண்ணனும் போர் போட முயன்று ள்ளார். இதனால் ஆறுமு கம் கண்ணனிடம் சென்று நான் தான் இங்கு போர் போட்டுள்ளேன் இதன் அருகே நீ போர் போடாமல் கொஞ்சம் தள்ளி சென்று போர் போடு என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது.
இதனையடுத்து விவசாய நிலத்தில் இருந்த ஆறுமுகம், இவரது மனைவி கண்ணியம்மாள், மகன் மணிகண்டனை ஆகிய 3 பேரையும் கண்ணன், அய்ய னார், அய்யப்பன், கிருஷ்ணன் ஆகியோர் அங்கு சென்று தாக்கினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஆறுமுகம், இவரது மனைவி கண்ணியம்மாள், மகன் மணிகண்டன் ஆகி யோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கண்ணியம்மாள் திருவெ ண்ணைநல்லூர் போலீசில் கொடுத்த புகார் கொடு த்தார். புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கார்திகேயன், ஆறுமு கம் குடும்பத்தை தாக்கிய கண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அய்யனார், அய்யப்பன் ஆகியோரை கைது செய்த னர். மேலும் இந்த வழக்கில் தொடர்பு டைய கண்ணன் மற்றும் கிருஷ்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.
- வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஆரம்பித்த தொழிலில் பிரகாஷ்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- தீபிகா, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்பத் தகராறு காரணமா?
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வந்து உள்ளூரிலேயே தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிளஸ்-2, 10-ம் வகுப்பு பயிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிறகு, ஆரம்பித்த தொழிலில் பிரகாஷ்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கடன் அதிகரித்து பிரகாஷ்க்கும் அவரது மனைவி தீபிகாவிற்கும் (35) இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தீபிகா தொங்கினார். இதனைக் கண்ட அவரது பெண் குழந்தைகள் கதறி அழுதபடி தந்தை பிரகாஷிடம் கூறினர்.
இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மரக்காணம் போலீசார், தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலை செய்து கொண்ட தீபிகா, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்பத் தகராறு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






