என் மலர்
விழுப்புரம்
- ஆம்னி பஸ், திருவண்ணாமலையில் 3 பயணிகளை இறக்கிவிட்டு புதுவை நோக்கி வந்தது.
- அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழுப்புரம்:
பெங்களூருவில் இருந்து புதுவைக்கு ஆம்னி பஸ் நேற்று மாலை புறப்பட்டது. இந்த பஸ்சினை புதுவை மாநிலம் சண்முகாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 39) என்பவர் ஓட்டி வந்தார். 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் 2.30 மணியளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட இந்த ஆம்னி பஸ், திருவண்ணாமலையில் 3 பயணிகளை இறக்கிவிட்டு புதுவை நோக்கி வந்தது.
இந்த ஆம்னி பஸ் விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே அத்தியூர் திருக்கை சாலையில் நேற்று இரவு 9 மணியளவில் வந்தது, அப்போது பஸ்சின் ஸ்டேரிங்கில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் உள்ளிட்ட பயணிகளுக்கு லேசான காயங்கள் மட்டுமே இருந்ததால், அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திண்டிவனம் அருகே ஓட்டலில் சிலிண்டர், இரும்பு பைப்புகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாரம் லேபை அருகே திண்டிவனம் ஜக்கா பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் (வயது 36) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்பக்கத்தில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 2 சிலிண்டர்கள், இரும்பு பைப்புகளை திருடி சென்றனர். இது குறித்து அசோக் கொடுத்த புகாரின் பெயரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
அப்போது சாரம் லேபை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சாரம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 54), கலாநிதி (35) ஆகியோர் என்பதும், இருவரும் ஓட்டலில் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த சிலிண்டர் மற்றும் இரும்பு பைப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமாகவே முன்வந்து செய்திட வேண்டும்.
- சட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திறந்த வெளி கிணறுகள், பழுதடைந்த ஆழ்துளை குழாய் கிணறுகள் மற்றும் காலாவதியான குவாரிகள் அமைந்துள்ள இடங்களின் உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களுக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ள மேற்படி ஆபத்து விளைவிக்கும் நீர்நிலைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமாகவே முன்வந்து செய்திட வேண்டும்.
திறந்தவெளி கிணறுகளை சுற்றிலும் உயரம் அதிகமுள்ள தடுப்புச் சுவரினை அமைத்தும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை கடினமான இரும்பு மூடிகள் அமைத்தும், குவாரி பள்ளங்கள் மற்றும் திறந்தவெளி பள்ளங்களை பொருத்த மட்டில் கம்பி வேலி அமைப்புகளை ஏற்படுத்தியும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்
அனைத்து அரசு துறை மாவட்ட நிலை அலுவலர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட மேற்படி அமைப்புகள் குறித்த பட்டியலினை ஒரு வார காலத்திற்குள் எடுத்து, அவற்றின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்த அறிக்கையினை 10 தினங்களுக்குள் சமர்பித்திட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாடற்ற திறந்தவெளி கிணறுகள் மற்றும் பள்ளங்களை பொறுத்தமட்டில் தொடர்புடைய அரசு துறையினர் 10 தினங்களுக்குள் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரித்தல் தேவையான இடங்களில் புதியதாக ஏற்படுத்துதல் மற்றும் சாலைகளின் எல்லைகளில் இரும்பு பாதுகாப்பு தகடுகள் அமைத்தல், இரவு நேரங்களில் ஒளிரும் அமைப்புகளை ஏற்படுத்துதல், சாலைகளில் தேவையான இடங்களில் கூடுதல் வெள்ளை மற்றும் மஞ்சன் நிற கோடுகள் அமைத்து அதன் அறிக்கையினை 28-ந்தேதிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். நில உடைமையாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட தவறினால் அவர்களுக்கு எதிராக பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாக கருதி சட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
- மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருள் விற்பவர்கள் சம்பந்தமாக தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள் அடங்கிய சிறிய அட்டையை மாணவர்களுக்கு வழங்கினர். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவெண்ணெநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- கீதாஞ்சலி தலைமை தாங்கி கல்லுாரி மாணவர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.
- உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் கீதாஞ்சலி தலைமை தாங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் கீதாஞ்சலி தலைமை தாங்கி கல்லுாரி மாணவர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். துணை முதல்வர் சங்கீதா, மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், துறை தலைவர்கள் ராஜாராம், தமிழ்மணி, ஜானகி, செந்தில்குமாரி, உதவி பேராசிரியர்கள் சீனிவாசன், உதயசூரியன், வெங்கடேஷ்குமார், ரமேஷ், ஸ்ரீராம், நிர்வாக அலுவர் சிங்காரம், கல்லுாரி மாணவ, மாணவிகள் போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.
- ஜெயச்சந்திரன் கரடிப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி செய்தார்.
- சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் இறந்து போனார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50). கரடிப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி செய்தார். இவர், இவரது உறவினர் ரவிச்சந்திரன் (49) என்பவருடன் விழுப்புரம் சென்று, நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து தென்மங்கலத்திற்கு செல்ல சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.
இதில் ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் சிவக்குமார் (30), அவரது மனைவி ஆனந்தி (25) ஆகியோர் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெயச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் இறந்து போனார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஜய் என்ற அனாமிக்கா தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
- தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் என்ற ஊரை சேர்ந்த பூபதி என்பவரது மகன் விஜய் என்ற அனாமிக்கா (வயது 22). திருநங்கை. இவர் பிடாகத்தில் இருந்து செஞ்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அவர் சிட்டாம்பூண்டி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அனாமிகா வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அனாமிகா தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த செஞ்சியை சேர்ந்த விஜயதாஸ் என்பவரது மகன் பாலாஜி (23), காதர் என்ப வரது மகன் சானவாஸ் (23) ஆகியோர் காயங்களுடன் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.செஞ்சியை அடுத்த ஊரணித் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32). இவர் தனது வீட்டில் இருந்து கடைவீதிக்கு சென்றார். அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செஞ்சி போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய காரில் பலத்த காயங்களுடன் தந்தை, தாய், மகன் என 3 பேரும் சிக்கி தவித்தனர்.
- மகன் சிவராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
வானூர்:
சென்னை மேற்கு மாம்பலம் சுப்பையா நகரை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷன் (வயது 58). உயர்நீதிமன்றத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லலிதா (55), மகன் சிவராமகிருஷ்ணன் (23) ஆகியோருடன் நேற்று இரவு மயிலாடுதுறையில் உள்ள கோவிலுக்கு செல்ல காரில் புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலையில் வந்த இந்த காரை சிவராமகிருஷ்ணன் ஓட்டி வந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகேயுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் கார் வந்தபோது, அடையாளம் தெரியாத நபர் திடீரென சாலையை கடக்க முயற்சித்தார். அவர் மீது மோதாமல் இருக்க சிவராமகிருஷ்ணன் காரினை திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகிலிருந்த மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய காரில் பலத்த காயங்களுடன் தந்தை, தாய், மகன் என 3 பேரும் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கோட்டக்குப்பம் போலீசார், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 3 பேரையும் மீட்டனர். புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி உயர்நீதிமன்ற உதவி அலுவலர் ஸ்ரீவர்ஷன், அவரது மனைவி லலிதா இருவரும் இறந்தனர். இவர்களது மகன் சிவராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் நேற்று திரும்பி வந்து கொண்டிருந்தார்.
- ஸ்கூட்டரில் இருந்து அவர் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார்.
விழுப்–பு–ரம்:
விழுப்–பு–ரம் மாவட்–டம் வானூர் தாலுகா நல்–லா–வூர் கிரா–மத்தைசேர்ந்–த–வர் லோக–நா–தன் (வயது 42). அவ–ரது மனைவி தேவி (38). இவர் கிளி–ய–னூ–ருக்கு சென்று வீட்–டுக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று திரும்பி வந்து கொண்–டி–ருந்–தார்.
கிளி–ய–னூர் ஏரிக்–கரை சாலை–யில் வந்–தபோது எதிர்–பா–ராத வித–மாக ஸ்கூட்–டரில் இருந்து அவர் நிலைத–டு–மாறி தவறி கீழே விழுந்–தார். இதில் அவருக்கு மூச்–சுத்தி–ண–றல் ஏற்–பட்டு சம்–பவ இடத்–தி–லேயே பரி–தா–ப–மாக இறந்–தார்.
இது–கு–றித்து தக–வல் அறிந்–த–தும் சம்–பவ இடத்–திற்கு விரைந்து சென்ற கிளியனூர் போலீ–சார் அவ–ரது உடலை கைப்–பற்றி பிரேத பரி–சோதனைக்–காக புதுச்–சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்து வக்கல்லூரி ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்த–னர்.
- போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
- கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
விழுப்புரம்:
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். அதையொட்டி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, தாசில்தார் வேல்முருகன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கல்லூரி முதல்வர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.
விழுப்புரம்:
தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், மாநில விசாரணைக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.
- ஆடிப்பட்டதுக்கு நெல் நாற்று நடுவதாக நினைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசி இரவு நேரங்களில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இரவு முழுவதும் பெய்தது. மழை பெய்யும் பொழுது விழுப்புரம் மாவட்ட புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் அதிகளவில் தேங்கும். ஆனால் தற்போது நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையம், கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போடப்பட்ட வடிகால் வாய்க்கால் மூலம் மழைநீர் தேங்காத வண்ணம் உள்ளது.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் அதிக அளவில் மழை பெய்தாலும் மழைநீர் பஸ் நிலையத்தை சூழ்ந்து கொள்ள முடியாது. நேற்று விழுப்புரத்தில் பெய்த மழை பெரும்பாக்கம், தோகைபாடி, நன்னாரு, காணை, சாலமேடு, வழுதரெட்டி, அரசூர், சாலை அகரம், கோலியனூர், வளவனூர், நன்நாட்டாம்பாளையம், வழுதரெட்டிபாளையம், அய்யம்கோவில்பட்டு, முண்டியம்பாக்கம், அய்யூர்அகரம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மழை பெய்தது. மேலும் நேற்று ஆடிக்கிருத்திகை யொட்டி பெய்த மழையால் ஆடிப்பட்டதுக்கு நெல் நாற்று நடுவதாக நினைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






