என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் மயக்கம்"

    • குல்பி ஐஸ் சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
    • இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் இரவு 10 மணியளவில் ஐஸ் சாப்பிட்ட சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    அடுத்தடுத்து ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 3 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மொத்தம் 35 சிறுவர், சிறுமிகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    குல்பி ஐசில் ஏதேனும் மயக்க மருந்து கலந்துள்ளதா? அல்லது கெட்டுப்போன ஐசை வாங்கி சாப்பிட்டதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் குல்பி ஐஸ் விற்பனை செய்த மர்ம நபரை விக்கிரவாண்டி போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் முட்டத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டிவனம் அருகே சத்துமாவு சாப்பிட்ட 30 குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெற்குப்பி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சென்று வருகின்றனர்.

    இன்று காலை அங்கன்வாடி மையத்துக்கு வந்த குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட ஒரு குழந்தை மயக்கம் அடைந்து விழுந்தது. அடுத்து ஒவ்வொரு குழந்தையும் மயங்கியது. ஒரே நேரத்தில் 30 குழந்தைகள் மயங்கியதால் பரபரப்பு எற்பட்டது.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறியடித்து கொண்டு அங்கன்வாடி மையத்துக்கு வந்தனர். தங்களது குழந்தைகள் மயக்கம் அடைந்தது குறித்து பதறிபோனார்கள்.

    உடனடியாக குழந்தைகள் அனைவரும் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஒலக்கூர் யூனியன் துணை தலைவர் ராஜாராம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிகிச்சையினை முடுக்கிவிட்டார்.

    இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சத்து மாணவில் பல்லி விழுந்ததால் வாந்தி ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    ×