search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே பிஸ்கெட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
    X

    திண்டிவனம் அருகே பிஸ்கெட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

    • பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி சென்றது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து பெங்களூருக்கு பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி சென்றது. லாரியை தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த வீரமணி ஓட்டி வந்தார். திண்டிவனம் அடுத்த பட்டணம் அருகே வளைவில் வேகமாக திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் திண்டிவனம் காஞ்சிபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக அக்கம் பக்கத்தினர் லாரியிலிருந்து டிரைவரை மீட்டனர். லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×