search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசூர் வி.ஆர்.எஸ். கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கம் விழுப்புரம் டி.ஐ.ஜி., பங்கேற்பு
    X

    போதைப் பொருள் விற்பனை குறித்து புகாரளிக்க வேண்டிய எண்கள் அடங்கிய சிறிய அட்டையை வி.ஆர்.எஸ். கல்லூரி மாணவர்களுக்கு விழுப்புரம் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் வழங்கினார்.

    அரசூர் வி.ஆர்.எஸ். கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கம் விழுப்புரம் டி.ஐ.ஜி., பங்கேற்பு

    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
    • மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருள் விற்பவர்கள் சம்பந்தமாக தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள் அடங்கிய சிறிய அட்டையை மாணவர்களுக்கு வழங்கினர். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவெண்ணெநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×