search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்விழுப்புரம் கலெக்டர் வழங்கினார்
    X

    குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்விழுப்புரம் கலெக்டர் வழங்கினார்

    • குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 355 மனுக்கள் பெறப்பட்டது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர்பழனி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    நேற்றுநடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 355 மனுக்கள் பெறப்பட்டது அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 2 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர கை சைக்கிள் வேண்டி வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்டு, ரூ.19,500 மதிப்பில் 3 சக்கர கை சைக்கிளை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துணை கலெக்டர்விஸ்வநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்வளர்மதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×