

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கருணாவூர் கூட்டு பாதையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்கமுதியவர் இறந்து கிடப்பதாக திண்டிவனம் போலீசருக்கு தகவல் வந்தது .அங்கு சென்று பார்த்தபோது வெள்ளை நிற ஆடைகள், பச்சை கலர் லுங்கி யில் முதியவர் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்து இங்கு வீசி சென்று உள்ளார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் முதியவர் உடலை மீட்டு பிரத சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.