என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் ெபண்ணிடம் நகை-பணம் பறித்த 2 பேர் கைது : மோட்டார் சைக்கிள் பறிமுதல்
- திண்டிவனம் மாரிசெட்டி குளம் அருகே உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
- கைப்பை யில் வைத்திருந்த 5 ஆயிரம் பணம் மற்றும் ஏ.டி.எம் கார்டு ஆகிய வற்பறை றித்துச் சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரி செட்டி குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபசேனா (38) இவர் கடந்த மாதம் 25-ந் தேதி திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு திண்டிவனம் மாரிசெட்டி குளம் அருகே உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தனது இரு சக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு வீட்டிற்கு உள்ளே செல்லும்போது அவரைப் பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4, 1/2 பவுன் தங்கச் செயின் மற்றும் அவரது கைப்பை யில் வைத்திருந்த 5 ஆயிரம பணம் மற்றும் ஏ.டி.எம் கார்டு ஆகிய வற்பறை றித்துச் சென்றனர். ரூபசேனா கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட இரு சக்கர வாகனத்தில் வந்த2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ரோஷனை இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமை யிலான போலீசார் திண்டி வனம் காலேஜ் ரோட்டில் வாகன சோதனை ஈடுபட்டு கொண்டிருந்த னர். அப்போது சந்தேகத் துக்கிட மான வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்ய முற்பட்ட னர். அப்போது இரு சக்கரத்தில் வாகனதில் வந்த 2 பேர் தப்ப ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (வயது 25) விஷ்ணு (வயது 19) ஆகியோர் என்பதும் இவர்கள் கடந்த 25-ந்தேதி ரூபாசேனா விடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இவர்களை கைது செய்து இவர்களிடம் இருந்த 3 பவுன் தங்க நகை ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






