என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச் சாலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கின்றார்.

    விழுப்புரம்:

    தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். கடந்த மாதம் இறுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு அந்தந்த மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவதற்கு உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (செவ்வாய்கிழமை) தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக வருகை புரிய உள்ளார் . விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை சரியாக மதியம் 2 மணிக்கு வரும் தமிழக துணை உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க விழுப்புரம் வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச் சாலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமைச்சர் பொன்முடி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். அதனை தொடர்ந்து வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சரும் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செஞ்சி மஸ்தான், மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்கின்றனர்.

    அதனைத் தொடர்ந்து சரியாக 4 மணி அளவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட சார்பில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் பொன். கவுதமசிகாமணி தலைமையில் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே சிறப்பான வரவேற்பளிக்கப்படுகிறது. இதில் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன் அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மனும் அவை தலைவருமான ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்கின்றனர் .

    அதனைத்தொடர்ந்து சரியாக 5 மணி அளவில் திருவெண்ணெய்நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல திருவுருவ சிலையை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இரவு விழுப்புரத்தில் தங்குகிறார். 6-ந் தேதி காலை 10 மணி அளவில் விழுப்புரம் புதுவை சாலையில் தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கின்றார். காலை 11 மணியளவில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். அப்போது தற்போது நடைபெறும் பணிகள், புதிய திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் கலெக்டர் பழனி மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
    • விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    இதனையடுத்து மாநாட்டில் விஜய் பேசி கொண்டிருந்த போது, மேடை அருகில் இருந்த ரசிகர்கள் திடீரென "கடவுளே - அஜித்தே" என கோஷமிட ஆரமித்தனர். இதை சற்றும் எதிர்பாராத விஜய் உடனே பேச்சை நிறுத்தி விட்டு அமைதி அமைதி என்பது போல கையை அசைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர். 

    • தவெக மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்தனர்.
    • மாநாட்டில் சுமார் 8 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    த.வெ.க மாநாட்டிற்காக இரவும் பகலுமாக திடல் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. பெண்கள் அமர தனி இடம், விஐபிகளுக்கு தனி இடம் என திடல் முழுவதும் தொண்டர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்தனர். மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளாவில் இருந்தும் மக்கள் வருகை தந்தனர்.

    சுமார் 3 மணியளவில் மாநாடு தொடங்கியது. பல்வேறு நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 8 லட்சம் மக்கள் பங்கேற்றுள்ளனர்.

    மாநாட்டு திடல் வெளியில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் எல்இடி திரை மூலம் விஜய்யின் உரையை கண்டுகளித்தனர். இதுப்போன்ற பிரம்மாண்ட அலங்காரத்தை வேறு எங்கும் கண்டதில்லை என மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

    இந்நிலையில், மாநாட்டிற்கு நேற்று செல்ல முடியாதவர்களும், அந்த வழியாக செல்லும் பொது மக்கள் சிலர், மாநாட்டு திடலில் முகப்பு வாயில் முன்பும், மேடை மற்றும் கட் அவுட் முன்பும் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.

    • நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும்
    • ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய அவர் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற வரவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும் தங்களது தங்களை நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும். 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று பேசினார்.

    திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விசிக தங்களின் நீண்ட நாள் நிலைப்பாடாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை மீண்டும் கிளறியது. குறிப்பாக விசிக  துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இது குறித்து பேசியபோது அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது. இந்நிலையில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியதை ஆதவ் அர்ஜுனா வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது.

    அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் திரு. விஜய். அவருக்கு வாழ்த்துகள். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என்று தெரிவித்துள்ளார். 

    • நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும்
    • தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்துள்ளார்.

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய அவர் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற வரவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும்  தங்களை நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும் 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று பேசினார்.

    இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஸ்ணசாமியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்துள்ளதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    வலுவான கொள்கை கோட்பாடுகள், அவற்றை அடைவதற்கான போராட்ட அனுபவங்கள் ஏதுமின்றி திரையுலம், விளையாட்டு எனப் பிற துறைகளில் பெறக்கூடிய புகழ், விளம்பரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அண்மைக்காலமாக பலரும் அரசியலுக்குள் நுழைகிறார்கள்.

    தமிழகத்தை பொறுத்தமட்டிலும் திரை உலக புகழே பலரையும் ஆட்சி அதிகாரத்தில் அமர  வைத்துள்ளது. கொள்கை கோட்பாடுகளை முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் நடைமுறையில் பெரும் தோல்வியுற்று விட்டனர். மேலும், அவர்களே தமிழ்ச் சமூகத்தின் பிரதான எதிரிகளாக பரிணமித்துவிட்ட நிலையில் விரும்பியும் விரும்பாமலும் புதிய சூழல்களை ஏற்றுக் கொள்ளும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

    அண்மையில் துவங்கப்பட் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை விஜய் இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள்.! தமிழ்நாட்டில் டரு 75 வருடத்தில் வந்த அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; அதற்கான பல சூழல்கள் ஏற்பட்டபொழுதும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை. ஆனால், தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்துள்ளார்.

    புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்ற நான் முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சொல்லாமல் ஆட்சியிலும் அதிகாரந்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும், குண மாற்றத்தையும் நிகழ்த்தும்.! அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். 

    • நமக்கு எப்போதும் நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துத்தான் பழக்கம்.
    • தனது பேச்சில் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிக்கவில்லை.

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார்.

    அப்போது கூட்டணி வைப்பது குறித்தும் விஷயங்களைப் பேசினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய அவர் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற வரவில்லை என்று தெரிவித்தார்.

    அதன்பின் பேசிய அவர், நம்மையும் நமது செயல்பாட்டையும் பார்த்து சில பேர் வரலாம் இல்லையா? அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா? அப்படி வருபவர்களை அரவணைக்க வேண்டும் இல்லையா? நமக்கு எப்போதும் நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துத்தான் பழக்கம்.

     

    அதனால் நம்மை நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும் 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று பேசியுள்ளார்.

    தனது பேச்சில் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிக்காததால் அந்த கட்சிகளுடன் அடுத்த தேர்தலில் தவெக கூட்டணி வைக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஷயம் சமீபத்தில் அரசியல் களத்தில் பூதாகரமாக வெடித்தது.

    திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் போர்க்கொடி தூக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு என விஜய் கூறியுள்ளது 2026 தேர்தல் களத்தில் முக்கிய திருப்பமாக அமையும். 

    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது.
    • 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாடு முடிந்த நிலையில், கட்சி தொண்டர்கள் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலை விட்டு வெளியேற முற்பட்டனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் டேன்க்-கள் மற்றும் இருக்கைகளை அடித்து உடைத்தனர்.

    மேலும், பெரும் திரளானோர் ஒரே நேரத்தில் வெளியேற முன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னதாக த.வெ.க. மாநாட்டில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    மாநாட்டில் மயக்கமுற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் என்பவர் உயிரிழந்தார். இவர் தவிர மாநாட்டில் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்த 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சார்லஸ் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் தகவல். ஏற்கனவே சாலை விபத்தில் திருச்சியை சேர்ந்த த.வெ.க நிர்வாகிகள் 2 பேர், சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் த.வெ.க தொண்டர் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஒரு சிறுவனின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
    • தனியாக படையோடு பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பையன் சென்றான்

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார்.

    பேச்சுக்கிடையில் தனது ஸ்டைலில் குட்டி ஸ்டோரி ஒன்றையும் விஜய் கூறியுள்ளார். வழக்கமாக இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் கூறும் குட்டிக் கதை அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். அந்த வகையில் தற்போதும் அந்த பார்முலாவை பயன்படுத்தியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு,

    ஒரு நாட்டில் பெரிய போர் ஒன்று வந்தது. அப்போது நாட்டை வழிநடத்தும் சக்திவாய்ந்த தலைமை இல்லாததால் ஒரு சிறுவனின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதனால் நாட்டில் இருந்த பெரிய ஆட்களெல்லாம் மிகவும் பயத்தில் இருந்தனர்.

     

    ஆனால் அந்த சிறுவன் பயமில்லாமல் படையை நடத்தும் பொறுப்பை ஏற்று போர்க்களம் போகலாம் என்று சொன்னான். அப்போது அங்கு இருந்த பெரிய மனிதர்கள், நீ சின்ன பையன்.. இது பெரிய போர்க்களம், சக்திவாய்ந்த பெரிய எதிரிகள் இருப்பார்கள். அவர்களை களத்தில் எதிர்கொள்வது சாதரண விஷயம் இல்லை. இது விளையாட்டு விஷயம் இல்லை.

    அவர்களை எதிர்த்து எப்படி தனியாக படை நடத்த முடியும், எப்படி ஜெயிக்க முடியும் என்று எல்லாரும் கேட்டார்கள். எந்த பதிலும் சொல்லாமல் தனியாக படையோடு போன பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் சொல்லியிருக்காங்க.. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சிக்கோங்க,  இல்லன்னா.. படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க என்று விஜய் கதையை முடித்தார்.

    சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை, புறநானூறு ஆகியவற்றில் கூறப்பட்ட பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் பற்றிய கதையையே விஜய் இங்கு குறிப்பிடுகிறார். நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார்.

    தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட நெடுஞ்செழியன் ஈடுபட்ட தலையாலங்கானத்துப் போரில் மூலம் அவரது வீரம் போற்றப்பட்டது. விஜய் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளதால் சிறுவன் பாண்டிய நெடுஞ்செழியன் சூழலில் தற்போது தான் இருப்பதாக விஜய் கூற வருகிறார் என்று தெரிகிறது.

    • நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது.
    • ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் வருவார்கள்

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் முதலில் கட்சிப் பிரமுகர்கள் கொள்கைகளை விளக்கியதைத் தொடர்ந்து விஜய் உரையாற்றிவருகிறார்.

    நான் மற்றும் நன்றாக இருப்பது சுயநலம். அதனால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது.

    கேள்விகளின் விளைவாக எழுந்ததே எனது அரசியல் முடிவு. அரசியலில் நமது நிலைப்பாடு என்ன என்பது உறுதியானால் எதிரிகள் தெரிவார்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற போதே எதிரிகள் உறுதியாகிவிட்டனர். பிளவுவாத சித்தாந்தம் மட்டுமல்ல ஊழல் அரசியலும் நமது எதிரிதான்.

     

    பிளவுவாத எதிரிகள் நமது கண்ணுக்குத் தெரிவார்கள். அவர்களை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் வருவார்கள். எதிரிகளைத் தீர்மானித்து விட்டால் மட்டும் போதாது.

    மகத்தான அரசியல் என்றால் மக்களுக்கான அரசியல் தான். திட்டங்கள் அறிவித்து செயல்படுத்துவது என்பதை தேர்தல் முடிவுகள் போல் செயல்படுத்த வேண்டும். 

    இது பணத்திற்காகக் கூடிய கூட்டமல்ல. ஏ டீம், பீ டீம் என்று கூறுவதைக் கண்டு பயப்பட போவதில்லை. எங்களுக்கு யாரும் எந்த சாயமும் பூச முடியாது. நல்லது நடக்காதா என்று மக்கள் காத்திருக்கின்றனர் 2026 இல் போரை அறிவித்ததும் தவெக சின்னத்தில் மக்கள் வாக்களிப்பார்கள். 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு மக்கள் வாக்களிக்பார்கள் என்று பேசியிருக்கிறார்.

    கலாச்சாரம் ஆகியவற்றை அரசியலில் பாஜக முன்னிறுத்தி செயல்பட்டு வரும் நிலையில் விஜய் பேச்சு பாஜகவை மறைமுகமாக விமர்சித்ததாக பார்ப்படுகிறது. மேலும் பெரியாரை நமது கொள்கைத் தலைவராக முன்னிருத்தும்போது பெயிண்ட் டப்பாவை தூக்கிக்கொண்டு சிலர் வருவார்கள் என்று தனது பேச்சின் தொடக்கத்தில் விஜய்  குறிப்பிட்டார் 

    சமீப காலமாக  திருவள்ளுவர்  ஆகிய தமிழர் அடையாளங்களின் மீது காவி சாயம் பூசப்படுவதை விஜய் மறைமுகமாக விமர்சித்ததாகவும் இதை பார்க்க வேண்டி உள்ளது.  ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என்பது தவெக அரசியல் கொள்கைகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும்.
    • தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தாவெக பின்பற்றும்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் விஜய் அமர்ந்திருக்க கட்சியினர் உரையாற்றி வருகின்றனர். அதன்படி மேடையில் உரையாற்றிவரும் கட்சி  பிரமுகர்கள் தவெகவின் கொள்கைகளை எடுத்துரைத்து வருகிறார்.

    அதன்படி, வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே கட்சியின் முதல் கொள்கை .

    மதம் சாதி இனம் மொழிக்குள் மனித சமூகத்தை சுருக்கக்கூடாது.

    மக்களை பாகுபடுத்தாமல் சம உரிமைகளை வழங்க வேண்டும்.

    மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து மக்காளுக்கான ஜனநாயகத்தை மீட்போம்.

    எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் சமம்.

    மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை.

    தமிழ்மொழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

    தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தாவெக பின்பற்றும்.

    போதையில்லா தமிழகம் என்பதே நமது கொள்கை. மக்களுக்கான ஜனநாயக நிலைநாட்டுவோம்.

    நிர்வாகத்தில் அரசியல் தலையீடு எந்த விதத்திலும் இருக்கக்கூடாது. லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்துக்கு உறுதி அளிக்கிறோம்.

    கட்சியின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களுக்கு வழிகாட்டு நடைமுறைகள் உருவாக்கப்படும்.

    மதுரையில் தலைமை செயலக கிளை உருவாக்கப்படும்

    வர்ணாசிர கோட்பாடுகள் எந்த வகையிலும் முழுமையாக எதிர்க்கப்படும்.

    தமிழ் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழநாட்டுக்கு எப்போதும். ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க உறுதி வழங்கப்படும்.

    கல்வியை மாநில பட்டியலில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும்.

    பெண்களுக்கு சட்டமன்றம் கல்விப் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

    மாநிலம் முழுவதும் காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்

    தகவல் தொழிலநுட்பத் துறைக்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்

    மாவட்டந்தோறும் பன்னோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

    ஆக்கிரமிப்பில் உள்ள சதுப்பு, விவசாய நிலங்கள் மீட்கப்படும்

    பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும்

    அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி உடைகள் அணிய உத்தரவிடப்படும்

    மணல் கொள்ளை கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும்

    மாசு கட்டுப்பாடு வாரியம் தற்போது செயலிழந்து கிடப்பதால் அது சீரமைக்கப்படும்

    அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பு அதிகரிக்கப்படும்

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

    போதைபொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும்

    தமிழகம் முழுவதும் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும் 

    • நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார்.
    • மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து  தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.

    நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார். நடந்துவரும் பாதையின் இருபுறமும் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தவெக கட்சிக் கொடி வடிவிலான துண்டுகளை மேடை மீது அவர்கள் வீசினர். அதை அன்போடு எடுத்து தனது தோளில் அணிந்துகொண்டார்.

    அவ்வாறு வீசப்பட்ட கொடிகள் பலவற்றை எடுத்து தனது தோளில் அவர் போட்டுக்கொண்டது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பாதுகாவலர் ஒருவரும் உற்சாக மிகுதியில் நடைபாதை மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    நடைபாதையிலிருந்து நிகழ்ச்சி மேடையில் ஏறிய விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மாமன்னர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வி.சாலையில் நடைபெறுகிறது.
    • நடிகர் விஜய்-க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு வந்ததும், அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ராம்ப் வாக் சென்றார். அப்போது அவரை நோக்கி தொண்டர்கள் வீசிய கட்சி கொடியை, த.வெ.க. தலைவர் விஜய் தன் கழுத்தில் அணிந்து கொண்டார்.

    அதன்பிறகு மேடைக்கு சென்ற விஜய் அங்கு வைக்கப்பட்டு இருந்த மாமமன்னர்கள், மொழிப்போர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டு இருந்த 100 உயர கொடி கம்பத்தில் த.வெ.க. கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

    த.வெ.க. தலைவர் விஜய் கட்சி கொடியை ஏற்றும் போது தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இதைத் தொடர்ந்து த.வ.க. தொண்டர்கள் கட்சி உறுதிமொழி ஏற்றனர்.த.வெ.க. பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்தனர். த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு இதுவரை சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்று தெரியவந்துள்ளது.


    ×