என் மலர்
நீங்கள் தேடியது "relief camps"
- 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
- அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது. மயிலத்தில் 50 செ.மீ. மழை பெய்துள்ள நிலையில் அங்குள்ள தென் ஏரி உடைந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.
இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 செ.மீ. மழை பெய்திருந்தது. தற்போது 47 செ.மீ. மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை.
- பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்கு பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
வயநாட்டில் கனமழை கொட்டியதால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.
இந்நிலையில கேரள மாநிலத்தில் வருகிற 5-ந்தேதி கரை கமனழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்தமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட டுள்ளதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகள் உளிட்ட அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் டியூசன் மையங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருந்தது.
அதேபோல் பாலக்காடு மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி கள், டியூசன் மையங்களுக்கு மாவட்ட கலெக்டர் இன்று விடுமுறை அறிவித்தார்.
இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஏராளமான பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
- 83 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்குவதற்காக 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8ஆயிரத்து 300 பேர் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்து செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.
வயநாடு நலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களை மீட்கும் பணி இன்று 3-வது நாளாக நடந்துவருகிறது. நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அவற்றை தோண்டும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.
பெரிய பெரிய பாறைகள் விழுந்ததாலும், வெள்ளத்தில் அடித்துச்செல்லப் பட்டதாலும் உடல்கள் சிதைந்தநிலையிலேயே மீட்கப்படுகின்றன. இதனால் இறந்தவர்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கிறது.
- சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
- ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள காரணத்தினால், மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இதற்காக மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் போதுமான பொக்லைன் எந்திரம், பவர்ஷா ஆகியவற்றையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மின்வாரியம் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் போன்ற மின் சாதனங்கள் ஏதேனும் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க போதுமான பணியாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்களை கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும், பேரிடர் மேலாண் ைமத்துறை சார்பில் முதல் நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் முன்கூட்டியே மிக அபாயகரமான பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.
மழையினால் பயிர்களுக்கு சேதம் ஏதேனும் ஏற்படின், அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் நல்லநிலையில் உள்ளனவா எனவும், பள்ளியின் மேற்கூரையில் உள்ள குப்பைகள் மற்றும் செடிகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மண் சரிவு ஏற்படும் பகுதிகளின் அருகில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். அபாயகரமான பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, தோட்டக்க லைத்துறை இணை இயக்குநர் கருப்பசாமி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, முகம்மது குதுரதுல்லா, பூஷணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.