என் மலர்tooltip icon

    வேலூர்

    • கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றது.
    • கல்லூரி சார்ந்த ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாக தகவல்.

    தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. ஜனவரி 3 ஆம் தேதி சோதனை துவங்கிய நிலையில், 44 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.

    எட்டு கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக் கொண்டு துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டு சென்றனர். சோதனையை தொடர்ந்து கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை சார்ந்த ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
    • தி.மு.க. விவசாய அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான அமைச்சர் துரைமுருகன் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

    காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள வேலூர் மாநகர தி.மு.க. விவசாய அணி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், அவரது உறவினர் வீட்டிலும், கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

    • நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1.20 மணிக்கு நிறைவடைந்தது.
    • கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். அவரது மகன் கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடைபெற்றது.

    அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரி கதவுகள் மூடப்பட்டன. 2 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான காட்பாடி க்கு அடுத்த பள்ளி குப்பம் வீட்டிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    மேலும் இவரது உறவினருக்கு சொந்தமான சிமெண்டு குடோன் பகுதிகளிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை செய்தனர். இந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் வேலூரில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1.20 மணிக்கு நிறைவடைந்தது.

    ஏதும் முக்கிய ஆவணங்களோ பணமோ சிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. துரைமுருகன் வீட்டில் இரண்டு அறைக் கதவை உடைத்து சோதனை நடைபெற்றுள்ளது.

    சாவி இல்லாததால் உடைப்பு கடப்பாரை, உளியால் உடைத்து அதிகாரிகள் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நேற்று அமைச்சர் துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் 2 பெண்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் வீட்டின் தாழ்வார பகுதியில் 7 மணி நேரம் வரை காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முக்கிய ஆவணங்கனை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமைச்சர் துரைமுருகன் வீடு, அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்

    இந்நிலையில், வேலூர் மாவட்டம் பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    இதில், முக்கிய ஆவணங்கனை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    திமுக எம்பி கதிர் ஆனந்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • வீட்டில் ரெய்டு நடத்தி கொள்ளலாம் என கதிர் ஆனந்த் மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி. வீட்டில் இன்று காலை அமலாக்க துறையினர் சோதனை நடத்த சென்றனர்.

    ஆனால், அமைச்சர் துரைமுருகன் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. மற்றும் குடும்பத்தினர் யாரும் இல்லை என தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், 6 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை தொடங்கியது.

    அமைச்சர் வீட்டு சாவி இல்லாமல், காத்திருந்த அதிகாரிகள்- வேலூர் துணை மேயர் கொண்டு வந்த சாவியை வைத்து திமுக நிர்வாகிகள் சிலர் முன்னிலையில் வீட்டை திறந்து சோதனையை தொடங்கினர்.

    இந்த வீட்டில் அமைச்சர் துரைமுருகனும், அவரது மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் இருவரும் வசித்து வருகின்றனர்.

    இது குறித்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் எம்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சென்னையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும், வீட்டில் ரெய்டு நடத்தி கொள்ளலாம் என கதிர் ஆனந்த் மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    • மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், அரியூர் அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் வேலூர் மத்திய ஜெயிலில் சிறை நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2019 முதல் 2023 வரை மதுரை மத்திய ஜெயிலில் நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அப்போது கைதிகள் தயாரிக்கும் கைவினை பொருட்களுக்கான மூலப் பொருட்களை வாங்குவதாக கூறி ரூ.1 கோடியே 30 லட்சம் ஊழல் செய்ததாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதுகுறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


    இந்தநிலையில் வேலூர் அரியூரில் வசித்து வரும் சிறை நிர்வாக அலுவலர் தியாகராஜன் வீட்டில் இன்று வேலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த சோதனை சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சில ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
    • கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வேலூர்:

    வேலூர் காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளது.

    மேலும் ஆந்திர எல்லையோரம் உள்ள கிறிஸ்டியான் பேட்டையில் கிங்ஸ்டன் என்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரிக்கு வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடு மற்றும் கல்லூரியில் சோதனையை தொடங்கினர்.

    அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரி கதவுகள் மூடப்பட்டன. 2 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன்.

    இவர் காட்பாடி அடுத்த பள்ளி குப்பத்தில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    மேலும் இவரது உறவினருக்கு சொந்தமான சிமெண்டு குடோன் பகுதிகளிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர். இந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் நடந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரியில் இருந்து சில ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோதனை நடந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டார்.

    அப்போது காட்பாடி காந்திநகரில் உள்ள அவர்களின் வீடு. கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம், சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து வள்ளிமலை சாலை பள்ளிக்குப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, பள்ளிக்குப்பத்தில் உள்ள அவரது சகோதரி விஜயா வீடு, சிமெண்ட் கிடங்கு, அதற்கு அடுத்த தெருவில் உள்ள தி.மு.க பிரமுகர் தாமோதரன் வீடு, வஞ்சூர், செங்குட்டை, கோட்டநத்தம் ஆகிய இடங்களில் உள்ள தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி விஜயாவின் சிமெண்ட் குடோனில் இருந்து சாக்கு மூட்டை, அட்டைப் பெட்டிகள், துணிப்பைகளில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவை அனைத்தும் 200 ரூபாய் கட்டுகளாக இருந்தது. ஒவ்வொரு கட்டிலும் ஊரின் பெயர், வார்டு எண்கள் எழுதப்பட்டி ருந்ததால் இந்தப் பணம் தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட நோட்டுகள் அனைத்தும், வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் எந்திரத்தை வரவழைத்து எண்ணப்பட்டன. மொத்தம் ரூ.11.51 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.


    கடந்த 2019-ம் ஆண்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட துரைமுருகன் வீடு, கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் குடோன் ஆகிய இடங்களில் இன்று அமலாக்க துறையினர் சோதனையை நடத்தினர்.

    தேர்தலில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    காட்பாடியில் இன்று காலை 4 இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் வீட்டு முன்பு சுமார் 500-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.

    அதேபோன்று அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    • அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
    • சோதனையை அடுத்து வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமைச்சர் துரைமுருகன் வீடு, அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதோடு வேலூரில் எம்.பி. கதிர் ஆனந்த் வசிக்கும் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • ஏரி வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் பானை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த பாப்பான் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய் சாமி. இவர் கணியம்பாடி ஒன்றிய விவசாய சங்க தலைவராக இருந்து வருகிறார்.

    இன்று காலை பழைய பஸ் நிலையம் வந்த ஜெய் சாமி அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு அரை நிர்வாண நிலையில் அமர்ந்து நெற்பயிரை வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயியிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர் காட்டுப்புத்தூர் அடுத்த பாப்பான் தோப்பு கிராமத்தில் உள்ள ஏரி வண்டல் மண்ணை அங்குள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் கடத்திச் சென்று கிணறு போல் வெட்டி அதில் பதுக்கி வைத்துள்ளனர்.

    ஏரி வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் பானை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் வண்டல் மண்ணை பதுக்கி வைப்பதால் விவசாயத்திற்கு வண்டல் மண் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம்.

    இது குறித்து கலெக்டர் அலுவலகம் மற்றும் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

    போலீசாரின் சமாதானத்தை ஏற்காமல் ஜெய் சாமி தொடர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பழைய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டன.
    • பயணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மேலகுப்பம் மலையில் இருந்து மழை நீர் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

    விவசாய நிலங்களில் இருந்த மழை நீர் வடிந்து இன்று காலை ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. அப்பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் மழை நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.

    மழை நீர் வழிந்து செல்ல வழி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    ஏற்கனவே கடந்து 2 நாட்களாக பெய்த மழையில் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறியது. குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டன.

    இதனால் சென்னையில் இருந்து பெங்களூரு மார்க்கமாக வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் வரிசையாக நின்றன.

    பயணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி சாலையை சீரமைத்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • ஸ்டீல் கைப்பிடியை பொருத்தும் பணியில் காகிதப்பட்டறையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.
    • மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் உயிரிழந்தனர்.

    வேலூர் மாவட்டம் மேல்வல்லம் பகுதியில் புதிய வீட்டின் மொட்டை மாடியில் சீலிங் வேலை நடந்து கொண்டிருந்தது. ஸ்டீல் கைப்பிடியை பொருத்தும் பணியில் காகிதப்பட்டறையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    கைப்பிடியை பொருத்தும் பணியின்போது அவர்களுக்கு மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர்.

    ஸ்டீல் கம்பி எதிரே உள்ள மின்கம்பியில் உரசியதில் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் முகேஷ் (24), சதீஷ் (24) பலியாகினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைதானவருக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை.
    • இட ஒதுக்கீடு கொடுத்தால் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என அன்புமணி கூறியுள்ளது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஜங்காலப்பள்ளி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைதானவருக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. எதிர்க்கட்சிகள் செய்வது சில்லித்தனமான வேலை இது.

    இட ஒதுக்கீடு கொடுத்தால் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என அன்புமணி கூறியுள்ளது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×