என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. எம்.பி.யின் கல்லூரியில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு
- கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்றது.
- கல்லூரி சார்ந்த ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாக தகவல்.
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. ஜனவரி 3 ஆம் தேதி சோதனை துவங்கிய நிலையில், 44 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.
எட்டு கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக் கொண்டு துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டு சென்றனர். சோதனையை தொடர்ந்து கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை சார்ந்த ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story






