என் மலர்
தூத்துக்குடி
- நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்.
- பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம்
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர்.
அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அலைமோதியதால் 100 கட்டணம் மற்றும் இலவச தரிசனம் வரிசையில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்த வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
தற்போது கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் அமருவதற்கு போதிய இட வசதிகள் இல்லாததினால் பக்தர்கள் தரிசன வரிசை பகுதியில் மற்றும் நடைபாதைகளில் அமர்ந்திருந்து ஓய்வு எடுத்தனர்.
- தங்க நகை தொலைந்ததையடுத்து அப்பகுதி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
- சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களை வரவழைத்து கடற்கரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சாமி தரிசனம் செய்த வந்த பெண் ஒருவர் கடலில் புனித நீராடும்போது தன்னுடைய 5 சவரன் தங்க நகையை கரையில் தவறவிட்டார்.
தங்க நகை தொலைந்ததையடுத்து இதுகுறித்து அப்பகுதி போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களை வரவழைத்து கடற்கரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கடற்கரையில் தங்க நகையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதலின் முடிவாக தங்க நகை ஒரு பணியாளரின் கைகளில் சிக்கியது. நகையை கண்ட அந்த பெண் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து தங்க நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகையை மீட்டுக்கொடுத்த குழுவினருக்கு அங்கிருந்தோர் பாராட்டுகள் தெரிவித்தனர்.
- பவுர்ணமி என்பதால் நேற்று பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம்.
- வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக் கிழமை)விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் பவுர்ணமி என்பதால் நேற்று வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம் செய்து சென்றனர். அதனால் நேற்றை விட இன்று கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்ட போதிலும் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம்,5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
- இளையராஜாவுக்கும், சண்முக சுந்தரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- போலீசார் கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தை அடுத்த பாலாறுபட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 57). விவசாயி. இவர் கல்மேடு பகுதி நீர்பாசன சங்க தலைவராக இருந்தார்.
நேற்று அவர் பாலாறு பட்டி அருகே உள்ள கல்மேடு செல்லும் கடற்கரையை ஒட்டிய பாதையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து தருவைகுளம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடினார். அப்போது முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான இளையராஜா (47) என்பவர், கம்பால் தாக்கி சண்முக சுந்தரத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பாலாறுபட்டியையும், பட்டின மருதூரையும் இடையில் ஒரு சாலை மட்டுமே பிரிக்கிறது. இந்த 2 கிராமத்திலும் உள்ள விவசாய நிலங்களிலும் அடிக்கடி 2 தரப்பையும் சேர்ந்தவர்களின் ஆடு, மாடுகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதுதொடர்பாக நீர்பாசன சங்க தலைவர் என்ற முறையில் சண்முக சுந்தரம் அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு சென்று வந்துள்ளார். விவசாயிகளுடன் சமரசம் பேசுவது போன்ற செயல்களையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆடு, மாடு மேய்ந்த தகராறில் இளையராஜாவுக்கும், சண்முக சுந்தரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற தனது கன்றுக்குட்டி காணாமல் போனதால் அதனை தேடி சண்முகசுந்தரம் சென்றுள்ளார். அப்போது வழியில் நின்ற இளையராஜா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், ஆத்திரத்தில் கம்பால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தெரிவித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து இளைய ராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் தாசில்தார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நாலு மாவடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து பெங்களூக்கு சென்று செல்போன் கடைக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்கி விட்டு இன்று தூத்துக்குடி வழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது முக்காணி பகுதியில் சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் மணிகண்டன் ஓட்டி வந்த கார் புகுந்தது.
இதில் அதே பகுதியை சேர்ந்த பலவேசம் என்பவரது மனைவி நட்டார் சாந்தி (வயது45), ராஜ்குமார் என்பவரின் மனைவி பார்வதி (40), சித்திரவேல் என்பவரது மனைவி அமராவதி (59) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் சுந்தரம் என்பவரது மனைவி சண்முகத்தாய் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கார் டிரைவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் தாசில்தார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் எப்போதுமே வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
சாலையின் இருபுறமும் தெருக்கள் உள்ளன. எனவே நாங்கள் அடிக்கடி சாலையை கடக்கும் போது அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் தெருவிளக்குகள் இரவு முழுவதும் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் 4 இடங்களில் பேரிகார்டுகள் அமைத்து வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இன்று இரவுக்குள் வேகத்தடை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த விபத்தில் பலியான பார்வதியின் கணவர் ராஜ்குமார் கட்டிட தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ்-1 வகுப்பும், மகன் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் தெருவோரம் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த 3 பெண்கள் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அதிகாலையில் அவர்கள் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
- இன்று பிற்பகல் திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் திருச்செந்தூரில் திரள்வார்கள். பவுர்ணமி தினத்தையொட்டியும் ஏராளமானோர்கள் வருவார்கள். அந்த வகையில் நேற்று பவுர்ணமி தினத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது. பவுர்ணமி தினத்தையொட்டி நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
அதிகாலையில் அவர்கள் திருச்செந்தூர் கடற்கரை மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலுள் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளித்தனர். மேலும் நேற்று குபேர பவுர்ணமியாகும். இதை முன்னிட்டு நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை வரை லட்சக்கணக்கானோர் கோவிலில் நிலா ஒளியில் கடற்கரையில் தங்கினர்.
இன்று காலை அவர்கள் கடற்கரையில் நீராடினர். இன்று பிற்பகல் திருச்செந்தூர் கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 20 அடி தூரத்திற்கு தண்ணீர் உள்வாங்கியது. இதனால் அங்கிருந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அப்போது கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள் பாறைகளின் மீது ஏறி செல்பி எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பாதுகாப்பு கருதி அங்கிருந்து செல்ல பொதுமக்களை அறிவுறுத்தினர்.
- ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் போதைப் பொருள் பறிமுதல்.
- போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் இளந்தரையன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) மேகா, தூத்துக்குடி நகர தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இனிகோ நகர் பகுதியில் ஒரு வீட்டில் ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் என்ற போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். இதனால் போலீசார் நள்ளிரவில் அந்த வீட்டை முற்றுகையிட்டு தீவிர சோதனை நடத்தினர். அங்கு சுமார் 8 கிலோ ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் போதைப் பொருள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் வீட்டில் இருந்த மட்டக்கடையை சேர்ந்த நிர்மல் ராஜ் என்ற நிர்மல் (வயது 29 ), அவரது மனைவி சிவானி (28) ஆகியோர் போதைப்பொருளை பதுக்கியது தெரியவந்தது. தொடர்ந்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் பின்னரே அவர்களுக்கு போதை பொருள் எங்கிருந்து கிடைத்தது? யாரிடம் விற்பதற்காக பதுக்கி வைத்துள்ளனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூ.24 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.
- உயிரிழந்த மாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர்.
- கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் பரவியது.இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமார் 49 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மாரியப்பன் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு, அங்குள்ள உறவினர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரியப்பனின் குடும்பத்தினர் கதறி அழுதனர். மாரியப்பன் உயிரிழந்த தகவல் வானரமுட்டி கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தமாரியப்பனுக்கு கற்பகவள்ளி என்ற மனைவியும், விமலா(11) என்ற மகளும், கதிர் நிலவன்(7) என்ற மகனும் உள்ளனர்.

குவைத்தில் இருந்து கேளரா கொண்டுவரப்பட்ட உயிரிழந்த மாரியப்பன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாரியப்பனின் சடலத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் அவர்களின் இல்லத்திற்கு கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மாரியப்பனின் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
- சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- சுப முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான கூட்டம் அலைமோதியது.
திருச்செந்தூர், ஜூன். 16-
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்தனர்.

அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான திருமணங்கள் இன்று கோவிலில் நடைபெற்றது.
விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான கூட்டம் அலைமோதியதால் சுமார் 5 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் இன்று வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர்.* * *திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
- செம்மறியாடு, கொடி ஆடு என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை தென்மாவட்டத்தில் புகழ் பெற்ற சந்தையாகும். இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். இங்கு சாதாரண நாட்களில் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.
இந்நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் நேற்று காலை முதல் வியாபாரம் தொடங்கியது. இதற்காக வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.9 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. அதேபோல் எடைக்கு ஏற்ப ரூ.33 ஆயிரம் வரை விற்பனையானது. ஜோடி ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம்வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவத்தனர்.
கடந்த ஆண்டு ரூ.6 கோடி விற்பனையான நிலையில் ஆடுகளின் விலை அதிகமாக இருந்ததால் விற்பனை இந்தாண்டு சற்று குறைந்து காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகளிடம் கேட்டபோது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விலை அதிகமாக இருக்கும் என்பதால் இதற்கு முந்தைய வாரங்களில் நடைபெற்ற சந்தைகளில் ஆடுகளை வாங்கியதால் இன்று விற்பனை குறைவாக இருந்தது என தெரிவித்தனர்.
- சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று இரவு 11.30 மணி வரை கடலில் 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் வரை பேரலைகள் உயரமாக எழும்ப வாய்ப்பு இருப்ப தாலும், மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, இன்று கடற்கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடலின் அருகில் செல்லவோ, நடைபயிற்சி மேற்கொள்ளவோ வேண்டாம் எனவும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என கூறிஇருந்தார்.
அதன்படி, இன்று பெரியதாழை கடற்கரை முதல் வேம்பார் வரையிலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. திரேஸ்புரம், பெரியதாழையில் சுமார் 3,600 நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேரடி யாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் இன்று வேலையில்லாமல் இருந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை முதல் கூட்டப்புளி வரையிலும் கடல் அலைகள் அதிக அளவில் எழும்பியதால் அந்த பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமுடன் சென்று வர கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். அந்த பகுதிகளில் மீனவர்கள் இன்று வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றனர்.
- கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
- கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவும் அறிவுத்தல்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளவும் அறிவுத்தல் வழங்கி உள்ளார்.






