என் மலர்
திருவாரூர்
- உண்ணாவிரத போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 300 ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
- காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் ஈவேரா பேசினார்.
கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி, மேநாள் மாவட்டப் பொருளாளர் ஜோன்ஸ் ஐன்ஸ்டீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 300 ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டத்தை அமல் படுத்துவதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது அதில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்து, இதற்கான பிரத்தியேக ஊழியர்கள் நியமனம் செய்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்வில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மேற்கொள்ள வேண்டும்.
கூடுதல் தேவைப்படுகின்ற பணியிடங்களிலும் மாறுதல் பெற அனுமதிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு குறித்த மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நடைபெறாமல் மற்ற பணி மாறுதல், பதிவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.
எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது. முன்னதாக வட்டாரச் செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார். இறுதியில் மாவட்ட துணைச் செயலா ளர் சத்யநாராயணன் நன்றி கூறினார்.
- மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியனார்.
- வீட்டில் பழுதடைந்த சுவிட்ச் போர்டை சரி செய்தார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வினோபாஜி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது49). அலுமினிய கதவு, ஜன்னல் செய்யும் தொழிலாளி.
இவா் நேற்று வீட்டில் பழுதடைந்த சுவிட்ச் போர்டை சரி செய்தாா். அப்ேபாது அவரை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
- பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை தீமிதி தெப்பத் திருவிழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நடைபெற்றது.
காலை முதலே அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. 500 பக்தர்கள் காவடி எடுத்து கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- வருகிற 6-ந்தேதி முதல் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டு குழு செயல்பட உள்ளது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியை தொடர வாய்ப்பு அளிக்கும் பொருட்டு வருகிற 6-ந்தேதி முதல் ஒவ்வொரு அரசு மேல்நிலை பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டு குழு செயல்பட உள்ளது.
இக்குழுவின் உறுப்பினர்க ளாகிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் (கல்வியாளர்), கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அனைவருக்குமான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 3-ம் நாளான நேற்று முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், நாச்சிகுளம், இடும்பாவனம், இடையூர், புத்தகரம் ஆகிய பள்ளிகளுக்கான ஆலோசனை வழங்குதல் குழு கருத்தாளர்களுக்கான பயிற்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.
இப்பயி ற்சியை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபாகரன் மற்றும் மன்னார்குடி வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் தனபாலன் ஆகியோர் முதன்மை கருத்தாளர்களாக கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியில் 125 கருத்தாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் சுரேஷ், அன்புராணி ஆகியோர் செய்து இருந்தனர்.
- அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,
- எதிர்காலத்தில் பேச்சு திறமையால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.
திருத்துறைப்பூண்டி:
தமிழ்நாடு சிறுபான்மை யினர் ஆணையம் சார்பில் திருவாருர் மாவட்ட கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி ராபியம்மாள் அகமது மொய்தீன் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போட்டி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ராபியம்மாள் கல்லூரி செயலாளர் பெரோஷா முன்னிலை வகித்தார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றும் போது:-
அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மாணவர்கள் அதை பயன்படுத்தி மேல்படிப்புகள் படிக்க வேண்டும் என்றார்.
தாட்கோ தலைவர் மதிவா ணன் வாழ்த்துரையாற்றும் போது:-
பேச்சுதிறன் என்பது சிறுவயது முதலே தொடங்க வேண்டும், எதிர்காலத்தில் பேச்சு திறமையால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்றார்.
தொடர்ந்து, போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர் ஆகியோர் பரிசு வழங்கினர்.
பேச்சுப்போட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஹாஜாகனி போட்டியின் நோக்கம் குறித்து பேசினார்.
ராபியம்மாள் கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி, பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார், போட்டி நடுவர்களாக கோமல் தமிழமுதன், அறிவழகன், அமானுல்லா, அஸ்வின் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பேசினர்.
தமிழ் வழி பேச்சுப்போட்டியில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவியும், ஆங்கில வழி பேச்சு போட்டியில் ராபியம்மாள் கல்லூரி மாணவியும் முதல் இடத்தை பிடித்து ரூ.20 ஆயிரம் பரிசுத்தொகை வென்றனர் .
முடிவில் இணை ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் ஹமீது நன்றி கூறினார்.
- என்.எம்.எம். எஸ். தேர்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு.
- மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த பாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியை நிர்மலா அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் தேசிய அளவில் நடைபெற்ற என்.எம்.எம். எஸ். தேர்வில் வெற்றிபெற்ற மாணவி அஜிதாவுக்கும், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றிபெற்ற பிரித்திப்ராஜ், பீர்ஆரிஸ், நவீனா, துர்க்காதேவி, அன்பரசி, கனிகாஸ்ரீ, பவீனா, தீபதர்ஷினி ஆகிய 8 மாணவ- மாணவிகளுக்கும், மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற புத்தக திருவிழா கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவி அஜிதாவுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர் களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப் பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் பட்டதாரி ஆசிரியை நதியா நன்றி கூறினார்.
- மருதங்காவெளி பள்ளியில் பிரச்சார ஊர்தியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள மருதங்காவெளி நடுநிலைப்பள்ளியில் பிரச்சார ஊர்தியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சரஸ்வதி, வட்டார கல்வி அலுவலர்கள் ராமசாமி, சிவகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், ஸ்ரீதரன், அன்புராணி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், பள்ளி தலைமையாசிரியர் திருஞானம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர்.
- சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.
திருவாரூர்:
திருவாரூர் ஜி.ஆர்.டி கார்டனை சேர்ந்தவர் முத்துமீனாட்சி. இவர் தற்போது விழுப்புரம் சர்க்கரை ஆலையின் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே தங்கி உள்ளார்.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த போது நத்தம் புறம்போக்கு இடத்தில் வீட்டு மனைபட்டா வழங்கியதும், அந்த இடத்தை நெடுஞ்சாலைதுறை விரிவாக்க பணிக்காக மீண்டும் அரசிடமே நல்ல விலைக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர். அதில் முத்து மீனாட்சி, நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி, உதவியாளர் கார்த்தி, அடியக்கமங்கலத்தை சேர்ந்த முருகன், முல்லையம்மாள், குமார், சுகுமார், சிவகுமார், சதீஷ்குமார், வினோத்குமார், திருப்பாலியூர் சுகுமாரி ஆகிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று திருவாரூரில் உள்ள முத்து மீனாட்சி வீட்டிற்கு 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அப்போது வீட்டின் வெளி கதவை பூட்டிவிட்டு வீட்டில் இருந்தவர்களை வெளிளே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பல்வேறு அறைகளில் சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.
இதேப்போல் வீட்டு மனை பட்டா முறைகேட்டுக்கு உதவியாக இருந்ததாக கூறி அப்போதைய அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ.வும், தற்போதைய விளமல் வி.ஏ.ஓ.வுமான துர்காராணி என்பவரின் விளமல் சிவன் கோவில் நகரில் உள்ள வீடு மற்றும் அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ. உதவியாளர் கார்த்தி என்பவரது அடியக்கமங்கலத்தில் உள்ள வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி தனி குழுவாக சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேப்போல் தஞ்சாவூரில் உள்ள நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை என்பவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
மேலும் சோதனை நடைபெறும் திருவாரூர் மாவட்டம் 3 அரசு அலுவலர்கள் மற்றும் தஞ்சையில் உள்ள ஒரு அரசு அலுவலர் ஆகிய 4 பேரின் வீடுகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 4அரசு அலுவலர்களின் வீடுகளில் நடந்து வரும் சோதனை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டுதல்கள் வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
- பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.
திருவாரூர்:
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரிக் கனவு-2023" மாவட்டக் கருத்தாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் தி.சாருஸ்ரீ கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
மாணவ, மாணவியர்கள் தங்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டு தல்கள் துறைசார்ந்த வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
இம்முயற்சியின் நோக்கம் 12ஆம் வகுப்பிற்கு பிறகு அவர்களது கல்லூரி படிப்பிற்கு உறுதுணையாக அமையும். அரசு தேர்வாணை யத்தால் நடத்தப்படும் சில தேர்வுகளுக்கும், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.
கல்வி ஒன்றே மாணவர்களது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை அவர்களுக்கு உணர்ந்த வேண்டும்.
கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, அவர்களது பெற்றோர்களின் உழைப்பை மனதிற்கொண்டு சிறப்பாக பயின்று அவர்களின் கல்வி திறனை மேன்மேலும் உயர்த்தி கொள்ள நம் முயற்சிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணை அறிவியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் ஆகிய துறைகளில் உள்ள உயர்கல்விப் படிப்புகள் சார்ந்தும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் இப்படிப்புகள் படிப்பதற்கான வங்கிக டன்கள் பெறுவது குறித்தும் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும் சிறந்த வல்லுநர்களால் வழிகாட்டல் வழங்கப்படவுள்ளது.
இதனை மாணவ, மாணவியர்களிடம் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் எந்த துறையில் சிறப்பாக விளங்கிடலாம் என்பதனை அவர்களின் விருப்பத்திற்கேற்ப அறிந்து அவர்களுக்கு அத்துறையில் கல்விபயிலவும், தங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ளவும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
பொதுத்தேர்வில் ஏதேனும் சில பாடங்களில் தவறவிட்டாலும் கலங்காது துணைத்தேர்வில் நல்ல முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற நாம் உறுதுணையாக இருந்து அவர்கள் உயர்கல்வி பெற்றிட நாம் உதவி வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், வேலுடையார் கல்வி நிறுவனங்கள் நிர்வாகி திரு.தியாகபாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- போட்டிகள் நேற்று தொடங்கி 5 தினங்கள் 9 சுற்றுகளாக நடைபெறுகிறது.
- முதலிடம் பெறுகின்றவர்கள் தேசிய போட்டிக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர்.
திருவாரூர்:
தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மற்றும் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்துகின்ற 52 வது தமிழ்நாடு மாநில அளவிலான மகளிர் சதுரங்க போட்டிகள் திருவாரூர் ராசம்மாள் திருமண அரங்கில் நேற்று (26.4.23) தொடங்கியது.
போட்டிகளில் ஆறு முறை மாநில சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த ஜெ .சரண்யா, ஏசியன் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாவட்டத்தை சேர்ந்த சர்வாணிக்கா, காமன்வெல்த் வெங்கலப் பதக்கம் வென்ற செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த பிரியதர்ஷினி உள்ளிட்ட 24 மாவட்டங்களைச் சார்ந்த 121 பேர் கலந்து கொண்டு விளையாடு கின்றனர்.
போட்டிகள் நேற்று தொடங்கி 5 தினங்கள் 9 சுற்றுகளாக நடைபெறுகிறது.
போட்டிகளில் முதலிடம் பெறுகின்றவர்கள் நான்கு பேர் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு செய்து அனுப்பப்பட உள்ளனர்.
இந்த போட்டிகளின் தொடக்க. விழா திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் எஸ் வி.டி.ஜெ.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சதுரங்க கழக இணைச் செயலாளர் ஆர்.கே.பால குணசேகரன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நாராயணி நிதி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன், திருவாரூர் டாக்டர் பி.செந்தில், திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக தலைவர் என்.சாந்தகுமார், திருவாரூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராஜா, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் கலியபெருமாள், சதுரங்க கழக மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளை முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.
முடிவில் திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் துணைத் தலைவர் என்.முரளிதரன் நன்றிகூறினார்.
- தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.
- கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமயந்தி முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் திலகர் வரவேற்றார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை பேராசிரியர் வெற்றிச்செல்வன் கருத்துரையாற்றினார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், ஜேஸீஸ் தலைவர் செந்தில், வழக்கறிஞர் அரசு தாயுமானவன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு பேசு கையில், மாணவ பருவம் என்பது மகிழ்ச்சியானது மட்டுமல்ல பொறுப்பு மிகுந்ததாகும்.
கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது. அரசு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் போட்டி தேர்வு எழுதவேண்டும்.
அதற்கான மனநிலையை இப்போதே ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
அதற்காக தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும்.
இக்கல்லூரி மேம்பாட்டி ற்காக அரசு மூலம் பல திட்டங்களை செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.
இக்கல்லூரியை சிறப்பு வாய்ந்ததாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் தனியார் கம்பெனிகளில் தேர்வு செய்யப்பட்டதற்கான நியமன உத்தரவை வழங்கி னார்கள்.
மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், பேராசிரியர் அலெக்ஸாண்டர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
பேராசிரியர் யோக பிரகாசம் நன்றி கூறினார்.
பேராசிரியர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
- மன்னார்குடி வட்ட கிளை நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
- எழுத்தாளர்கள் வாசகர்கள் நூலகர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்ட கிளை நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி, கவிஞர் சரஸ்வதி தாயுமானவன், மூத்த வாசகர் யேசுதாஸ் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
நான்கு நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் அமர்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்ட தலைவர் பொன்முடி தலைமையில் எட்டு நூலகர்கள் தாங்கள் சமீபத்தில் படித்த புத்தகங்களை திறனாய்வு செய்தனர்.
இரண்டாவது அமர்வில் தமிழ் ஆசிரியர் நமாமலைவாசன் தலைமையில் டிஜிட்டல் மீடியாக்களால் வாசிப்பு அதிகரித்திருக்கிறதா? குறைந்து இருக்கிறதா ? என்ற வாசிப்பு குறித்த பட்டிமன்றம் நூலக வாசகர்களை கொண்டு நடத்தப்பட்டது.
மூன்றாவது அமர்வாக நூலகர் ஆசைத்தம்பி தலைமையில் கல்வியா ளர்கள் தாங்கள் சமீபத்தில் படித்த நூல்களை திறனாய்வு செய்தனர்.
இறுதி நிகழ்வாக எழுத்தாளர்கள் வாசகர்கள் நூலகர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு மன்னார்குடி நூலகர் அன்பரசு வரவேற்புரை வழங்கினார்.
கூத்தாநல்லூர் நூலகர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஜே.சி.ஐ மன்னை தலைவர் நமாமலைவாசன் தலைமை தாங்கினார். தமிழ் பல்கலைகழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் காமராசு
சிறப்புரையாற்றினார். ஜே.சி.ஐ முன்னாள் மண்டல தலைவர் கோவிந்தராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
முடிவில் மன்னார்குடி நூலகர் ராஜா நன்றி கூறினார்.
நிகழ்வில் மன்னார்குடி வட்ட நூல்கள் ஜே.சி.ஐ உறுப்பினர்கள், வாசகர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மன்னார்குடி கூத்தா நல்லூர் கிளை நூலகங்கள் மற்றும் ஜே.சி.ஐ மன்னை ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.






