search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்கை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
    X

    அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்கை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது.

    அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்கை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

    • மருதங்காவெளி பள்ளியில் பிரச்சார ஊர்தியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி குடியிருப்பு பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள மருதங்காவெளி நடுநிலைப்பள்ளியில் பிரச்சார ஊர்தியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சரஸ்வதி, வட்டார கல்வி அலுவலர்கள் ராமசாமி, சிவகுமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், ஸ்ரீதரன், அன்புராணி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், பள்ளி தலைமையாசிரியர் திருஞானம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×