என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
    • இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக இந்திய கம்யூனிஸ் கட்சியினர் கைவிட்டனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    சுடுகாட்டு சாலையை உரியவர்களிடம் பேசி இடத்தை பெற்று அளந்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வலங்கைமானில் மண்டல வட்டாட்சியர் ஆனந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    இதில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக இந்திய கம்யூனிஸ் கட்சியினர் கைவிட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் முதல் நிலைக் காவலர் கல்யாணசுந்தரம், ஆலங்குடி ரெவின்யு இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் நவீன், பாலசுப்ரமணியம் தாலுக்கா ஆபீஸ் அலுவலர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு ராஜா , ரங்கராஜன், மாவட்ட தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படை யிலே அமலாக்க துறையினால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
    • அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுகிறோம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    தி.மு.க ஆட்சிக்கு வரும் போது பிரச்சினையும் கூடவே வரும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படை யிலே அமலாக்க துறையினால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு ள்ளார்.

    ஆதாரம் இருந்தால் யாரை வேண்டுமானாலும் அமலாக்கத்துறை கைது செய்யலாம். சீல் வைக்கலாம் என்ற அதிகாரத்தை ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இரண்டு மாதத்திற்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும். முகாந்திரம் இருக்கிறது என உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமலாக்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுகிறோம் என முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.

    ஆனால் இதுவரை எந்த வாக்குறுதியையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலை ந்துள்ளதை கண்டித்தும், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாளை (புதன்கிழமை), திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் டி. சி. சமூக சுந்தர், ஒன்றிய செயலாளர் சிங்காரவேல், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் நடராஜன், முத்துப்பேட்டை நகர செயலாளர் அன்பழகன், மற்றும் பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    • சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டம் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது.

    இதற்காக ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பே திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்தார். இன்று காலையிலும் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியை காண வந்திருந்தார்.

    காலை 10 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி மங்கள இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. முதலில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

    இதில் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

    இதன் பிறகு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் 'பேச்சே' என்ற தலைப்பில் புலவர் சண்முக வடிவேல், கவிதா ஜவகர், ராஜா ஆகியோர் பேசினார்கள். 'எழுத்தே' என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசினார்கள்.

    நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்தார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக்கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அமர்ந்து பார்வையிட்டனர்.

    காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 3.30 மணிக்கு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.

    கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், சஞ்சய்சிங் எம்.பி. ஆகிய இருவரும் பீகாரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் செல்கின்றனர். அவர்களுடன் திருச்சி சிவா எம்.பி.யும் செல்கிறார்.

    இதனால் கலைஞர் கோட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மாலை திறக்கப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த விழாவில் நிதிஷ் குமார் திடீரென கலந்து கொள்ளாதது தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
    • முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார்.

    திருவாரூர்:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 7,000 சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது .

    இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தை திறந்து வைக்கிறார். கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    • பழனிசாமி தஞ்சையில் நடந்த தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார்.

    திருவாரூர்:

    தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே செம்மங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது65).

    தச்சு தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தஞ்சையில் நடந்த தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    பின்னர் வலங்கைமான் வழியே தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் கடைவீதியில் சென்ற போது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். விபத்தில் பலியான பழனிசாமிக்கு சுசிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    • ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • 20 பயிற்சி கருத்தாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான வட்டார அளவிலான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வலங்கை மான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பயிற்சியை வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர்கள் சுகந்தி, அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் மாணவர்களின் உடல்நலம், மனநலம், மனநல பிரச்சனைகள், தற்கொலை களை தடுத்தல், கலை மற்றும் பண்பாடு, சிறார் ஆரோ க்கியம் மற்றும் நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் 300 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    20 பயிற்சி கருத்தாளர்கள் ஆசிரியர்க ளுக்கு பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியை கல்வித்துறை இணை இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்து ஆசிரியர்களுடன் கலந்துரை யாடினார்.

    மன்னார்குடி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சிவசுப்பி ரமணியன் பார்வையிட்டார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    • எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனையொட்டி எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோவில் குளத்தில் பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹரமங்கலமாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும்
    • 174 வகையான பாரம்பரிய நெல் ரக அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் 16-வது பாரம்பரிய நெல் திருவிழா ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்று தொடங்கியது.

    இதனை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி உழவர் சந்தை பகுதியில் இருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு நெல் கோட்டை வைத்து மாட்டு வண்டியில் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு விவசாயிகள் ஊர்வலமாக வந்து இத்திருவிழாவில் பங்கேற்றனர்.

    இந்த நெல் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, நாகை, திருச்சி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட விவசாயிகளும் இந்த நெல் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    பாரம்பரிய நெல் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் அரங்கங்கள் அமைக்கப்பட்டு அவற்றை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டனர்.

    நெல் திருவிழாவின் முக்கிய நோக்கமான இயற்கை பாரம்பரிய நெல் ரகங்களை பங்கேற்றுள்ள அனைத்து விவசாயிக ளுக்கும் 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு அவற்றை சாகுபடி செய்து அடுத்த ஆண்டு நான்கு கிலோவாக விவசாயிகள் திருப்பி அளிக்க உள்ளனர். இதன் மூலமாக பாரம்பரிய இயற்கை நெல் ரகங்கள் சுழற்சி முறையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேச்சே, எழுத்தே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
    • பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் பெயரின் நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளது.

    இந்த கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. ஒரு முழு நாள் நிகழ்வாக நடைபெறும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

    விழாவையொட்டி அன்று காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து கவியரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் பங்கேற்று கவிதை வாசிக்கின்றனர்.

    அதன் பிறகு, மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேச்சே, எழுத்தே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. பட்டிமன்றத்திற்கு சாலமன் பாப்பையா நடுவராக இருந்து நடத்துகிறார். இதில் பேச்சே என்ற தலைப்பில் திருவாரூர் சண்முகவடிவேல், கவிதாஜவகர், ராஜா ஆகியோரும் எழுத்தே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகின்றனர்.

    பின்னர் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3.30 மணிக்கு மாலதி லக்ஷ்மன் குழுவினரின் பாட்டரங்கம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கலைஞர் கோட்ட திறப்பு விழா நடைபெற உள்ளது. தயாளு அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் வரவேற்புரை ஆற்றுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர்கள் உருவச் சிலையை திறந்து வைக்கிறார்.

    பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் முத்துவேல் நினைவு நூலகத்தை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாலை சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்குகிறார். நாளை 19-ந்தேதி காலை கலைஞர் கோட்ட திறப்பு விழா ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிடுகிறார்.

    மீண்டும் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி திறப்பு விழா நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து அன்று இரவு மன்னை விரைவு ரெயில் மூலம் சென்னை திரும்புகிறார். இதேபோல் இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் 20-ந்தேதி விமானம் மூலம் திருச்சி வருகின்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருகை தர உள்ளனர்.

    ஹெலிகாப்டர் இறங்கி ஏறுவதற்கு வசதியாக திருவாரூர் வா.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஹெலிபேட் அமைக் கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருகை தரும் பீகார் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அங்கிருந்து கார் மூலம் காட்டூர் சென்று கலைஞர் கோட்ட திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

    அன்று மாலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து பீகார் செல்கின்றனர். கலைஞர் கோட்டை திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டி.ஐ.ஜி ஜெயச்சந்திரன், திருவாரூர் எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இறுதியில் தயாளு அம்மாள் அறக்கட்டளை அறங்காவலர் சம்பத்குமார் நன்றி கூறுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, அவர் பயணிக்கும் வழித்தடங்களில் பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

    • காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி, வருகிற 24-ந் தேதி ஆலங்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி வட்டாரம் மற்றும் அரசினர் மேல்நிலைப்பள்ளி, காட்டூர், திருவாரூர் வட்டாரம் ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்க ளுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை, வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, முழு ரத்த பரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மனநலம் மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ பிரிவிலிருந்து சிறப்பு டாக்டர்களால் ஆலோசனைகள் வழங்கப்படும்.

    இந்த இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரடப்பட்டுள்ளது.
    • பருத்தியில் நோய் தாக்குவதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் நடப்பாண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பருத்தி பயிரடப்பட்டுள்ளது.

    அவ்வாறு பயிரடப்பட்டுள்ள பருத்தியில் தற்போது இலை சிவந்து, காய்ந்து விடுவதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

    இந்நிலையில், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், தொழில்நுட்ப வல்லுநர் கருணாகரன் மற்றும் குடவாசல் வட்டார வேளாண்மை, உழவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயசீலன் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ரவி ஆகியோர் குடவாசல் வட்டாரத்தில் ஒரு விவசாயியின் பருத்தி வயலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    • 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் அன்றைய தினமே படித்து எழுதி பார்க்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகப்பை, பாடக் குறிப்பேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் வேதமணி, ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் பாஸ்கரன், தெய்வ சகாயம், தமிழ்ச்செல்வி, சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கலையாசிரியர் அன்புமணி அனைவரையும் வரவேற்றார்.

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்துகொண்டு புதிதாக சேர்க்கப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் குறிப்பேடுகள் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் அன்றைய தினமே படித்து எழுதி பார்க்க வேண்டும்.

    அவ்வாறு செய்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்பிற்கும் கட்டணம் இல்லாமல் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்.

    தொடர்ந்து, 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1000 கல்வி உதவி தொகையும், அன்றைய தினம் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைக்காக ரூ.1000 மற்றும் புத்தகப்பை, பாட குறிப்பேடுகள், எழுது பொருட்கள், புத்தகங்களை வழங்கினார்.

    முடிவில் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

    இதில் ஆசிரியர்கள் நடராஜன், விஜயகுமார், பாலசுப்பிரமணியன், ஆடின் மெடோனா பிரபாகரன், உமா மகேஸ்வரி, வெற்றிச்செல்வி, ராஜ்குமார், அறிவழகன், அஜிதா கனி, சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி செய்திருந்தார்.

    ×