என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![சாலை விபத்தில் தொழிலாளி பலி சாலை விபத்தில் தொழிலாளி பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/06/19/1901111-f19.webp)
X
சாலை விபத்தில் தொழிலாளி பலி
By
மாலை மலர்19 Jun 2023 9:47 AM GMT (Updated: 19 Jun 2023 10:25 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பழனிசாமி தஞ்சையில் நடந்த தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
- அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார்.
திருவாரூர்:
தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே செம்மங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது65).
தச்சு தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தஞ்சையில் நடந்த தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பின்னர் வலங்கைமான் வழியே தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் கடைவீதியில் சென்ற போது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். விபத்தில் பலியான பழனிசாமிக்கு சுசிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)