search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultants"

    • ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • 20 பயிற்சி கருத்தாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்க ளுக்கான வட்டார அளவிலான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வலங்கை மான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பயிற்சியை வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர்கள் சுகந்தி, அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் மாணவர்களின் உடல்நலம், மனநலம், மனநல பிரச்சனைகள், தற்கொலை களை தடுத்தல், கலை மற்றும் பண்பாடு, சிறார் ஆரோ க்கியம் மற்றும் நல்வாழ்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் 300 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    20 பயிற்சி கருத்தாளர்கள் ஆசிரியர்க ளுக்கு பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியை கல்வித்துறை இணை இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்து ஆசிரியர்களுடன் கலந்துரை யாடினார்.

    மன்னார்குடி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சிவசுப்பி ரமணியன் பார்வையிட்டார்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    ×