என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி, ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24).
    • தற்போது இவர் தனது அண்ணனுக்கு சொந்தமான காரை ஓட்டி வருகிறார்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி, ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்தவர் சந்தனராஜ் மகன் அருண்குமார் (வயது 24). இவர் கடந்த 1 வருடத்திற்கு முன்பு கன்னியாகுமரியில் குட்கா வியாபாரி ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கன்னியாகுமரி போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

    கார் திருட்டு

    தற்போது இவர் தனது அண்ணனுக்கு சொந்தமான காரை ஓட்டி வருகிறார். நேற்று மாலை 3 மணிக்கு அருண்குமார் காரை தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். அப்போது ஒரு காரில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள் காரை திருடி சென்று விட்டனர். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை கார் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஜெயக்குமார் என்பவர் திசையன்விளை தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக ஏர்வாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏர்வாடி போலீசார் திசையன்விளைக்கு சென்று ஜெயக்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் திசையன்விளை மற்றும் ஏர்வாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் இயற்பியல் துறையில் நியூஸ் லெட்டர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது.

    வள்ளியூர்:

    தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம், தேசிய தர மதிப்பீட்டுக்குழு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் திலகேஷ்வர்மா, டாக்டர் புனிதா ரஞ்சிதம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ரத்த தானம் வழங்கினர். ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் பிருந்தா, கிரிஜா, உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் இயற்பியல் துறையில் நியூஸ் லெட்டர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். தெற்குகள்ளிகுளம் தர்ம கர்த்தா டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நியூஸ் லெட்டர் இதழை வெளியிட்டார். அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணை ப்பாளர் புஷ்பராஜ் வாழ்த்தி பேசினார். ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடல் மற்றும் போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க ப்பட்டது. ஏற்பாடுகளை பேரா சிரியர்கள் ராய்சிச் ரெனால்ட், பிருந்தாமலர், ராஜகுமாரி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • மாயாண்டி பெயிண்டிங் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
    • ஷாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    பாளை மார்க்கெட் அருகே செந்தில்நகரை சேர்ந்தவர் மாயாண்டி(வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி(25). இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    நேற்று வழக்கம்போல் மாயாண்டி பெயிண்டிங் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டு கதவில் உள்பக்க தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. மேலும் குழந்தையின் அழுகுரலும் கேட்டுக்கொண்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாயாண்டி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளார். அப்போது ஷாலினி ஜன்னல் கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். உடனே மாயாண்டி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

    தகவல் அறிந்து அங்கு பாளை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ஷாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஷாலினியின் சொந்த ஊர் கன்னியாகுமரி. அங்குள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் மாயாண்டி படித்தபோது அவருக்கும், அதன் அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஷாலினிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    அதன்பின்னர் பாளையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • தொடக்க நிலைய மையத்தில் மாணவ, மாணவிகள் 25,529 பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
    • இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் படித்த 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 11 வட்டாரங்களிலும் தொடக்க நிலை மையம் 1319 ம் (1 முதல் 5-ம் வகுப்பு), உயர் தொடக்க நிலை மையம் 936-ம் (5 முதல் 8 வகுப்பு) ஆக மொத்தம் 2,265 மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையங்களில் தொடக்க நிலைய மையத்தில் மாணவ, மாணவிகள் 25,529 பேரும், உயர் தொடக்க நிலை மையத்தில் மாணவ, மாணவிகள் 18,603 பேரும் என மொத்தம் 48,132 பேர் பயன்பெற்று வருகிறார்கள்.

    தச்சநல்லூர், ஊருடையாள் குடியிருப்பு மற்றும் பாறையடி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மையங்களில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் மாணவர்கள் கற்கும் திறனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவத்ததாவது:-

    கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெ ய்வத ற்காக தன்னார்வலர்களைக் கொண்டு இல்லம் தேடி கல்வி' என்னும் திட்டம் கொண்டு வரப்பெற்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அனைத்து செயல்பாடுகளுக்காக மாவட்டத்தில் திறமை, அர்ப்பணிப்பு, ஆர்வம், சமூக அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் அனுபவம் பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய பண்புகளை பெற்ற ஆசிரியர்களில், கல்வி மாவட்ட அளவில் ஒரு ஆசிரியரும், ஒன்றிய அளவில் 2 ஆசிரியர்களும் இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்காக முழு நேரமாக செயல்பட மாவட்ட அளவினை குழுவின் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.

    இத்திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களை அன்றாடம் சுழற்சி முறையில் மையங்களுக்கு சென்று பார்வையிட்டு கற்கும் குழந்தைகளையும், தன்னார்வலர்களையும் மையங்களில் நடைபெறும் செயல்பாடுகள் குறிப்பிட்டு பாராட்டி உற்சாகப்படுத்துதல் வேண்டும். மேலும் அச்செயல்பாடுகளை மேம்படுத்த தன்னார்வ லர்களுக்கு வேண்டிய ஆலோச னைகளும் வழங்குதல் வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய திறனாய்வு தேர்வில் நெல்லை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் படித்த 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உதவி திட்ட அலுவலர் சிவராஜ், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கி ணைப்பாளர் நம்பிராஜன், வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோ அகஸ்டின், தன்னார்வலர் உமா, நாகலட்சுமி, முருகேஸ்வரி, சத்தியவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டவுன் பாரதியார் தெரு அம்மன் சன்னதி சந்திப்பில் மூடப்படாத சாக்கடை வாறுகால் உள்ளது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பாரதியார் தெரு அம்மன் சன்னதி சந்திப்பில் மூடப்படாத சாக்கடை வாறுகால் உள்ளது. இந்த வழியாக இன்று காலை சென்ற 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் எதிர்பாராத விதமாக அந்தக் குழிக்குள் உள்ளே விழுந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டனர்.

    இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து முதியவரை அதில் ஏற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, சாலை மற்றும் சாக்கடை பராமரிப்புக்காக குழி திறக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் அது மூடப்படாமல் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    இதனால் உயிரிழப்புகள் ஏற்படு வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் பணியா ளர்கள் அங்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முத்துக்குமார் தனியார் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
    • ஓட்டலுக்கு சாப்பிட செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு முத்துக்குமார் சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரை அடுத்த கீழக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). இவருக்கு கவுதமி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். முத்துக்குமார் தனியார் பஸ் ஒன்றில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் ஓட்டலுக்கு சாப்பிட செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக நேற்று கவுதமி தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

    • தீபக் அரசு போட்டி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.
    • கடந்த 23-ந் தேதி தீபக் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் தீபக் (வயது 24). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு அரசு போட்டி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.

    தற்கொலை

    கடந்த 23-ந் தேதி அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தீபக் இறந்தார்.

    இது குறித்து கங்கை கொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு போரட்டங்கள் நடத்தியதன் விளைவாக கழிவு நீரோடை அமைக்கும் பணி நடைபெற்றது.
    • மழைநீர் செல்ல வழி இல்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்ட லத்திற்கு உட்பட்ட 52-வது வார்டு ரெட்டியார்பட்டி சாலையில் ஓடை ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் இடுப்பளவு தேங்கி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடி இருந்தது.

    கடந்த 3 ஆண்டுகளாக இதன் காரணமாக பொது மக்கள் பல்வேறு போரட்டங்கள் நடத்தியதன் விளைவாக ரூ. 95 லட்சம் மதிப்பில் கழிவு நீரோடை அமைக்கும் பணி நடைபெற்றது. அல் மதினா பள்ளிக்கூடம் முதல் நடை பெற்று வந்த பணி தாய்நகர் கடைசியில் ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் காரணமாக திடீரென ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் கரீம் நகர், தாய்நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கழிவு நீரோடை முழுவதும் தண்ணீரால் நிரம்பி சாலை எது, ஓடை எது என தெரியாத நிலை உள்ளது. இதன் காரணமாக ரெட்டியார்பட்டி சாலை ஓடையில் வாகனங்கள் சிக்கி சிரமப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது என பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இங்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் இரு கரைகளிலும் செம்மண் கொண்டு நிரப்பப்படாததால் சாலையும் சேதம் அடைந்து உள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கழிவு நீரோடை அமைத்தும், அது முழுமை பெறாததால் அரசின் நிதி வீணாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

    ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் டவுன் குற்றாலம் சாலையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கழிவு நீரோடை மற்றும் எஸ்.என். ஹைரோடு 2 பக்கங்களிலும் அமைக்கப்பட்ட கழிவு நீரோடையும், திட்டமிட்டு கட்டப்படாததால் பொது மக்களின் வரிப்பணம் விரயம் செய்யப்பட்டது என புகார் எழுந்தது.

    எனவே மாநகராட்சி கமிஷனர் ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை போர்க்கால அடிப்படையில் இடித்து மீதமுள்ள கழிவு நீர் ஓடையை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    • வெள்ளாளன்குளம் பஞ்சாயத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பாப்பாக்குடி யூனியனுக்கு உட்பட்ட வெள்ளாளன்குளம் பஞ்சாயத்துக்கு ரூ. 23.56 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பஞ்சாயத்து தலைவரும், மானூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி தி.மு.க. செயலாளருமான மகாராஜன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் மாரி வண்ணமுத்து, மாரியப்பன், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் பல்லிக்கோ ட்டை செல்லத்து ரை, மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி முத்து, பாப்பாக்குடி ஊராட்சிமன்ற தலைவர்கள் ஆனைக்குட்டி பாண்டியன், சொர்ணா, பாலசுப்பிர மணியன், முப்புடாதி, ஒன்றிய கவுன்சிலர்கள் வளர்மதி, சுப்புலட்சுமி, காசி, முபின், முத்துமாரி, சுபாவாணி, மாவட்ட பிரதிநிதிகள் சிவன்பாண்டியன், அருணாசல பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பூத் ஒன்றுக்கு 20 பேர் நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டது.

    நெல்லை:

    பாளை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் பள்ளமடை பாலமுருகன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, அமைப்பு சாரா தொழிலாளர் அணி சிவந்தி மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் பகுதி செயலாளர்கள் வக்கீல் ஜெனி, திருத்து சின்னத்துரை, சண்முககுமார், காந்தி வெங்கடாசலம், மோகன், மேகை சக்திகுமார், சிந்து முருகன், பாளை தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு , வட்ட செயலார் பாறையடி மணி, வண்ணை கணேசன், பீர் முகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பூத் ஒன்றுக்கு 20 பேர் நியமிப்பது, 8 பேர் கட்சி பொறுப்பிலும், 3 பேர் இளைஞர் பாசறை, 2 பேர் தகவல் தொழில்நுட்ப அணி மற்றவர்கள் அணி பொறுப்பிலும் இருக்குமாறு பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • நெல்லையில் 5.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • ஒருசில இடங்களில் இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகர் மட்டுமல்லாது புறநகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியை ஒட்டி அமைந்துள்ள அணைப்பகுதி கள் என அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடரும் இந்த கோடை மழையால் பொதுமக்க ளும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடுமையான கோடை வெயிலால் அணைகள் வறண்டு போன நிலையில் தற்போது தொடரும் கோடை மழையால் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது என்பதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

    இடி-மின்னல்

    நேற்று மாலையில் இடி-மின்னலுடன் பெய்த கனமழையால் மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாளையில் 7 மில்லி மீட்டரும், நெல்லையில் 5.8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தை பொறுத்த வரை அம்பை, கன்னடியன் பகுதியில் தலா 14 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 18 மில்லிமீட்டரும், பாபநாசம், சேர்வலாறில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நேற்று இரவு வரை ஒருசில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. களக்காடு, சேரன்மகாதேவி, ராதாபுரம், நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கோடை மழை பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் அணை பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக சில நாட்களாக கருப்பாநதி அணை பகுதியில் கனமழை நீடிக்கிறது. நேற்று ராமநதி, கடனாநதி, கருப்பாநதி மற்றும் அடவிநயினார் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை மற்றும் ஆய்க்குடி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.

    இன்று காலை நிலவரப்படி செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 18 மில்லிமீட்டரும், தென்காசியில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. அணைப்ப குதிகளில் அதிகபட்சமாக ராமநதியில் 26 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 21 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 17.4 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று மாலை பலத்தமழை கொட்டியது. பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கிகிடந்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் சற்று தணிந்தது.

    அதிகபட்சமாக கயத்தாறில் 27 மில்லிமீட்டரும், கடம்பூரில் 25 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    சாத்தான்குளம், குலசேக ரப்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், காடல்குடி, வைப்பார் உள்ளிட்ட இடங்களிலும் கோடை மழை பெய்தது. மாநகர பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    • நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39).
    • இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39). இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.

    அன்று மாலை வீடு திரும்பிய ராஜி மகளை மட்டும் வீட்டில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் காரில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த சுப்பிர மணியம் பல இடங் களில் தேடிப் பார்த்தும் ராஜியை காண வில்லை.

    அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச்-ஆப்' ஆகி இருந்தது. எனவே மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சுப்பிரமணியன் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான ராஜியை தேடி வருகிறார்கள்.

    ×