என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
- தீபக் அரசு போட்டி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.
- கடந்த 23-ந் தேதி தீபக் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் தீபக் (வயது 24). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு அரசு போட்டி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.
தற்கொலை
கடந்த 23-ந் தேதி அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தீபக் இறந்தார்.
இது குறித்து கங்கை கொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






