என் மலர்tooltip icon

    தேனி

    • சென்னையில் இருந்து போடி வரை வாரத்தில் மூன்று நாட்கள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் ரெயில்வே துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • போடி மற்றும் தேனி மாவட்ட மக்கள் மற்றும் வியாபாரிகள் மாணவ-மாணவியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனியில் முதன் முதலாக 1909ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்த ரெயில் சேவை 2வது உலகப்போர் காரணமாக ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக தண்டவாளங்கள் அகற்றப்பட்டது.

    பின்னர் 1954 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையாக மாற்றப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பயணிகள் மற்றும் பொருள்கள் ஏற்றிச்செல்லும் பயணிகள் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

    போடி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் எல்லைப் பகுதிகளில் விளையும் ஏலக்காய், இலவம்பஞ்சு, மிளகு, காப்பி, மாங்காய் போன்றவைகள் போடியில் இருந்து மதுரை வரை ரெயிலில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீட்டர்கேஜ் இருப்பு பாதை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அகல ரெயில் இருப்புப் பாதைக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு ரெயில் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது.

    சுமார் ரூ.474 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரையில் இருந்து போடி வரை அகல ரெயில் பாதை பணிகள் முற்றிலும் நிறைவு பெற்று பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள், மற்றும் ரெயில் என்ஜின், பயணியர் பெட்டியுடன் ரெயில் இன்ஜின் சோதனை ஓட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்து தொடங்குவதற்கான அனுமதியும் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

    தற்போது மதுரையில் இருந்து தேனி வரை வந்து செல்லும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து போடி வரை நீட்டிக்கப்படுவதற்கு பலமுறை திட்டமிடப்பட்டு எதிர்பாராத சூழல் காரணமாக ரெயில் போக்குவரத்து தொடங்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

    மேலும் சென்னையில் இருந்து போடி வரை வாரத்தில் மூன்று நாட்கள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் ரெயில்வே துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனால் போடி மற்றும் தேனி மாவட்ட மக்கள் மற்றும் வியாபாரிகள் மாணவ-மாணவியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    இந்நிலையில் தற்போது வருகின்ற 15-ந் தேதி முதல் மதுரையில் இருந்து போடி வரையிலும், போடி-மதுரை வரையிலும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் தினசரி ரெயில்கள் இயக்கப்படுவதற்கான தொடக்க விழா நடைபெறும் என்று தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

    15-ந் தேதி இரவு இந்த சேவையை போடி ரெயில் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் தொடங்கி வைக்கிறார். 16-ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து போடி வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களும், போடி இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 தினங்களில் மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி வழியாக வந்து செல்லும் சிறப்பு பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.

    மத்திய இணை அமைச்சர் முருகன் போடியில் இந்த ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பின்பு போடிக்கு மதுரை மற்றும் சென்னையில் இருந்து ரயில் போக்குவரத்து தொடங்குவதால் பொதுமக்கள், வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் ரெயில் போக்குவரத்து சென்னை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் போடியில் இருந்து ஏற்றுமதியாகும் ஏலக்காய், மாம்பழம், காப்பி, மிளகு, இலவம்பஞ்சு, போன்றவைகளின் ஏற்றுமதி அதிகரித்து ஏற்றுமதி செலவு குறையும் என்றும் சென்னையில் இருந்து வந்து செல்லும் ரெயில்கள் கரூர் சேலம் ஈரோடு வழியாக வருவதால் ஆடை வகைகள் மஞ்சள் மற்றும் உற்பத்தி பொருள்கள் இறக்குமதி அதிகரித்து இறக்குமதி செலவு குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

    • கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் யானைகளுக்கான உணவு வழங்கும் பணி நடைபெற்றது.
    • 3 யானைகளுக்கும் தினமும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் கடந்த மாதம் 27-ந்தேதி புகுந்த அரிசி கொம்பனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டும் முடியாததால் ஊட்டி முதுமலை வனப்பகுதியில் இருந்து உதயன், சுயம்பு, அரிசி ராஜா ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த யானைகள் கடந்த 1 வாரமாக கம்பம் வனச்சரக அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    நேற்று அதிகாலை அரிசி கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தியதும் அதனை லாரியில் ஏற்ற கும்கிகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அரிசி கொம்பன் யானை பிடிபட்டதால் 3 கும்கிகளை சொந்த ஊருக்கு அனுப்ப வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

    உதயன் என்ற கும்கி நேற்று இரவு முதுமலை வனக்காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று அரிசி ராஜா மற்றும் சுயம்பு ஆகிய 2 கும்கிகள் தெப்பக்காடு செல்கின்றன.

    இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், அரிசி கொம்பனை பிடிக்க வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில் அதனை அனுப்ப கும்கிகள் பெரிதும் உதவியாக இருந்தன.

    இந்த 3 யானைகளுக்கும் தினமும் காலையில் சீமைப்புல் உணவாக வழங்கப்படும். அதன் பின் கேப்பை, அரிசி கலந்த மாவு, கவளமாக வழங்கப்படும். அதன் பின் கரும்பு, வாழைப்பழம், பலாப்பழம் போன்றவை வழங்கப்படும்.

    மாலையில் சத்துமாவு கொண்ட கவளம் வழங்கப்பட்டது. கம்பம் வனத்துறை அலுவலகத்தில் இருந்து தினந்தோறும் யானைகளுக்கான உணவு வழங்கும் பணி நடைபெற்றது. 3 யானைகளுக்கும் தினமும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அரிசி கொம்பன் ஆபரேசன் நிறைவடைந்ததால் ஏற்கனவே ஒரு கும்கி சென்று விட்ட நிலையில் மற்ற 2 கும்கிகளும் இன்று செல்ல உள்ளன என்றனர்.

    இதனிடையே அரிசி கொம்பன் யானை சேதப்படுத்திய விளைநிலங்களின் மதிப்பு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட உள்ளது. முன்னாள் எம்.பி. தங்கதமிழ்செல்வனுக்கு சொந்தமான வாழைத்தோட்டம், சண்முகா நதி அணையை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான வாழைத் தோட்டம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை அரிசி கொம்பன் சேதப்படுத்தியது. கடந்த 1 வாரமாக வனத்துறை அறிவுறுத்தலின்படி வேலைக்கு செல்லாமல் இருந்த தோட்டத்தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சேதமடைந்த பயிர்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் இன்று அல்லது நாளை சேத மதிப்பீட்டை ஆய்வு செய்து அதன் அறிக்கையை மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
    • முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    இந்திய உணவுக்கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது. பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லாததால் தானியங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன.

    இதனால் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் அதனை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை.

    இதனால் தானியங்கள் வீணாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.

    இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும். இங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.

    ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும். தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்கு வரத்து செலவு குறையும்.

    மேலும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுத்திய ஆண்டி பட்டி பேரூராட்சிக்கும் பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கி கலெக்டர் வழங்கினார்.
    • நெகிழிப் பயன்பாட்டினைத் தவிர்த்து, பசுமை முதன்மையாளர் விருதிற்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    தேனி:

    ஒவ்ெவாரு ஆண்டும் ஜூன் 5-ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    இதனை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாது காப்பதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த வருடம் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுத்திய ஆண்டி பட்டி பேரூராட்சிக்கும், பசுமை போர்வை அதிகரிக்க அதிகளவில் களப்பணி ஆற்றிய சோலைக்குள் கூடல் என்ற தனியார் தொண்டு நிறுவனத்திற்கும் பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கி மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    இது குறித்து பேசிய அவர், நமது அன்றாட வாழ்வில் முடிந்தவரையில் ஒருமுறைப் பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இனிவரும் காலங்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நெகிழிப் பயன்பாட்டினைத் தவிர்த்து, பசுமை முதன்மை யாளர் விருதிற்கு விண்ண ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக உலக சுற்றுச்சூழல் தின உறுதி மொழியினை கலெக்டர் தலைமையில் அனைத்துறை அலுவலர்களும் ஏற்று க்கொண்டனர்.

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்து பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு விளம்பர எல்.இ.டி.திரையினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மேனகா மில்ஸ் நிறுவனத்தின் சார்பில் தப்புக்குண்டு பகுதியில் 515 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.
    • வேலை பார்ப்பதற்காக மகன் கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம்(வயது60). இவரது மனைவி காளியம்மாள்(55). இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    சிவானந்தமும், அவரது மனைவியும் ஊரணி மற்றும் கண்மாயில் மீன் பிடித்து விற்பனை செய்து தங்களது பிள்ளைகளை படிக்க வைத்தனர். வறுமை காரணமாக தங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்த சிவானந்தம், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கீழக்கரையில் ஒருவரது விவசாய நிலத்தில் தங்கியிருந்தார்.

    தங்களது கஷ்டத்தை பற்றி கவலைப்படாமல் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தனர். இதனால் சிவானந்தத்தின் மகன் சுரேஷ் கண்ணன் மரைன் என்ஜினீயரிங் படித்து முடித்தார். அவர் தற்போது வளைகுடா பகுதியில் உள்ள கப்பல் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்தில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார்.

    அதன்மூலம் தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த சுரேஷ் கண்ணன், வீடு இல்லாமல் தவித்த பெற்றோருக்கு புதிதாக வீடும் கட்டி கொடுத்துள்ளார். மேலும் தனது தாய்-தந்தையை வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் உழைத்து சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சிவானந்தம் மற்றும் அவரது மனைவி தொடர்ந்து மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    வயதான காலத்திலும் உழைக்கும் தங்களின் தாய்-தந்தையின் கஷ்டத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் எளிதாக மீன் விற்பனை செய்வதற்காகவும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள காரை சுரேஷ் கண்ணன் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே தற்போது சிவானந்தம் மீன்களை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருகிறார்.

    மீன் விற்பனை எங்களது குடும்ப தொழில். எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் மீன் விற்க செல்லாமல், வீட்டிலேயே இருக்குமாறு எனது மகன் கூறினார். ஆனால் கடைசி வரை தொழிலை விடாமல் உழைக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்.

    நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே மீன்களை ஏற்றி கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வறுமை நிலையிலும் கடினமாக உழைத்து படிக்க வைத்து ஆளாக்கிய தாய்-தந்தையின் வலியை உணர்ந்து, அவர்கள் எளிதாக சென்று வேலை பார்ப்பதற்காக மகன் சொகுசு கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    • மனைவி கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டதால் அவர் விஷம் குடித்து மயங்கியவரை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது33). இவர் அபிராமி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன் தேனி மாவட்ட கோர்ட்டில் சுகாதார தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    கடன் வாங்கி மது குடித்ததால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் சம்பள பணத்தை வீட்டில் கொடுக்காததால் அபிராமி கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கார்த்திகேயன் விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சமயன் (26). இவர் வேலைக்கு செல்லாமல் ஆதரவின்றி சுற்றி திரிந்து ள்ளார். இந்த நிலையில் காஞ்சிமரத்துறை- வேளங்காடு வனத்துறை சாலையில் உள்ள தோட்ட த்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குமுளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே சீலையம்பட்டியை சேர்ந்தவர் பார்சியாபானு (வயது20). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழ கத்தில் முதலாம் ஆண்டு தொலைதூர கல்வி படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற அவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    போடி அம்மாபட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (35). இவர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை தேடி வருகின்றனர்.

    • பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
    • மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரை போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் அங்கு உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் தெற்கு ஆசாரி தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது80). போடி விஸ்வாசபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (35). இவர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தார்.

    போடி-மீனாட்சிபுரம் சாலையில் ேமாட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடந்து சென்ற பொன்னுச்சாமி மீது பைக் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பொன்னுச்சாமி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    மேலும் இந்த விபத்தில் கணேசனும் காயம் அடைந்து டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கேரளாவில் பிடிக்கப்பட்ட போது மீண்டும் காட்டில் விடப்பட்டது
    • 2 மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறை பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் ஆண் காட்டு யானை கடந்த ஏப்ரல் மாதம் மயக்க ஊசி செலுத்தி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.

    தேக்கடி, இரவங்கலாறு, ஹைவேவிஸ், குமுளி, லோயர்கேம்ப் பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் கடந்த மே மாதம் 27-ந்தேதி கம்பம் நகருக்குள் புகுந்தது.

    அப்போது சாலையோரம் இருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை அடித்து நொறுக்கி வலம் வந்ததைப் பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியார் கோவில் பகுதியை அடைந்தது.

    அதன் பிறகு சண்முகா நதி அணையைச் சுற்றியே வலம் வந்த அரிசி கொம்பன் அங்குள்ள பெருமாள் கோவில் பகுதியில் முகாமிட்டது. யானையை பிடிக்க வனத்துறையினர் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வந்தனர். மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் யானை சமத ளப்பகுதியில் வந்தால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும் என காத்திருந்தனர்.

    இதற்காக ஊட்டி தெப்பக்காடு பகுதியில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா, உதயன் ஆகிய 3 கும்கி யானைகளும் வர வழைக்கப்பட்டு கம்பம் வனச்சரக அலுவலகத்தில் தயார் நிலையில் நிறுத்தப் பட்டு இருந்தன.

    ஸ்கெட்ச் போட்டு தூக்கினர்

    கடந்த 2 நாட்களாக சண்முகா நதி அணையை ஒட்டியுள்ள சின்ன ஓவு ளாபுரம், எரசக்க நாயக்கனூர் காப்புக்காடு பகுதிகளிலேயே சுற்றி வந்தது. இதனால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நேற்று இரவே வனத்துறையினர் தயார் நிலைக்கு வந்தனர்.

    இதுகுறித்து உத்தமபாளை யம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சின்ன ஓவுளாபுரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். மின்வாரிய அதிகாரிகளுக்கும் முன் கூட்டியே தக வல் தெரிவிக்கப்பட்டு ஆனைமலையான்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன் பட்டி, சின்ன ஓவுளாபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டது.

    இரவு 11.30 மணியளவில் சண்முகாநதி பெருமாள் கோவிலில் இருந்து தனியார் பட்டா நிலத்துக்கு அரிசி கொம்பன் யானை நடந்து வந்த போது அதன் மீது மருத்துவக்குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். இந்த மயக்க ஊசி யானையின் உடல் பாகங்களை சில மணி நேரங்கள் செயல் இழக்கச் செய்து அதனை அசைவற்ற நிலையில் வைத்திருக்கும் என மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.

    மயக்க ஊசி செலுத்திய பிறகு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அரிசி கொம்பன் அங்கும் இங்கும் நடந்து பின்னர் கீழே விழுந்தது. அதனைத் தொடர்ந்து யாைனயை ஏற்றுவதற்கு லாரி சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    மேலும் கம்பம் வனச்சரக அலுவலகத்தில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அரிசி கொம்பன் யானையை லாரியில் ஏற்றினர். இப்பகுதியில் பெரும்பாலான கிராமங்கள் இருப்பதால் மின் வயர்கள் தாழ்வாக செல்லும் வகையில் உள்ளது.

    மிக உயரமான லாரி யானையை ஏற்றிச் செல்லும் போது மின்சாரம் தாக்கி அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவே யானை நகரை விட்டு வெளியேறும் வரை மின் வினியோகம் நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய அரிசி கொம்பன் ஆபரேசன் அதிகாலை 5 மணி அளவில் வெற்றிகரமாக முடிவு பெற்றது.

    கடந்த 1 வாரமாக சுருளிப்பட்டி, காமய கவுண்டன்பட்டி, கம்பம், ராயப்பன்பட்டி, ஆனை மலையான்பட்டி ஆகிய பகுதி மக்களை தூங்க விடாமல் செய்த அரிசி கொம்பன் பிடிபட்டதால் மக்கள் நிம்மதியடைந்தனர். யானை ஏற்றிச் செல்லப் பட்ட லாரிக்கு முன்னும் பின்னும் 30-க்கும் மேற்பட்ட வனத்துறை வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனை சாலையின் இரு புறமும் ஏராளமான மக்கள் நின்று ஆர்வமுடன் பார்த்தனர்.

    தடை உத்தரவு வாபஸ்

    இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1 வாரமாக யானை நடமாட்டத்தால் கம்பம், சுருளி அருவி, காமயகவுண்டன்பட்டி, சின்ன ஓவுளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடை உத்தரவு இன்று முதல் வாபஸ் பெறப்பட்டதால் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பினர்.

    • சூப்பர்வைசர் வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்து திருப்பி தராமல் கொலை மிரட்டலும் விடுத்த வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தம பாளையம் வடக்குரத வீதியை சேர்ந்தவர் முத்துக்கருப்பையா மகன் முத்துகார்த்தி(37). இவர் பி.இ., படித்துவிட்டு சின்னமனூரில் உரக்கடை வைத்துள்ளார். இவரது நண்பர் கோவிந்தன்ப ட்டிைய சேர்ந்த முத்துக்கும ரேசன்(40). இவர் அப்பகுதி யில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாள ராக வேலைபார்த்து வருகிறார்.

    இவர் முத்துகார்த்தியிடம் டாஸ்மாக்கில் மாவட்ட சூப்பர்வைசர் வேலை வாங்கி தர ரூ.10 லட்சம் செலவாகும். ஆனால் நண்பர் என்பதால் ரூ.8 லட்சம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனைதொடர்ந்து முத்துகார்த்தி தனது மனைவி உமா வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்தை முத்துக்குமரேசன் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

    ஆனால் அதன்பின்னர் உறுதியளித்தபடி வேலை வாங்கிதரவில்லை. இது குறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்க வில்லை. மேலும் பணத்தை திருப்பிதரமுடியாது. வேலையும் வாங்கி தர முடியாது என கூறி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து முத்துகார்த்தி உத்தம பாளையம் போலீஸ்நிலை யத்தில் புகார் செய்தார்.

    மேலும் கோர்ட்டிலும் முறையிட்டுள்ளார்.அத ன்பேரில் உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜ ய்ஆனந்த் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் பிச்சை என்ற வீராச்சாமி (வயது88). இவருடைய மகன்கள் மற்றும் மகள் ஆகியோருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கோவில்களுக்கு சென்று வந்த அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர்.

    ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் கங்காதேவி (வயது19). இவர் க.விலக்கு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்ப வில்லை. இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 15 நாட்களாக மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற சிறுவர்கள் 3 பேர்களும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசவில்லை.
    • போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு 3 சிறுவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று பல்வேறு கோணங்களில் அங்குள்ள போலீசார் உதவியுடன் தேடினர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜக்காள் பட்டி ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் பளியர்இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களான சீனி மகன் பட்டவராயன் (வயது 16), வேல்முருகன் மகன் ஞானவேல் (15), ரவி மகன் தமிழரசன் (14) ஆகிய 3 சிறுவர்களையும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 2 பேர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதிக்கு இட்லி கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளனர்.

    அவர்களது பெற்றோர்களிடம் சிறுவர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி வந்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற சிறுவர்கள் 3 பேர்களும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசவில்லை.

    இதையடுத்து வேலைக்காக அழைத்துச் சென்ற உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களை பெற்றோர்கள் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால் ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், ராஜதானி இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரஹ்மான், தலைமைக்காவலர் தங்கப்பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறுவர்களை மீட்க மத்திய பிரதேசத்திற்கு விரைந்தனர்.

    போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு 3 சிறுவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று பல்வேறு கோணங்களில் அங்குள்ள போலீசார் உதவியுடன் தேடினர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்திலிருந்து 340 கி.மீ. தூரத்தில் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 3 சிறுவர்களும் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்று மீட்டனர். இதையடுத்து ஆண்டிபட்டி கோர்ட்டில் குழந்தைகளை ஆஜர்படுத்தி அதன் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் மாயமான சிறுவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தங்களுக்கு படிப்பு அறிவு இல்லை என்றும், இட்லி கடை வேலைக்காக சென்று அங்கு வேலை பிடிக்காமல் தாங்களாகவே வெளியேறி சென்றதாகவும்,

    பின்னர் ஆழ்துளை கிணறு தோண்டும் பணிக்காக லாரியுடன் வந்த தமிழ்நாடு தொழிலாளர்களுடன் சேர்ந்து இடம் பெயர்ந்ததும் தெரிய வந்தது. 3 சிறுவர்களையும் விைரந்து மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

    ×