search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கம்பம் மெட்டு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி மான்கறி சமைத்தவர் கைது
    X

    கைது செய்யப்பட்ட பாபு

    கம்பம் மெட்டு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி மான்கறி சமைத்தவர் கைது

    • தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
    • வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கயிறு மற்றும் பிற உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கம்பம்:

    தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டுப்பகுதியில் மான் இறைச்சி பதுக்கி வைத்திருப்பதாக குமுளி வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ மான் கறி மற்றும் குளிர்சாத பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ மான் கறியையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

    மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கயிறு மற்றும் பிற உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாபுவின் தோட்டத்தில் சோதனை நடத்தியபோது கள்ளச்சாராயம் காய்ச்சியதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து கலால்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பாபு மீது குமுளி வனத்துறையினர் மற்றும் கலால்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×