என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கம்பம் மெட்டு அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி மான்கறி சமைத்தவர் கைது
- தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
- வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கயிறு மற்றும் பிற உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
கம்பம்:
தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டுப்பகுதியில் மான் இறைச்சி பதுக்கி வைத்திருப்பதாக குமுளி வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி தனிப்படையினர் சம்பவத்தன்று இரவு சென்னாகுளம் நடையிடத்து பாபு என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ மான் கறி மற்றும் குளிர்சாத பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ மான் கறியையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கயிறு மற்றும் பிற உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாபுவின் தோட்டத்தில் சோதனை நடத்தியபோது கள்ளச்சாராயம் காய்ச்சியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து கலால்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பாபு மீது குமுளி வனத்துறையினர் மற்றும் கலால்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்